Tag: நகரசபை
கம்பளை நகரசபை SJB வசம்
கம்பளை நகரசபை SJB வசம்
கம்பளை நகரசபை SJB வசம் ,கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத பெந்தோட்டை பிரதேச சபை மற்றும் கம்பளை நகர சபையின் ஆட்சியை ஐக்கிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.
பெந்தோட்டை பிரதேச சபை
தெற்கு உள்ளூராட்சி ஆணையாளர் தலைமையில் இன்று கூடிய பெந்தோட்டை பிரதேச சபையில், ஐக்கிய மக்கள் சக்தி (SJB) அதிகாரத்தைப் பெற்றது. 23 உறுப்பினர்களைக் கொண்ட இந்த சபையின் தவிசாளர் பதவிக்கு திறந்த
வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்ட பிரேமகுமார் விஜேவர்தன் 12 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார்.
அதே வேளையில், தேசிய மக்கள் சக்தி (NPP) சார்பில் போட்டியிட்ட மெர்வின் பிரதீப் கொடித்துவக்கு 11 வாக்குகளை மட்டுமே பெற்றார்.
கம்பளை நகர சபை
கம்பளை நகர சபையிலும் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றது. இங்கு தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கு திறந்த தேர்தல் நடைபெற்றது.
தேசிய மக்கள் சக்தியின் (NPP) வேட்பாளர் 10 வாக்குகளைப் பெற்ற நிலையில், ஐக்கிய மக்கள் சக்தியின் இருக வீரரத்ன 19 வாக்குகளைப் பெற்று தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
குச்சவெளி பிரதேச சபை
குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் பதவி இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) வேட்பாளர் ஐ. முபாரக்கிற்கு சென்றது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் (ITAK) ஆதரவுடன் அவர் வெற்றிப் பெற்றார்.
திறந்த வாக்கெடுப்பில், அவர் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் (ACMC) வேட்பாளர் அப்துல் ரிஸானை எதிர்த்து போட்டியிட்டார்.
பண்டாரகம பிரதேச சபை
பண்டாரகம பிரதேச சபை இன்று (24) காலை 9.30 மணியளவில் மேல் மாகாண சபை ஆணையாளர் செல்வி சாரங்கிகா கல்ஹாரி ஜயசுந்தர தலைமையில் கூடியது.
இதன்போது தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்கு இரகசிய வாக்கெடுப்பா அல்லது திறந்த வாக்கெடுப்பா என்பது தொடர்பாக உள்ளூராட்சி ஆணையருக்கும்
ஐக்கிய மக்கள் சக்தி (UPFA) தலைமையிலான எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது.
இதனால் பதற்றமான சூழல் நிலவியது. உள்ளூராட்சி ஆணையாளர் கூட்டத்தை 10 நிமிடங்கள் ஒத்திவைத்தார்.
பின்னர் சபை மீண்டும் கூடிய போதும், தொடர்ந்து கருத்து வேறுபாடுகள் காரணமாக கூட்டம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
சாவகச்சேரி நகரசபை ஆட்சிதமிழ் தேசிய பேரவை
சாவகச்சேரி நகரசபை ஆட்சிதமிழ் தேசிய பேரவை
சாவகச்சேரி நகரசபை ஆட்சிதமிழ் தேசிய பேரவை ,சாவகச்சேரி நகர சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளர் பதவிகளை தமிழ் தேசிய பேரவை கைப்பற்றியுள்ளது.
இன்று (13) பிற்பகல், உள்ளூராட்சி ஆணையாளர் தேவந்தினி பாபு தலைமையில் நடைபெற்ற தவிசாளர் மற்றும் உப தவிசாளர் தேர்வு நிகழ்வில் இந்த முடிவு எட்டப்பட்டது.
தவிசாளர் பதவிக்கு, தமிழரசு கட்சி சார்பில் அ. கயிலாயபிள்ளை மற்றும் தமிழ் தேசிய பேரவை சார்பில் வ. சிறிபிரகாஸ் முன்மொழியப்பட்டனர்.
பகிரங்க வாக்கெடுப்பில், தமிழரசு கட்சியின் வேட்பாளர் அ. கயிலாயபிள்ளை, தமிழரசு மற்றும் ஈ.பி.டி.பி. உறுப்பினர்களின் ஆதரவுடன் 7 வாக்குகளைப் பெற்றார்.
அதேபோல், தமிழ் தேசிய பேரவையின் வேட்பாளர் வ. சிறிபிரகாஸும் 7 வாக்குகளைப் பெற்றார். இருவரும் சம வாக்குகளைப் பெற்றதால், திருவுளச்
சீட்டு முறைமையின் மூலம் தவிசாளராக வ. சிறிபிரகாஸ் தெரிவு செய்யப்பட்டார்.
உப தவிசாளர் தேர்வில், தமிழரசு சார்பில் அ. பாலமயூரன் மற்றும் தமிழ் தேசிய பேரவை சார்பில் ஞா. கிஷோர் போட்டியிட்டனர்.
இவர்களும் சம வாக்குகளைப் பெற்ற நிலையில், திருவுளச் சீட்டு மூலம் ஞா. கிஷோர் உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்டார். வாக்கெடுப்பின் போது தேசிய மக்கள் சக்தி நடுநிலை பேணியது.
இந்நிலையில், தமிழ் தேசிய பேரவை சார்பில் சாவகச்சேரி நகர சபைக்கு பரிந்துரை செய்யப்பட்ட ஒரு பெண் உறுப்பினருக்கு இன்று (13) நீதிமன்றத்தால்
இடைக்கால தடை விதிக்கப்பட்டிருந்தது, அதற்கிடையில் இந்த தேர்வுகள் நடைபெற்றன.
இந்த தேர்வு நிகழ்வின்போது, தமிழரசு கட்சி சார்பில் பிரதிச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், தமிழ் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம், முன்னாள்
வட மாகாண சபை உறுப்பினர் கேசவன் சாயந்தனும், தமிழ் தேசிய பேரவை சார்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

















