Tag: பிரிட்டனில் மக்களுக்குள் புகுந்தகார் பலர்காயம்
பிரிட்டனில் மக்களுக்குள் புகுந்தகார் பலர்காயம்
பிரிட்டனில் மக்களுக்குள் புகுந்தகார் பலர்காயம்
பிரிட்டனில் மக்களுக்குள் புகுந்தகார் பலர்காயம் என பிரித்தானிய செய்திகள் தெரிவிக்கின்றன .
லண்டன் புறநகர் பகுதியாக விளங்கும் லீவர் பூல் பகுதியில் உதைப்பந்தாட்ட வெற்றி நிகழ்வை கொண்டாடிக் கொண்டிருந்த மக்கள் கூட்டத்திற்குள் வேகமாக பயணித்த கார் ஒன்று நுழைந்துள்ளது.
இந்த கார் நுழைந்ததை அடுத்து டசினுக்கு மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 20க்கு மேல் இருக்கலாம் என தெரிய வருகிறது.
லிவர்பூலில் மக்களுக்குள் காரை செலுத்தி தாக்குதல்
மக்களுக்குள் காரை செலுத்திச் சென்றவர் 53 வயது உடைய நபர் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானியா போலீசார் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சம்பவம் திட்டமிடப்பட்ட ஒரு பயங்கரவாத தாக்குதலா அல்லது விபத்தா என்பது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உதைபந்தாட்டத்தை வெற்றிகரமாகக் கொண்டாடிக் கொண்டிருந்த ,அந்த உதை பந்தாட்ட ரசிகர்கள் நின்ற பகுதியில், இந்த கார் நுழைந்து தாக்குதலை நடத்தியது பெருமது விலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த தினம் திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியா மக்கள் மத்தியில் பரபரப்பு
இந்த விடயம் தற்பொழுது பிரித்தானியாவை மக்கள் மத்தியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது
ஒரு வயதானவர் மற்றும் மூன்று சிறுவர்கள் காரின் கீழே நசியுண்டபடி கிடந்ததாகவும் ,அந்த காட்சிகள் தெரிவித்த சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
- தனது பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த முடியாது என ஈரான்

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக பத்துக்கும் குறைவான கப்பல்களே கடந்து சென்றன

- ஆறு கப்பல்கள் ஹோர்முஸ் ஜலசந்தியை கடக்க முயற்சி

- இலங்கை யாத்ரீகர்களுக்கு இலவச விசா

- புத்தளம் கொழும்பு வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம்










