Tag: நால்வர்மீட்பு
Posted in இலங்கை செய்திகள்
கடலலையில் அடித்துச் செல்லப்பட்ட நால்வர்மீட்பு
Author: நிருபர் காவலன் Published Date: 07/07/2025
கடலலையில் அடித்துச் செல்லப்பட்ட நால்வர்மீட்பு
கடலலையில் அடித்துச் செல்லப்பட்ட நால்வர்மீட்பு ,எத்துகால கடலில் நீராடச்சென்ற நான்கு பேர் கடல் அலையில் சிக்கி, கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால் மீட்கப்பட்டனர்.
இந்த சம்பவம் நேற்று (6) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ்
சம்பவத்தின் போது அவ்விடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உயிர்காப்பு பிரிவு அதிகாரிகளான பொலிஸ் கண்காணிப்பாளர் அனுராத,
பொலிஸ் கான்ஸ்டபிள் லக்ஷான்
பொலிஸ் கான்ஸ்டபிள் லக்ஷான் (99177) மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் விஜேசிங்க (105320) ஆகியோர் நீரில் இழுத்துச் செல்லப்பட்டவர்களை காப்பாற்றியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 20, 21, 22 மற்றும் 34 வயதுடைய வெயங்கொட, புடலுஓயா மற்றும் நமுனுகுல பகுதிகளைச் சேர்ந்தவர்களே இவ்வாறு அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.








