Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

நீயா வீழ்ந்தாய்

நீயா வீழ்ந்தாய்

எழுந்து நடந்த புயல் ஒன்று
வீழ்ந்துடைந்தது
எமன் வைத்த வஞ்சத்தில்
ஏணி ஒன்று சரிந்தது

பார் படித்த பேரறிவை
பாடையின்று சுமக்குது
பார் விழிகள் குளமாக
பகலொன்று உறங்குது

சிம்மா சனமொன்று
சிறகொடிந்து கிடக்குது
வேர் பதித்த மன குவியல்
வேகி வேகி கதறுது

மல்லிகையில் பூவெய்தி
மண மணக்க நடந்தவன்
மணி மணியாய் கவி சொல்லி
மனதுக்குள் நின்றவன்

காப்பெடுத்து முற்போக்கை
கை பிடித்து நடந்தவன்
நான்கு தோள்கள் சுமக்க
நடையிழந்து போகிறான்

தீராத பகையானான்
உயிர் தின்ற எமனவன்
சென்று வா பேரறிவே
செய்தி கொண்டுவா எம்முறவே …!

மல்லிகை இதழ் ஆசிரியர் டொமினிக் ஜீவா 28-01-2021மரணமான துயரில் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 29-01-2021

வன்னி மைந்தன் கவிதைகள்

    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    நீயா வீழ்ந்தாய் நம்ப முடியவில்லை

    நீயா வீழ்ந்தாய் நம்ப முடியவில்லை

    ஓடி நடந்த காற்று
    ஓய்ந்து வீழ்ந்தது
    உயிர் குடித்து கொரனோ
    உடலை தந்தது

    காதில் வந்த செய்தி
    கண்ணீர் தந்தது
    காயப்பட்டு நெஞ்சு
    கதறி துடித்தது

    நேற்று வரை
    நெஞ்சில் ஏறி நின்றவன்
    நேரில் பல கதை
    சொல்லி மகிழ்பவன்

    முக நூலில் வந்து
    முகம் தந்தவன்
    முன் வரும் செய்தி
    முன் பகிர்ந்து செல்பவன்

    மலை போல் உடல்
    கட்டு கொண்டவன்
    மாயம் என்னவோ – நீ
    மண்ணில் வீழ்ந்தது …?

    நீயா வீழ்ந்தாய் நம்ப முடியவில்லை

    உன்னை கொன்ற கொரனோ
    என்னை விடுமோ ..?
    உயிரில் அச்சம் இன்று
    தொற்றி கொண்டது

    பிறந்த நாளில் முந்தி
    வாழ்த்து சொல்பவன்
    பிரியமுடன் மொழி
    எழுதி வைப்பவன்

    நாளை வாழ்த்த என்னை
    நீயும் இல்லையே
    நண்பா உறங்கு
    ஆத்ம சாந்தியே ….!

    வன்னி மைந்தன்
    ஆக்கம் 15-01-2021
    லண்டனில் கொரனோ நோயினால் 14-01.2021 அன்று உயிர் பிரிந்த நண்பன் இராயரூபன் துயரில் …!

    வன்னி மைந்தன் கவிதைகள்

    நீயா வீழ்ந்தாய்
    நீயா வீழ்ந்தாய்