Posted in Uncategorized

வெள்ளை வானில் மக்களை பிடிக்கும் இராணுவம்

வெள்ளை வானில் மக்களை பிடிக்கும் இராணுவம்

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், வெள்ளைவான் கலாசாரம் தலைத்தூக்குமென கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போது பிரசாரம் செய்யப்பட்டது.

அதற்காக முதலைக்கண்ணீர் வடித்தனர். ஊடகவியலாளர் சந்திப்பில் படம் காட்டப்பட்டது.

முன்னாள் சுகாதார அமைச்சரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பங்குபற்றிய இருவர் சிறையில் உள்ளனர்.

பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் அவரசகாலச் சட்டத்தை நிறைவேற்றிக்கொள்வதற்கான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

உண்மையால், வெள்ளைவான் கலாசாரத்துக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே தலைமை வகிக்கின்றார். என்ன? கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள முடியாமல் வீடுகளிலேயே

இருக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியை ஏற்றுவதற்கு படையினர் வெள்ளை வான்களிலேயே செல்கின்றனர்.

அவ்வாறு வெள்ளைவான் கலாசாரத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே மாற்றியுள்ளார். அவ்வாறு வெள்ளைவான்களில் சென்று தடுப்பூசியை ஏற்றாவிடின், வீடுகளுக்குள்ளே முடங்கியிருப்போரின் நிலைமை என்னவாகியிருக்கும் என்றும் வினவினார்.

    Posted in இலங்கை செய்திகள்

    வெள்ளை வானில் முன்னாள் போராளிகள் – சிங்கள படையால் கடத்தல்

    வெள்ளை வானில் முன்னாள் போராளிகள் – சிங்கள படையால் கடத்தல்

    இலங்கை வன்னி பகுதியில் புனர்வாழ்வு பெற்று வசித்து வந்த மூன்று

    அங்கவீன முற்ற போராளிகள் சிங்கள படையால் கைது செய்யப் பட்டுள்ளனர்

    இவர்கள் புலிகளின் ஆயுதங்கள் ,மற்றும்ச சீருடைகள் வைத்திருந்தனர் என்ற குற்ற சாட்டில் வெள்ளை வானில் கடத்தி செல்ல பட்டுள்ளனர்

    ஊரடங்கு வேளை வீடிற்கு சிவில் உடையில் வருகை தந்த சிங்கள இராணுவத்தினர்

    இவர்களை கடத்தி சென்றுள்ளதாக அவர்கள் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்

    உறவுகள் வெளியில் நடமாட முடியாத நிலையில் வீட்டுக்குள் முடங்கிய வண்ணம் உள்ளனர்

    வெளியில் தெரியவராத நிலையில் கடத்தல்கள் ,மற்றும் கைதுகள் பரவலாக இடம்பெற்று வருகிறது


    முள்ளி வாய்க்கள் நினைவு தினத்தை முன் வைத்து போலி குற்ற சாட்டுக்களில் முன்னாள் போராளிக பழிவாங்க படுவதாக தெரிவிக்க படுகிறது

    வெள்ளை வானில்
    வெள்ளை வானில்