Tag: பிரபாகரனின் அரசியல் விஞ்ஞானத்தின்
பிரபாகரனின் அரசியல் விஞ்ஞானத்தின் அடிப்படைகள்” என்ற நூல்
தெல்தோட்டையில் வெளியீடு
தெல்தோட்டையில் வெளியீடு
குறிஞ்சி வெளியீட்டில் தெல்தோட்டை கலாநிதி க.பிரபாகரனின் “அரசியல் விஞ்ஞானத்தின் அடிப்படைகள்” என்ற உயர்தர புதிய
பாடத்திட்டத்திற்கு அமைவான நூல் வெளியீடு தெல்தோட்டையில் நடைபெற்றது.
இந் நூல் வெளியீட்டு விழாவில் சமைய தவைவர்கள் அரசியல்வாதிகள் பல்கலைகழக விரிவுரையாளர்கள்
பாடசாலைகளின் அதிபர்கள் அசிரியர்கள் மாணவர்கள் பெற்றோர்கள் உட்பட புத்திஜீவிகளும் நலன் விரும்பிகள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
உலகளாவிய ரீதியிலும் இலங்கையிலும் உயர்தர வகுப்பில் பல்கலைகழக மட்டங்களில் அரசறிவியல் ஒரு பாடமாக
கற்பொரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. மனிதன் ஒரு அரசியல் பிராணி என்ற வகையில் கல்விக்கு மாத்திரம் அன்றி நடைமுறை வாழக்கைக்கும் அரசியல் அறிவு அவசியப்படுகின்றது
இலங்கையை பொருத்த வரையில் தமிழ்மொழி மூலமான அரசியல் நூல்கள் மிக அறிதாகவே காணப்படுகின்றது சில நூல்கள் கடினமானமொழி நடையிலும் மிகைப்படுதப்பட்டதாகவும்
காணப்படுகின்றன. பெரும்பாலனோர் இவற்றை வாசித்து பொருளறிந்துக் கொள்ள சிரமபடுகின்றனர். இவ்வாறான நிலையில்
அரசியல் கற்பவர்கள் இலகுவில் கற்றுக் கொள்ள இந்த நூல் வெளியீடு செய்யப்ட்டுள்ளது
அரசறிவியலில் 20 வருட அனுபவம் கொண்ட கலாநிதி க.பிரபாகரின் வண்ணத்தின் வெளியீடு செய்த இந்த புத்தகம்
உயர்தர மாணவர்களுக்கும் பல்கலைகழக வெளிவாரி பட்டப்படிப்பு மாணவர்களுக்கும் சட்ட மாணவர்களுக்கும்
முதுமாணி மாணவர்களுக்கும் அரசறிவியலை கற்ற விரும்பும் அனைவக்கும் உதவியாக இருக்கும்.






