Tag: பெரியபந்தன் பகுதியில்
பெரியபந்தன் பகுதியில் காதலர்கள் சடலமாக மீட்பு
பெரியபந்தன் பகுதியில் காதலர்கள் சடலமாக மீட்பு
கிளிநொச்சி பெரியபந்தன் பகுதியில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இளைஞர் ஒருவரும், யுவதி ஒருவருமே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி பரந்தன் குமரபுரம் பகுதியைச் சேர்ந்த இளைஞரும், இரத்தினபுரம் கிராமத்தைச் சேர்ந்த யுவதியுமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில நாட்களாக இருவரையும் காணவில்லை என அவரவர் குடும்பத்தினர் தேடியுள்ளர். இந்த நிலையில் பெரியபரந்தன் பகுதியிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது.
இதனை தொடர்ந்தே இன்று (10) காலை சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
சடலமாக மீட்கப்பட்ட யுவதி கடந்த சில நாட்களுக்கு முன் பட்டதாரி நியமனம் பெற்றவர் என்றும் இளைஞர் இலங்கை மின்சார
சபையில் ஒப்பந்தப் பணியில் ஈடுப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலதி விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார மேற்கொண்டு வருகின்றனர்..






