Tag: பாலியல் துஷ்பிரயோகம்
பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் கைது
பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் கைது
60 வயதுடைய பெண்ணொருவரைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை, வீட்டிலிருந்தவர்கள் கட்டி வைத்த சம்பவம் ஒன்று றம்புக்கன பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தையடுத்து குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளதாக றம்புக்கன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் றம்புக்கன பொலிஸ் பிரிவில் கடமையிலிருந்த பொலிஸ் சர்ஜன்ட் ஆவார்.
- இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஹிஸ்புல்லா நாடாளுமன்ற உறுப்பினர்by நிருபர் காவலன்
- இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லாby நிருபர் காவலன்
- ஈரான் மீதான போர் மீண்டும் தொடங்கும் என 62 சதவீத இஸ்ரேலியர்கள் கருதுகின்றனர்by நிருபர் காவலன்
- ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லைby நிருபர் காவலன்
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சுby நிருபர் காவலன்
இளம் யுவதி கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம்
இளம் யுவதி கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம்
கடுகன்னாவ பொத்தபிட்டிய பகுதியில் 18 வயதுடைய யுவதி கடத்தப்பட்டு நான்கு நபர்களால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என கடுகன்னாவ பொலிஸார் தெரிவித்தனர்.
லங்காதீப செய்தியின்படி, முச்சக்கர வண்டியில் வந்த சந்தேகநபர்கள் ஹதரலியத்த புத்தர் சிலைக்கு அருகில் வைத்து குறித்த யுவதியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.
சம்பவத்தில் ஒரு சந்தேகநபர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், மற்ற மூவரும் முச்சக்கர வண்டிக்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும் பாதிக்கப்பட்ட பெண் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இளம் யுவதி கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம்
மேலும், சந்தேக நபர்கள் ஏதோவொரு போதைப்பொருளின் தாக்கத்தில் இருந்ததாக அந்த பெண் மேலும் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பெண் மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களுள் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், ஏனையோரை கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கடுகன்னாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
4 வருடங்களாக மூவரால் 10 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்
4 வருடங்களாக மூவரால் 10 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் வசித்து வரும், பத்து வயது சிறுமி ஒருவர் ,மூவரால் நான்கு வருடங்களாக ,பாலியல் துஷ்பிரயோகம் செய்ய பட்டு வந்துள்ளார் .
சம்பவ தினம் அன்று ,பாடசாலைக்கு சென்ற மாணவி ,தனக்கு நிகழ்ந்த விடயத்தை ,தனது வகுப்பாசிரியரிடம் கூறி கதறியுள்ளார் .
உண்மை தன்மையை கண்டறிந்து விசாரணை நடத்திய டீச்சர் ,
சிறுவர் நன்னடத்தை பிரிவிற்கு தெரியப்படுத்தியுள்ளார் .
4 வருடங்களாக மூவரால் 10 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்
விரைந்து வந்த போலீசார் துஷ்பிரயோகம் செய்ய பட்ட சிறுமியிடம், வாக்குமூலம் பெற்று ,அதிரடி வேட்டையில் இறங்கினர் .
குறித்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய 16 வயது சகோதரன் ,தாயின் இரண்டாவது கணவர் .மற்றும் உறவினரான 56 வயது நபர் ஆகியோர் கைது செய்ய பட்டுள்ளனர் .
சிறுமிக்கு நிகழ்ந்த நான்கு வருட பாலியல் துஷ்பிரயோகம் ,பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுளளது .













