Tag: விபத்தில் மரணம்
மகாராஷ்டிராவின் துணை முதல்வர் விமான விபத்தில் மரணம்
மகாராஷ்டிராவின் துணை முதல்வர் விமான விபத்தில் மரணம்
இந்தியாவின் மகாராஷ்டிராவின் துணை முதல்வர் விமான விபத்தில் மரணம்
இந்தியாவின் மேற்கு மாநிலமான மகாராஷ்டிரா
இந்தியாவின் மேற்கு மாநிலமான மகாராஷ்டிராவின் துணை முதல்வர் அஜித் பவார் புதன்கிழமை தனது வாடகை விமானம்
தீப்பிடித்து எரிந்ததில் கொல்லப்பட்டதாக தொலைக்காட்சி சேனல்கள் தெரிவித்தன.
திறந்தவெளியில் சிதறிக் கிடந்த விமானத்தின் எரியும் இடிபாடுகளில் இருந்து புகை எழுவதை வீடியோ காட்டுகிறது.
இந்தியாவின் நிதித் தலைநகரான மும்பையிலிருந்து பயணித்த பவாரின் விமானம், மாநிலத்தின் பாராமதி நகரில் அவசரமாக தரையிறங்க முயன்றதாக ஊடகங்கள் தெரிவித்தன.
மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் பலி
மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் பலி
கடவத்த, ராகம வீதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (21) இரவு பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடவத்த, மேல் கரகஹமுல பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் விடுதியில் தங்கியிருந்த நிலையில், குறித்த நபர் தனியாக மது அருந்தியுள்ளார்.
அவர் தங்கியிருந்த அறைக்கு பின்னால் உள்ள பால்கனியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கடவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இத்தாலியில் இலங்கையர் விபத்தில் மரணம்
இத்தாலியில் இலங்கையர் விபத்தில் மரணம்
இத்தாலியில் கடந்த சனிக்கிழமை வீதி விபத்தில் சிக்கி .
இலங்கையை சேர்ந்த 18வயது வாலிபர் பலியாகியுள்ளார் .
மோட்டார் சைக்கிள் கார் மோதி சிதறியதில் ,இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது .
விபத்து தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன .
கிளிநொச்சியில் கற்க வந்த மாணவி – விபத்தில் மரணம்
இலங்கை
கிளிநொச்சியில் கற்க வந்த மாணவி – விபத்தில் மரணம்
கிளிநொச்சி – ஊற்றுப்புலம் கிராமத்தில் இருந்து உயர்தரம் கற்பதற்கான அனுமதிக்கு, கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு வருகை தந்த மாணவியே, இவ்வாறு விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி – ஊற்றுப்புலம் பாடசாலையில் க.பொ.த சாதாரண தரம் கல்வி கற்ற மாணவிகள் மூவர், உயர்தர கல்விக்காக, கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு
அனுமதி பெறுவதற்காக பாடசாலைக்கு வருகை தந்தனர்.
இதன் போது, ஏ9 வீதியில் மேற்கு பக்கத்திலிருந்து பாடசாலை பக்கமாக உள்ள மஞ்சல் கடவையில் வீதியை கடக்க முற்பட்ட போது, ஏ9 வீதியில் பயணித்த பட்டா ரக வாகனம் மாணவிகள் கடந்து செல்வதற்காக நிறுத்தியது.
இதன் பின் வந்த மின்சார சபை ஒப்பந்தகாரருடைய ஹன்ரர் ரக வாகனமும் நிறுத்தியிருந்த போது, பின்னால் வந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ், ஹன்ரர் ரக வாகனத்தை மோதியதில், ஹன்ரர் வாகனம் பட்டாவுடன், மோதி குறித்த வாகனங்கள் இரண்டும் மாணவிகள் மீது மோதியுள்ளன.
இதன்போது சம்பவ இடத்திலயே, திருவாசகம் மதுசாளினி (வயது 17) என்ற மாணவி உயிரிழந்துள்ளதுடன், மற்றொரு மாணவி காயமடைந்துள்ளார்.
குறித்த மாணவியின் தந்தை, சைக்கிளில், நாளாந்தம் ஊற்றுப்புலத்தில் இருந்து கிளிநொச்சிக்கு விறகு வெட்டி விற்பனை செய்யும் தொழிலாளி என்பதுடன், மிகவும் வறுமைக்குட்பட்ட நிலையில் தனது மகளை உயர்தரத்துக்கு கற்பித்து அனுப்பிய நிலையில், முதல் நாளே இப்பெரும் சோகம் நிகழ்ந்துள்ளது.
சம்பவம் தொடர்பில், கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த விபத்தை அடுத்து, சிவில் சமூக அமைப்பினர், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பெற்றோர்கள், மாணவர்கள் என பல்லும் இணைந்து, கவனயீர்ப்புப் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்
வீதி ஒழுங்குகளை கடைபிடிக்க வேண்டிய பொலிஸார் உரிய காலத்தில் கடமையில் இருப்பதில்லை என்றும் வாகன சாரதிகள் விழிப்புணர்வின்றி வாகனங்களைச் செலுத்துதல் உள்ளிட்ட பல விடயங்களை கண்டித்து, குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.










