Tag: நீயா வீழ்ந்தாய்
நீயா வீழ்ந்தாய்
நீயா வீழ்ந்தாய்
எழுந்து நடந்த புயல் ஒன்று
வீழ்ந்துடைந்தது
எமன் வைத்த வஞ்சத்தில்
ஏணி ஒன்று சரிந்தது
பார் படித்த பேரறிவை
பாடையின்று சுமக்குது
பார் விழிகள் குளமாக
பகலொன்று உறங்குது
சிம்மா சனமொன்று
சிறகொடிந்து கிடக்குது
வேர் பதித்த மன குவியல்
வேகி வேகி கதறுது
மல்லிகையில் பூவெய்தி
மண மணக்க நடந்தவன்
மணி மணியாய் கவி சொல்லி
மனதுக்குள் நின்றவன்
காப்பெடுத்து முற்போக்கை
கை பிடித்து நடந்தவன்
நான்கு தோள்கள் சுமக்க
நடையிழந்து போகிறான்
தீராத பகையானான்
உயிர் தின்ற எமனவன்
சென்று வா பேரறிவே
செய்தி கொண்டுவா எம்முறவே …!
மல்லிகை இதழ் ஆசிரியர் டொமினிக் ஜீவா 28-01-2021மரணமான துயரில் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 29-01-2021
நீயா வீழ்ந்தாய் நம்ப முடியவில்லை
நீயா வீழ்ந்தாய் நம்ப முடியவில்லை
ஓடி நடந்த காற்று
ஓய்ந்து வீழ்ந்தது
உயிர் குடித்து கொரனோ
உடலை தந்தது
காதில் வந்த செய்தி
கண்ணீர் தந்தது
காயப்பட்டு நெஞ்சு
கதறி துடித்தது
நேற்று வரை
நெஞ்சில் ஏறி நின்றவன்
நேரில் பல கதை
சொல்லி மகிழ்பவன்
முக நூலில் வந்து
முகம் தந்தவன்
முன் வரும் செய்தி
முன் பகிர்ந்து செல்பவன்
மலை போல் உடல்
கட்டு கொண்டவன்
மாயம் என்னவோ – நீ
மண்ணில் வீழ்ந்தது …?
நீயா வீழ்ந்தாய் நம்ப முடியவில்லை
உன்னை கொன்ற கொரனோ
என்னை விடுமோ ..?
உயிரில் அச்சம் இன்று
தொற்றி கொண்டது
பிறந்த நாளில் முந்தி
வாழ்த்து சொல்பவன்
பிரியமுடன் மொழி
எழுதி வைப்பவன்
நாளை வாழ்த்த என்னை
நீயும் இல்லையே
நண்பா உறங்கு
ஆத்ம சாந்தியே ….!
வன்னி மைந்தன்
ஆக்கம் 15-01-2021
லண்டனில் கொரனோ நோயினால் 14-01.2021 அன்று உயிர் பிரிந்த நண்பன் இராயரூபன் துயரில் …!







