Tag: தொதல் பொதியில்
Posted in இலங்கை செய்திகள்
தொதல் பொதியில் இறந்த எலி
Author: நிருபர் காவலன் Published Date: 20/03/2023
தொதல் பொதியில் இறந்த எலி
விடுமுறைநாட்களில் இலட்சக்கணக்கானோர் வந்துசெல்லும் சுற்றுலாத்தளமாக சிவனொளிபாதமலை மாறிவிட்டது.
அவ்வாறு சிவனொளிபாதமலைக்கு யாத்திரிகர்களாக வருகைதந்தவர்களில் சிலர், நல்லத்தண்ணி நகரில் உள்ள இனிப்பு பண்டங்களை விற்பனை நிலையமொன்றில் தொதல் உள்ளிட்ட இனிப்பு பண்டங்களை கொள்வனவுச் செய்துள்ளனர்.
அதனை உண்பதற்காக, எடுத்து வெட்டிய போது அந்த தொதல் பொதியில் இறந்த நிலையில் எலி இருப்பதை அவதானித்து உள்ளனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கவனம் செலுத்தி சம்பந்தப்பட்ட வர்த்தக நிலையம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை பாதிக்கப்பட்டவர்கள் விடுக்கின்றனர். செ.தி.பெருமாள்
No posts found.







