Tag: விடுதலைப்புலிகள்
பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிரான சட்டப்போராட்டம் குறித்து டெய்லி மெயில் செய்தி
பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிரான சட்டப்போராட்டம் குறித்து டெய்லி மெயில் செய்தி
பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை எதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து வரும் சட்டப் போராட்டம் குறித்து,
செய்திக்குறிப்பொன்றினை வெளியிட்டுள்ள டெய்லி மெயில் பத்திரிகை, தடையினை மீளாய்வு செய்யுமாறு உள்துறை அமைச்சர் ப்ரீதி பட்டேலிற்கு விசேட தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது தெரிவித்துள்ளது.
2000ம் ஆண்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட சுயாதீன அமைப்பான தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் இந்த உத்தரவை வழங்கியுள்ளதாக டெய்லி மெயில் தெரிவித்துள்ளது.
மேலும் அச்செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
இலங்கையில் 1978 இல் உருவாகிய இந்த பிரிவினைவாத அமைப்பு தற்கொலை அங்கியை உருவாக்கியது என சர்வதேச அளவில் கருதப்படுகின்றது.
தமிழீழ விடுதலைப்புலிகள் என்ற இந்த அமைப்பை 2001 இல் பிரிட்டன் தடை செய்தது.
எனினும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்ற இந்த அமைப்பு தடைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளது.
விடுதலைப்புலிகள் தற்போது பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எனினும் பிரிட்டனில் பயங்கரவாதம் குறித்து ஆய்வு செய்துவரும் கூட்டு பயங்கரவாத ஆய்வு நிலையம் விடுதலைப்புலிகள் பயங்கரவாதத்தினை இன்னமும் கைவிடவில்லை என்பதால் தடை தொடரவேண்டும் என தெரிவித்துள்ளது.
விடுதலைப்புலிகளிற்கு எதிரான தடையை நீடிப்பதற்கான காரணங்களில் குறைபாடுகள் உள்ளதால் உள்துறை அமைச்சர் தடை குறித்து மீளாய்வு செய்யவேண்டும் என சுயாதீன அமைப்பான தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
தடையை நீக்குவதற்காக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மேல்முறையீட்டு நீதிமன்றத்திலும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
நாங்கள் சுயாதீன அமைப்பான தடைசெய்யப்பட்ட அமைப்புகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்கின்றோம் என குறிப்பிட்டுள்ள அவர் அதுவரை விடுதலைப்புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பாகவே விளங்கும் எனவும் டெய்லி மெயில் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறுவர்களை படையில் சேர்த்த அடேல் பாலசிங்கம் -கைது செய்ய கோரும் இலங்கை
இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகள் தமது மண் மீட்பு போரின் பொழுது தமது இராணுவ படை பிரிவில் சிறார் போராளிகள் அறுபது விகிதம் பேரை ஆளும் இலங்கை சோஷலிச
இராணுவத்திற்கும் ,அரசுக்கும் எதிராக பயங்கரவாத போராடடத்தை நடத்தினர் என இலங்கை தெரிவிக்கிறது
புலிகள் ஆட்சேர்ப்பு
இவ்வாறு புலிகள் படையில் ஆட்களை சேர்ந்தவர்களை உடனே கைது செய்து விசாரிக்க வேண்டும் என்கிறது ,
தற்போது ஐநா மனித உரிமை அவையில் வெளியான அறிக்கையில் இலங்கைக்கு முற்றும் எதிரானது எனவும் ,இது பிரிவினை வாதிகளான புலிகளுக்கு சார்பான ஒன்றாக உள்ளதாக அது குற்றம் சுமத்தியுள்ளது
மக்களை கொல்லவில்லை
இறுதிப் போரில் சிங்கள இராணுவம் மக்களில் ஒருவரை கூட படுகொலை புரியவில்லை எனவும் அத்தனை கொலைகளையும் புலி பயங்கரவாதிகளே செய்தனர் என்கிறது
இல்லாத விடுதலை புலிகள் மீது விசாரணை
இல்லாத விடுதலை புலிகள் மீது விசாரணைகளை கோரும் இலங்கை அரசு தாம் போரில் எட்டாயிரம் பேரை கொன்றோம்
என்றது ,அப்படி என்றால் அந்த கொலை குற்றத்திற்கு விசாரணை எப்பொழுது..?
சிங்கள அரசின் கைக்கூலிகள்
சிங்கள அரசின் கைக்கூலிகளாக புலம் பெயர் நாடுகளில் சில எம்பிகளும் பேசிவருகின்றனர் ,எனினும் இந்த கூச்சல்களுக்கு
அப்பால் ஐநா போரில் பாதிக்க பட்ட மக்களுக்கு உரிய தீர்வினை பெற்று தர வேண்டும் என கோரி வருகின்றமை சிங்கள அரசை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
அடேல் பாலசிங்கம் கைது
அடேல் பாலசிங்கத்தை கைது செய்து விசாரிப்பதன் மூலம் ,புலிகள் மீதான முழுமையான சேறடிப்பை நடத்தலாம் என்பது சிங்களத்தின் திட்டமாக உள்ளது






