Tag: ரணிலின்
ரணிலின் 16 6 மில்லியன் முறைகேடு வழக்கு இன்று விசாரணை
ரணிலின் 16 6 மில்லியன் முறைகேடு வழக்கு இன்று விசாரணை
ரணிலின் 16 6 மில்லியன் முறைகேடு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.
தனியார் வெளிநாட்டு பயணத்திற்காக
தனியார் வெளிநாட்டு பயணத்திற்காக ரூ.16.6 மில்லியன் பொது நிதியை தவறாகப் பயன்படுத்தியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
மீது தொடரப்பட்ட வழக்கு இன்று பிற்பகல் 1.30 மணிக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
முன்னாள் ஜனாதிபதி விக்கிரமசிங்க
தனியார் வெளிநாட்டு பயணத்திற்காக பொது நிதியைப் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் ஜனாதிபதி விக்கிரமசிங்க தற்போது ஜாமீனில் உள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏகநாயக்கவும் சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ளார்.
இந்த விவகாரம் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) ஏற்கனவே விரிவான விசாரணையை மேற்கொண்டுள்ளது.
ரணிலின் வீட்டுக்குத் தீ
ரணிலின் வீட்டுக்குத் தீ
ரணிலின் வீட்டுக்குத் தீ ,ஜூலை 09, 2022 அன்று கொள்ளுப்பிட்டியில் உள்ள ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டை அழித்த தாக்குதல் மற்றும் தீயணைப்புப் படையினரின் பணிக்கு இடையூறு விளைவித்ததாக
விசாரணையில் சந்தேகிக்கப்படும் இளைஞர் விவகார துணை அமைச்சர் எரங்க குணசேகர, மார்ச் 26 அன்று குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன் முன்னிலையாகத் தவறிவிட்டார்.
உடல்நலக் குறைபாடுகள் காரணமாக குணசேகரனால் ஆஜராக முடியவில்லை என்று அவரது சட்டத்தரணி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
மேலும் பல சந்தேக நபர்களும் முன்னிலையாக இயலாமையைக் குறிப்பிட்டனர்.
இதற்கு பதிலளித்த நீதவான் நான்கு சந்தேக நபர்களுக்கு பிடியாணை பிறப்பித்ததுடன், அடுத்த விசாரணையின் போது குணசேகரவை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார். முன்னாள் பாராளுமன்ற
உறுப்பினர் ஜே.சி.ரங்கா, அன்ட்ரூ ஐவோன் பெரேரா, ரைகம் பதரகே மஞ்சு, வெத்தமுனிகே ஷெரின் விக்கிரமசிங்க, தில்ருக் மதுஷங்க, அஷான் சந்தீப, அன்வர் அலி மற்றும் கோரலகே இந்திக பிரசாத் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
ரணிலின் பாதுகாப்பு தொடர்பில் வௌியான தகவல்
ரணிலின் பாதுகாப்பு தொடர்பில் வௌியான தகவல்
ரணிலின் பாதுகாப்பு தொடர்பில் வௌியான தகவல் ,முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக
வெளியாகியுள்ள தகவல் முற்றிலும் பொய்யானவை என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையின் 50 அதிகாரிகள் உட்பட பாதுகாப்பு தரப்பினர்
தொடர்ந்தும் செயற்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் ‘அத தெரண’
வினவியதற்கு பதிலளிக்கும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்படவுள்ள அதிகாரிகளின் எண்ணிக்கை விரைவில் தீர்மானிக்கப்பட்டு நிறுவப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவை ஸ்தாபிப்பதற்கு தேவையான அதிகாரிகளின்
எண்ணிக்கை தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ரணிலின் கூட்டத்தில் ரவையுடன் இளைஞன் கைது
ரணிலின் கூட்டத்தில் ரவையுடன் இளைஞன் கைது
ரணிலின் கூட்டத்தில் ரவையுடன் இளைஞன் கைது ,மட்டக்களப்பில், ஜனாதிபதி ரணில் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ரி 56 ரக துப்பாக்கி ரவை உடன் சென்ற இளைஞன் ஒருவரை ஜனாதிபதி பாதுகாப்பு படையினர் ஞாயிற்றுக்கிழமை (08) கைது செய்துள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள கிரான் கோரகளிமடு பிரதேசத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு வருகை தருபவர்களை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் சோதனையிட்டு அனுப்பிக் கொண்டிருந்தனர்.
இதன் போது கூட்டத்திற்கு சென்ற இளைஞன் ஒருவரை சோதனையிடும் போது அவரின் உடமையிலிருந்து ரி 56 ரக துப்பாக்கி ரவை ஒன்றை கண்டுபிடித்து மீட்டதையடுத்து அவரை கைது செய்தனர்
இதில் கைது செய்யப்பட்டவர் வாகரை வம்மிவெட்டுவான் வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய கடற்தொழில் ஈடுபட்டு வருபவர் எனவும் இவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி போலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

















