சிறுபோக நெல் அறுவடை
Posted in இலங்கை செய்திகள்

சிறுபோக நெல் அறுவடை

சிறுபோக நெல் அறுவடை

சிறுபோக நெல் அறுவடை ,சிறுபோக அறுவடை ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில், அதன்படி, நாளை (03) முதல் அரசு களஞ்சியசாலைகள் அறுவடை இடங்களில் திறக்கப்பட்டு நெல் கொள்முதலை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நெல் சந்தைப்படுத்தல் சபை மற்றும் பிற குழுக்களுடன் சமீபத்தில் நடைபெற்ற கூட்டுக் கலந்துரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறிய பிரதியமைச்சர், அதன்படி, அம்பாறை, கிளிநொச்சி,

முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் வடமேல் மற்றும் தென் பிரதேசங்களில் நெல் கொள்முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

நெல் சந்தைப்படுத்தல் சபையிடம் தற்போது நெல் கொள்முதல் செய்வதற்கு 600 மில்லியன் ரூபாய் இருப்பு உள்ளது என்றும் அவர் கூறினார்.

ஒரு கிலோ நாட்டு நெல் ரூ.120க்கும், ஒரு கிலோ சம்பா நெல் ரூ.125க்கும், ஒரு கிலோ கீரி சம்பா நெல் ரூ.132க்கும் அரசு களஞ்சியசாலைகளில் கொள்வனவு

செய்யப்படும் என்றும், இந்த களஞ்சியசாலைகளுக்கு அனைத்து விவசாயிகளும் தரப்படுத்தப்பட்ட நெல்லை வழங்க முடியும் என்றும் பிரதி அமைச்சர் கூறினார்.

எயார் இந்தியா விமானத்தில் கோளாறு
எயார் இந்தியா விமானத்தில் கோளாறுஎயார் இந்தியா விமானத்தில் கோளாறு

இதற்கிடையில், இந்த முறை ஈரமான நெல்லுக்கும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன், அதன்படி, ஒரு கிலோ நாட்டு நெல் ரூ. 102, ஒரு

கிலோ சம்பா நெல் ரூ. 105 மற்றும் ஒரு கிலோ கீரி சம்பா நெல் ரூ. 112 என விவசாயிகள் விற்பனை செய்யலாம்.

அரசு களஞ்சியசாலைகளில் ஈரமான நெல்லை பெற முடியாத நிலை இருப்பதாகவும் கூறிய பிரதியமைச்சர்,

விவசாயிகள் அநீதி இழைக்கப்படாமல் இருக்க அனைவரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரினார்.

Posted in இலங்கை செய்திகள்

சிறுபோக நெல் அறுவடை ஆரம்பம் – மட்டக்களப்பு

சிறுபோக நெல் அறுவடை ஆரம்பம் – மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறுபோக நெல் அறுவடை துரிதமாக இடம் பெற்று வருகிறது.

மாவட்டத்தின் நெல் அறுவடையினை சம்பிரதாய பூர்வமாக விசேட நிகழ்வுகளை நடாத்தி சகல கமநல சேவை பிரிவுகளிலும்,

விவசாயிகள் நெல் அறுவடை விழாக்களை சமய நிகழ்வுகளுடன் நடாத்தி ஆரம்பித்துள்ளனர்.DSC 0285 1

பட்டிருப்புப் பிரிவு பிரதேச நீர்ப்பாசனப் பொறியியலாளர் எஸ்.சுபாகரன் தலைமையில் நேற்று (29) மாவடி முன்மாரிப் பகுதியில் நெல் அறுவடை விழா நடைபெற்றது.

இங்கு மாவட்ட அரசாங்க அதிபர் பத்ம ராஜா கருத்துரை வழங்குகையில் புளுக்குணாவி பிரதேச விவசாயிகளின் சுமார் ஆயிரத்து ஐந்நூறு ஏக்கர் நெல் வயல்கள் அறுவடைக்கு முந்திய

காலத்தில் நீர்ப்பாசனம் இன்றி இருந்த போது அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் உறுதுணையால் கலுகல் ஓயா

நீர்ப்பாசணத்திலிருந்து நீர் கிடைத்ததன் பயனாகவே இன்று இப்பிரதேசத்தில் விவசாயிகள் நெல் அறுவடையினை சிறப்பாக

செய்வதற்கு வாய்ப்பு கிட்டியுள்ளது. இதற்கு உதவி செய்த அம்பாறை அரசாங் அதிபரின் பணியினை பாராட்டுகின்றேன் என்றும் தெரிவித்தார்.

இதேவேளையில் அம்பாறை மாவட்ட விவசாயிகள் தற்பொழுது கரைவாகு வட்டப்பிரதேசத்தில் பெய்த அடை மழையினால் நீரில் மூழ்கியுள்ள நெல்வயல்களினை காப்பாற்ற எமது பிரதேசத்தில்

சாத்தியமற்ற மட்டக்களப்பு முகத்துவாரம் ஆற்றுவாயை வெட்டுமாறு கொடுத்த கோரிக்கையை துறைசார் தொழிநுட்ப

அதிகாரிகள் தெரிவித்த பெருத்த பாதிப்புகள் பற்றிய ஆட்சேபனையினை அடுத்து நிறைவேற்ற முடியாததை இட்டு பெரிதும் கவலைப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

இதேவேளை எதிர்காலத்தில் ஆரம்ப கூட்டத்தில் எடுக்கப்படுகின்ற தீர்மானத்திற்கமைய நீப்பாசனம் பெறக்கூடிய வயல்களில்

மாத்திரமே நெற்செய்கையை செய்ய விவசாயிகள் முன்வர வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.