Tag: ராஜித
வெனிசுலா மீதான அமெரிக்காவின் நடவடிக்கையை அங்கீகரிக்க முடியாது: ராஜித
வெனிசுலா மீதான அமெரிக்காவின் நடவடிக்கையை அங்கீகரிக்க முடியாது: ராஜித
வெனிசுலா மீதான அமெரிக்காவின் நடவடிக்கையை அங்கீகரிக்க முடியாது: ராஜித வெனிசுலாவை ஆக்கிரமிப்பதற்கான அமெரிக்காவின் நடவடிக்கையை
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே
யாராலும் அங்கீகரிக்க முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கேவின் முகாமின் முக்கிய உறுப்பினர் ஒருவர் இன்று தெரிவித்தார்.
“அமெரிக்காவின் இத்தகைய நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியாது. இது தொடர்ந்தால், எந்த நாடும் விருப்பப்படி மற்றொரு நாடு மீது
படையெடுக்கலாம்,” என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன ஒரு ஊடக சந்திப்பில் கூறினார்.
வெனிசுலாவின் உள்நாட்டுப் பிரச்சினை
இருப்பினும், வெனிசுலாவின் உள்நாட்டுப் பிரச்சினைகள் தற்போதைய நெருக்கடிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.
“வெனிசுலா தீவிர சீர்திருத்தங்களில் கவனம் செலுத்தியிருக்கக்கூடாது,” என்று அவர் கூறினார்.
“மாறாக, கடுமையான சோசலிசத்தை விட சமூக ஜனநாயகத்தை கடைப்பிடிக்கும் சீனா போன்ற நாடுகள் எடுத்த பாதையை அது பின்பற்றியிருக்க வேண்டும்.”
நிலையற்ற தன்மை மற்றும் வெளிப்புற தலையீட்டைத் தவிர்க்க சமநிலையான பொருளாதார மற்றும் அரசியல் சீர்திருத்தங்கள் அவசியம் என்று சேனாரத்ன வலியுறுத்தினார்.
ராஜித பிணையில் செல்ல அனுமதி
ராஜித பிணையில் செல்லஅனுமதி
ராஜித பிணையில் செல்ல அனுமதி ,ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் .
கொழும்பு நீதவான் நீதிமன்றம் Colombo Magistrate’s Court
ராஜித சேனாரத்னவை பிணையில் செல்ல கொழும்பு நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அதன்படி, சந்தேக நபரை 50,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 2 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்க
உத்தரவிட்ட நீதவான், சந்தேக நபரை வெளிநாடு செல்வதற்கு தடை விதித்தும் உத்தரவிட்டார்.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் Bribery and Corruption Commission officials
இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் சந்தேக நபரின் சட்டத்தரணிகள்
முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ்.போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தார்.
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, புதுக்கடை நீதவான் நீதிமன்றத்திற்கு
இன்று (09) காலை சிறைச்சாலை அதிகாரிகளால், அழைத்து வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
ராஜித விளக்கமறியிலில்
ராஜித விளக்கமறியிலில்
ராஜித விளக்கமறியிலில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் ஆஜரான
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் இன்று (29) அவர் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நீதிபதியின் உத்தரவின்படி
நீதிபதியின் உத்தரவின்படி, ராஜித சேனாரத்ன கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் வரை விளக்கமறியலில் வைக்கப்படவுள்ளார்.
பிடியாணையை எதிர்த்து ராஜித மனு தாக்கல்
பிடியாணையை எதிர்த்து ராஜித மனு தாக்கல்
பிடியாணையை எதிர்த்து ராஜித மனு தாக்கல் தம்மை கைது செய்வதற்காக கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையை இடைநிறுத்த
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன
உத்தரவிடக் கோரி முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, தாக்கல் செய்த திருத்த மனுவை விசாரணைக்கு
எடுப்பதற்காக கொழும்பு மேல் நீதிமன்றத்தால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்காக பிறப்பிக்கப்பட்ட பிடியாணையை தற்காலிகமாக நிறுத்தி
வைக்க இடைக்கால இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று அவரது சட்டத்தரணிகள் கோரிய
இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைப்பாணை
போதிலும், உத்தரவைப் பிறப்பிக்காத மேல் நீதிமன்றம், பிரதிவாதியான இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைப்பாணை மாத்திரம் விடுப்பதாக தெரிவித்துள்ளது.
சந்தேகநபரான ராஜித சேனாரத்னவிற்கு நாளை (29) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்து விடுக்கப்பட்டுள்ள
அழைப்பாணைக்கு அமைய நாளை அவர் கட்டாயம் அந்த நீதிமன்றில் முன்னிலையாவார் என சந்தேகநபர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கலிங்க இந்ததிஸ்ஸ தெரிவித்தார்.
பின்னர் மனுவை செப்டம்பர் மாதம் 10 ஆம் திகதி விசாரணைக்கு அழைக்க திகதியிடப்பட்டது.
கைது செய்யப்படவுள்ள ராஜித
கைது செய்யப்படவுள்ள ராஜித
கைது செய்யப்படவுள்ள ராஜித ,முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இலஞ்ச வழக்கில் சந்தேக நபராகப் பெயரிடப்பட்டு கைது செய்யப்படவுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.
ஊழல் குற்றச்சாட்டில் கைது
ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி லியனகே நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்தப்பட்டபோது, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள் இவ்வாறு தெரிவித்தனர்.
அமைச்சர் ராஜித சேனாரத்ன
சம்பவம் தொடர்பில் விடயத்திற்கு பொறுப்பான அப்போதைய அமைச்சர் ராஜித சேனாரத்னவை குறித்த வழக்கில் சந்தேக நபராகப் பெயரிட்டு கைது செய்யவிருப்பதாக அவர் இதன்போது கூறினார்.
ஊழல் குற்றச்சாட்டில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் உபாலி
லியனகே, இன்று கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி ஜயதுங்க முன் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.
மாப்புள்ள ஊழல் கொடி கட்டி பறந்த சிங்க முத்து என இலக்கை வாழ் மக்கள் அறிந்தது உண்மை என்பது இப்பொழுது அம்பலமாகியுள்ளது .
ராஜித சேனாரத்னவுக்கு கொரோனா வைரஸ்
ராஜித சேனாரத்னவுக்கு கொரோனா வைரஸ்
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுக்கு கொரோனா வைரஸ்
தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவருக்கு நடத்தப்பட்ட ரெபிட் அன்டீஜன் பரிசோதனையில், கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவுடன், கடந்த சில தினங்களாக
நெருங்கி பழகியவர்கள், தங்களை தாங்களாகவே சுய தனிமையில் ஈடுபடுத்திக்கொண்டுள்ளனர் என்று அறியமுடிகின்றது
ராஜிதவுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு
ராஜிதவுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு
வௌ்ளை வேன் தொடர்பான ஊடக சந்திப்புடன் தொடர்புடைய வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் அரச
மருந்தகக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன், அவர்கள் இருவரும் பிணை வழங்கப்பட்டுள்ளதுடன், அவர்கள்
வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டு கடவுச்சீட்டினை நீதிமன்றில் ஒப்படைக்குமாறும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.





















