Tag: பயங்கரவாதிகள் திடீர்
Posted in உலக செய்திகள்
பயங்கரவாதிகள் திடீர் தக்குதல் 40 பேர் பலி 33 பேர் காயம்
Author: நிருபர் காவலன் Published Date: 17/04/2023
பயங்கரவாதிகள் திடீர் தக்குதல் 40 பேர் பலி 33 பேர் காயம்
வடக்கு புர்கினா பாசோவில் இராணுவம் மற்றும் தன்னார்வ
பாதுகாப்புப் படைகள் மீது இனந்தெரியாத ஆயுததாரிகள்
நடத்திய தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர் மேலும்
33 பேர் காயமடைந்தனர் .
அல்கொய்தா மற்றும் ஐ.எஸ்.ஐ.எல் உடன் தொடர்புடைய
பயங்கரவாத குழுக்களால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியான ,
மாலியின் எல்லை அருகிலுள்ள அரேமா கிராமத்தில்,
சனிக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது
தெளிவாகத் தெரியவில்லை. மேற்கு ஆபிரிக்க நாட்டின் வடக்கில் உள்ள
குராகோ மற்றும் டோண்டோபி கிராமங்களில் துப்பாக்கி
ஏந்தியவர்கள் 44 பேரைக் கொன்ற ஒன்பது நாட்களுக்குப் பிறகு
இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .
Error: View 9293b2au4w may not exist







