மாற்றுத்திறனாளிகளுக்கான பேருந்து சேவை ஆரம்பம்
Posted in இலங்கை செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கான பேருந்து சேவை ஆரம்பம்

மாற்றுத்திறனாளிகளுக்கான பேருந்து சேவை ஆரம்பம்

மாற்றுத்திறனாளிகளுக்கான பேருந்து சேவை ஆரம்பம் ,மாற்றுத்திறனாளிகளுக்கான தாழ்தள முன்னுரிமைப் பேருந்து சேவை நாளை தொடங்குகிறது

மாற்றுத்திறனாளிகளுக்கான தாழ்தள முன்னுரிமைப் பேருந்து சேவை நாளை (21) மக்கும்புர பல்முனை மையத்திலிருந்து (MMC) தொடங்கும் என

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

அனைவருக்கும் சம வாய்ப்புகளை உறுதிசெய்து, மனித மாண்பைப் பாதுகாக்கும் அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

மேலும் இது ‘தூய்மையான இலங்கை’ திட்டத்தின் ஒரு பகுதியாகும். இந்த முயற்சிக்கு மொத்தம் ரூ. 430 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஊடகங்களிடம் பேசிய இலங்கை மெட்ரோ போக்குவரத்து லிமிடெட் நிறுவனத்தின் பிரதம இயக்க அதிகாரி சானுக ஜயங்க, முதற்கட்டமாக 10 நவீன, குளிரூட்டப்பட்ட தாழ்தளப் பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறினார்.

இந்தப் பேருந்துகள் சக்கர நாற்காலி பயன்படுத்துவோர் எளிதாக வந்து செல்லும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு பேருந்திலும் 33 இருக்கைகள் உட்பட 80 பயணிகள் வரை பயணிக்க முடியும் என்றும்,

சக்கர நாற்காலி பயன்படுத்துவோருக்கு ஆதரவளிக்கும் வகையில் சிறப்புப் பாதுகாப்பு அம்சங்கள்

சக்கர நாற்காலி பயன்படுத்துவோருக்கு ஆதரவளிக்கும் வகையில் சிறப்புப் பாதுகாப்பு அம்சங்கள் பொருத்தப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

தொடக்கத்தில், இந்தச் சேவையானது மக்கும்புரவிலிருந்து பெட்டா மற்றும் கடவத்தை வரை, கொழும்பில் உள்ள மகாரகம அபேக்ஷா மருத்துவமனை

மற்றும் தேசிய மருத்துவமனை போன்ற முக்கிய சுகாதார நிறுவனங்களை உள்ளடக்கி இயக்கப்படும்.

மேலும், இந்தச் சேவையை இயக்குவதற்காக இலங்கை போக்குவரத்துச் சபையிலிருந்து (SLTB) தேர்ந்தெடுக்கப்பட்ட 28 ஓட்டுநர்களுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றும் பிரதம இயக்க அதிகாரி தெரிவித்தார்.