Posted in Uncategorized

டுவிட்டர் 3 மாததில் 513 மில்லியன் இலாபம்

டுவிட்டர் 3 மாததில் 513 மில்லியன் இலாபம்

உலகின் முதல்தர யாம்பவான்கள் அதிகம் அங்கம் வகிக்கும் சமுக வலைத்தளமாக விளங்கி


வருவது டுவிட்டர் ஆகும், இதன் முதல் காலாண்டு ( குவாட்டர் ) பகுதியில் அதன் வருமானம் 513 மில்லியனாக உயர்ந்துள்ளது


இதற்கு கரணம் செல்வந்தர் Elon Musk இந்த குழுமத்தின் அதிக பங்குகளை வாங்கியமையே

தற்போது அவரே இந்த நிறுவனத்தின் உரிமையாளராக வரவுள்ளார் ,அதன் பின்னர் மேலும் இதன் பங்குகள்


அதிகம் உச்சத்தை தொடும் என் ஏதிர் பார்க்க படுகிறது

    Posted in Uncategorized

    டுவிட்டரை விலைக்கு வாங்கும் Tesla CEO Elon Musk

    டுவிட்டரை விலைக்கு வாங்கும் Tesla CEO Elon Musk

    உலகில் கார் உற்பத்தியில் முக்கிய செல்வந்தராக விளங்கி வரும் Tesla CEO Elon Musk
    டுவிட்டர் சமூக வலைதளத்தின் புதிய முதலாளியாக வருகிறார்

    இவர் டுவிட்டரை 42 பில்லியன் டொலர் கொடுத்து விலைக்கு வாங்குகிறார்

    இதனால் அதன் மதிப்பு உயரும் என எதிர் பார்க்க படுகிறது ,தடைகள் ,திறந்தவெளி விவாதங்கள்


    என ஐந்து முக்கிய நிகழ்வுகளை மாற்றிட உள்ளதாக அவர் அறிவித்துள்ளார்

    இது பேஸ்புக்கிற்கு எதிராக டுவிட்டர் உருவெடுக்கும் நிலையை தோற்றுவித்துள்ளது என கூறலாம்

      Posted in இலங்கை செய்திகள்

      உலகம் முழுவதும் சிறிது நேரம் முடங்கிய டுவிட்டர்

      உலகம் முழுவதும் சிறிது நேரம் முடங்கிய டுவிட்டர்

      டுவிட்டர் சிறிது நேரம் முடங்கியதில் பாதுகாப்பு மீறலோ அல்லது ஹேக் செய்யப்பட்டதற்கான ஆதாரமோ இல்லை என டுவிட்டர் நிறுவனம் கூறி உள்ளது.

      உலகம் முழுவதும் சிறிது நேரம் முடங்கிய டுவிட்டர் -நெட்டிசன்கள் டென்ஷன்

      பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டர் நேற்று பிற்பகல் முடங்கியது. பயனர்கள் டுவிட் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.

      ஏற்கனவே வந்த தகவல்களையும் பார்க்க முடியவில்லை. திரும்பத் திரும்ப டுவிட் செய்யும் முயற்சியில் ஈடுபட்டும் பலன் அளிக்கவில்லை. இதனால் நெட்டிசன்கள் டென்ஷன் அடைந்தனர்.

      ஹேக்கர்கள் டுவிட்டரை முடக்கியிருக்கலாம் என பலரும் கருத்து பதிவிட்டனர். சுமார் 2 மணி நேரத்திற்கு பிறகு டுவிட்டர் செயல்பட தொடங்கியது.

      இதுபற்றி டுவிட்டர் நிறுவனம் கூறுகையில், ‘பயனர்களில் பலருக்கு டுவிட்டர் செயல் இழந்திருக்கும். எங்கள் உள் அமைப்புகளில்

      நாங்கள் செய்த கவனக்குறைவான மாற்றம் காரணமாக சிக்கல் ஏற்பட்டது. தற்போது பிரச்சினை சரி செய்யப்பட்டுவிட்டது.

      இதுபற்றி விசாரணை நடத்தப்படுகிறது. பாதுகாப்பு மீறல் அல்லது ஹேக் செய்யப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை’ என டுவிட்டர் விளக்கம் அளித்துள்ளது.

      இதேபோல் கடந்த பிப்ரவரி மாதமும் டுவிட்டர் சில மணி நேரம் முடங்கி, பின்னர் செயல்படத் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

      உலகம் முழுவதும் பெரும்பாலான அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள், முக்கிய பிரமுகர்கள் முதல்

      சாமானிய மக்கள் வரை அனைத்து தரப்பினரும் டுவிட்டரில் கணக்கு வைத்துள்ளனர். அரசியல் தலைவர்கள தங்கள்

      கருத்துக்களை இப்போது பெரும்பாலும் டுவிட்டர் மூலமாகவே கூறுகின்றனர். தகவல் வேகமாக உலகம் முழுவதும்

      சென்றடைவதால் பலரும் டுவிட்டரை பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.