Tag: பயணக்கட்டுப்பாடு
பயணக்கட்டுப்பாடு நீக்கப்படும்- அறிவிப்பு
பயணக்கட்டுப்பாடு நீக்கப்படும்- அறிவிப்பு
மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடுகள், ஒக்டோபர் மாதம்31ஆம் திகதி அதிகாலை 4 மணிவரையிலும் அமுலில் இருக்குமென ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு ஒக்டோபர் 31 ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும்
என்று கொவிட்-19 தொற்றுப் பரவலைத் தடுக்கும் செயலணியின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 19ஆம் திகதி வரை நீடிப்பு
மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 19ஆம் திகதி வரை நீடிப்பு
இலங்கையில் கடந்த 14 நாட்களாக அமுலில் இருந்த பயணக்கட்டுப்பாடு சில தளர்வுகளுடன் நாளை முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இருப்பினும் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு மேலும் இரண்டு வாரங்களுக்கு அமுலில் இருக்கும் என்று சுகாதார சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தனவின் கையொப்பத்துடன் இன்று (04) பிற்பகல் வெளியிடப்பட்டுள்ள புதிய சுகாதார வழிகாட்டல் கோவையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் சில கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்றும் அதில் குறிப்பிபடப்பட்டுள்ளது.
பயணக்கட்டுப்பாட்டை நீக்குவது குறித்து சில பேச்சுவார்த்தைகள் கடந்த காலங்களில் இடம்பெற்றன. அதன ;அடிப்படையிலேயே இந்தத் தீர்மானங்கள் எட்டப்பட்டன.
பொதுப் போக்குவரத்து சேவைகளில் ஆசன எண்ணிக்கையில் 50 வீதமானோருக்கு மாத்திரம் பயணிக்க முடியும்
மேல் மாகாணத்தில், ஆசன எண்ணிக்கையில் 30 வீதமானோர் மாத்திரம் பயணிக்க முடியும்
தனியார்/ வாடகை வாகனங்கள் மற்றும் முச்சக்கரவண்டிகளில் ஆசன எண்ணிக்கைக்கேற்ப பயணிகளை ஏற்றிச் செல்ல அனுமதி.
திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதியில்லை, எவ்வாறாயினும் மணமகன் மற்றும் மணமகள் உள்ளிட்ட 10 பேரின் பங்குபற்றலுடன் பதிவுத் திருமணத்தை நடத்த முடியும்.
ஒருவர் உயிரிழந்தால், சடலத்தை பொறுப்பேற்று 24 மணித்தியாலங்களில் இறுதிச் சடங்குகளை முன்னெடுக்க வேண்டும், இறுதிக்கிரியைகளில் 15 பேர் மாத்திரமே கலந்துகொள்ள முடியும்
செயலமர்வு, மகாநாடு, வர்த்தக குறி வெளியீடு ஆகிய நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்கு 25 பேருக்கு இனுமதி
ஆடைத்தொழிற்சாலை உள்ளிட்ட தொழிற்சாலைகளை நடத்துவதற்கு அனுமதி.
நிதி நிறுவனங்கள் ஆகக்குறைந்த ஊழியர்களுடன் செயல்பட அனுமதி: எந்த சந்தர்ப்பத்திலும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பத்துக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
திரையரங்குகள், பூங்காக்கள், கடற்கரைகள், நீச்சல் தடாகங்கள், மதுபானசாலைகள், கெசினோ மற்றும் இரவுநேர களியாட்ட விடுதிகள், சூதாட்ட நிலையங்களை திறப்பதற்கு அனுமதியில்லை.
மசாஜ் நிலையங்களை திறக்க அனுமதி
திறந்த வெளி சந்தை வாராந்த சந்தை உள்ளூராட்சி மன்றங்களின் வலுவான கட்டுப்பாடுகளுடன் இடமபெற முடியும்.
பொருளாதார மத்திய நிலையங்கள் மொத்த வர்த்தக நடவடிக்கைகளுக்காக மாத்திரம் திறக்க முடியும்.
ஜவுளி கடைகள் ,தொடர்பாடல் நிலையங்கள் முதலானவற்றுக்கு அனுமதி
இன்றிரவு பத்து மணி முதல் மீண்டும் பயணக்கட்டுப்பாடு
இன்றிரவு பத்து மணி முதல் மீண்டும் பயணக்கட்டுப்பாடு
கடந்த மூன்று தினங்கள் விலகிக் கொள்ளப்பட்ட பயணக்கட்டுப்பாடு மீண்டும் இன்றிரவு பத்து மணியில் இருந்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி வரை அமுவ்படுத்தப்படவுள்ளது.
கொவிட்-19 வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த மே மாதம் 21 ஆம்திகதி தொடக்கம் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்ட இந்த பயணக்கட்டுப்பாடு நேற்று முன்தினம் அதிகாரை 4.00 மணிக்கு தளர்த்தப்பட்டது..
இதேவேளை ,தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ,பதில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இவர்கள் தொடர்பிலான குற்றம் உறுதி செய்யப்படும் நபர்களுக்கு 10,000 ரூபா அபராதம் அல்லது 6 மாத சிறைத் தண்டனை அல்லது இந்த இரு தண்டனைகளும் வழங்கப்படும்.
தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறி செயல்பட்டதான குற்றச்சாட்டில் நேற்று (22) காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்துக்குள் 396 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் இதுதொடர்பில் 41, 914 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் மற்றும்
நோய்த் தடுப்புச் சட்டத்தின் 4, 5 ஆம் இலக்க சட்டவிதிகளுக்கு கீழும்,தண்டனைச் சட்டக்கோவையின் 264 ஆம் இலக்க சட்டவிதிகளுக்கு கீழும் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
குற்றம் உறுதிச் செய்யப்படும் பட்சத்தில் நபர்களுக்கு 10,000 ரூபா அபராதம் மற்றும் ஆறு மாதகால
சிறைத்தண்டனை வழங்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.
பயணக்கட்டுப்பாடு-நீடிப்பு – மக்கள் அவதி
பயணக்கட்டுப்பாடு-நீடிப்பு – மக்கள் அவதி
நாட்டில் தற்போது அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாடு, எதிர்வரும் 21 ஆம் திகதி அதிகாலை 04 மணி
வரை நீடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா இன்று(12) தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் அமுலாக்கப்பட்டுள்ள
பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 14ஆம் திகதி அதிகாலை 4 மணியுடன் நீக்கப்படும் என நேற்று(10) அறிவிக்கப்பட்டது.
எனினும், நாட்டின் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு எதிர்வரும் 21ஆம் திகதி வரை
பயணக்கட்டுப்பாட்டை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி கூறியுள்ளார்.











