Tag: சிறிலங்கா
சர்வதேச ஊடகங்களில் அம்பலமாகியுள்ள சிறிலங்கா !!
சர்வதேச ஊடகங்களில் அம்பலமாகியுள்ள சிறிலங்கா !!
ஏஎவ்பி செய்தியினால் சர்வதேச ஊடகங்களில் அம்பலமாகியுள்ள சிறிலங்கா !!
இலங்கையில் யுத்தம் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணைக்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அழைப்பு விடுத்துள்ளார் என செய்திட்டுள்ள சர்வதேச
செய்திநிறுவனமான (AFP)ஏஎவ்பி, யுத்த குற்றங்களில் ஈடுபட்டர்வகளுக்கு எதிராக தடைகளை விதிக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார் என செய்தி வெளியிட்டுள்ளது.
ஏஎவ்பி இந்தச்செய்தி சர்வதேச ஊடங்களின் கவனத்தினை இன்று பெற்றுள்ளமையினை அவதானிக்ககூடியதாகவுள்ளது.
மேலும் ஏஎவ்பி தனது செய்திக்குறிப்பில் தெரிவிக்கையில், சிறிலங்கா அரசாங்கம் ஒரு தசாப்தகாலத்திற்கு முன்னர்
முடிவடைந்த 37 வருட போரின் இறுதிகட்டத்தில் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு நீதியை வழங்குவதற்கான வாக்குறுதிகளில் பின்வாங்கியுள்ளது.
உள்நாட்டின் நல்லிணக்க பொறுப்புக்கூறும் முயற்சிகள் தொடர்ந்தும் உரிய பலாபலன்களை அளிக்க தவறியுள்ளன. தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவதை மேலும்
ஆழமானதாக்கும் அமைப்பின் மீது மக்களிற்கு நம்பிக்கையின்மையை மேலும் அதிகரிக்கும்.
மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கண்காணிக்கப்படுவது அதிகரித்துள்ளது சுயதணிக்கை கலாச்சாரம் மீண்டும் காணப்படுகின்றது.
மனித உரிமை பேரவையின் உறுப்புநாடுகள் தஙகள் சொந்த நீதிமன்றங்களில் இலங்கையின் அனைத்து தரப்பினரும் இழைத்துள்ள சர்வதேச குற்றங்கள் குறித்து விசாரணைகளை
மேற்கொள்ளலாம்.
நம்பகதன்மை மிக்க குற்றச்சாட்டுகளிற்கு உள்ளானவர்களிற்கு எதிராக பயணத்தடை மற்றும் சொத்துக்களைபறிமுதல் செய்தல்
போன்றவற்றை முன்னெடுக்க வேண்டும் என ஆணையாளரின் அறிக்கையினைச் ஏஎவ்பி சுட்டிக்காட்டியுள்ளது.
ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் முதல் தடவையாக தனது அறிக்கையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சிறிலங்கா விவகாரம் குறித்து ஆராயவேண்டும் என தெரிவித்துள்ளார் எனவும் ஏஎவ்பி குறிப்பிட்டுள்ளது.
‘ஐநாவே ! சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்து’ என்ற முழக்கத்துடன் 2015ம் ஆண்டு நாடுகடந்த
தமிழீழ அரசாங்கம் முன்கையெடுத்திருந்த மில்லியன் கையெழுத்து போராட்டத்துடன் கருத்துருவாக்கமாக உருப்பெற்றிருந்த
இக்கோரிக்கை, படிப்படியாக தமிழர் தரப்புக்கள் அனைவரதும் முதன்மைக் கோரிக்கையாக மாறியுள்ளதோடு, இன்று ஐ.நா
ஆணையளரின் அறிக்கையூடாக முக்கிய பேசுபொருளமாக மாறியுள்ளமை இங்கு குறிப்பிடதக்கது
சிங்கள இனவாத அரசின் ஒரு பகுதியே சிறிலங்காவின் நீதிமன்றங்கள் !
சிங்கள இனவாத அரசின் ஒரு பகுதியே சிறிலங்காவின் நீதிமன்றங்கள் !
சிறிலங்காவின் நீதிமன்றங்களும் சிங்கள இனவாத அரசின் ஒரு பகுதிதான் என்ற வரலாற்றுண்மையை நாம் மறந்து போகலாகாது. நீதின்றங்களுக்குச் செல்வதன் மூலம் தமிழர்களின் நினைவேந்தல்
உரிமைக்கான அரசியல் வெளியை சிறிலங்காவின் நீதிமன்றங்களின் மூலம் பெற முடியாது என்பதனை,
இனநல்லிணக்கம் பேசிப் பேசி நிலைமாறுகால நீதிக்கான வகுப்புக்களை எடுக்கும் சர்வதேச சமூகத்துக்கு வெளிப்படுத்தும்
களமாகப் பயன்படுத்திவிட்டு, மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதற்கான மாற்று உத்திகளை தமிழர் தேசம் முதலிலேயே வகுத்திருக்க வேண்டும்
மாவீரர் நாளினையோ, அல்லது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளையோ ஒரு வெறும் சடங்காக மாற்றாமல், இந்த நாட்கள் முன்வைக்கின்ற அரசியலைக் கையிலெடுத்து, அதனை மக்கள்
மயப்படுத்திய அரசியல் போராட்டமாக மாற்ற வேண்டிய பொறுப்பு தமிழர் தலைவர்களுக்கு உண்டு. இதனை நோக்கிய
ஆக்கபூர்வமான செயல்முனைப்பே தமிழர் தேசத்தின் இன்றைய வேண்டுகையாகவுள்ளது.
ஆசிரியர் தலையங்கத்தின் முழுமை பின்வருமாறு :
சிங்கள பேரினவாதத்தினால் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள தமிழர் தேசம், தனது தேசப்புதல்வர்களை நினைவேந்துவதில் சிறிலங்கா அரசின் பெரும் சவால்களை இவ் வருடம்
எதிர்கொண்டிருக்கிறது. தனது காவல்துறையினையும் நீதிமன்றங்களையும் பயன்படுத்தி மக்கள் தமது
வீரப்புதல்வர்களுக்கு வணக்கம் செலுத்துவதற்குச் சிறிலங்கா அரசு தடைவிதித்திருக்கிறது.
ஈழத் தமிழர் தேசத்தினை இனவழிப்புக்குள்ளாக்கும் சிங்கள இனவாத அரசின் இச் செயல் வியப்புக்குரியதொன்றல்ல.
எதிர்பார்க்கப்டாததொன்றுமல்ல. ஆனால் இத் தடையினை ஒரு அரசியல் முடிவாகக் காட்டாது சட்டம் ஒழுங்கு விடயம் போல காட்டுவதற்கு சிறிலங்கா அரசு முற்பட்டுள்ளது. கொரோனா
உலகப்பெருந்தொற்றுச் சூழலையும் சிறிலங்கா அரசு இவ் விடயத்தில் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தியுள்ளது.
தமிழீழ தேசத்தின் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவது தமிழீழ தேசத்தின் அரசியல் உரிமை. அவர்களது ஜனநாயக உரிமை. அடிப்படையானதொரு மனித உரிமை. உலகளாவிய மக்கள் தங்கள்
தேசங்களின் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் உரிமையினைக் கொண்டிருப்பது போல தமிழீழ மக்கள் இந்த உரிமையினைத் தம்;வசம் கொண்டுள்ளார்கள். ஈழத் தமிழர்
தேசத்தினை ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள பௌத்த பேரினவாத அரசு மாவீரர்களை நினைவுகூர்வதற்கு விதிக்கும் தடைகள் அப்பட்டமான ஜனநாயக மனிதவுரிமை மீறலாகும்.
ஈழத்தமிழர் தேசம் சிறிலங்கா இனவாத அரசின் இத் தடைகளை உடைப்பதற்கான வியூகங்களை வகுக்க வேண்டும். இதனை ஒரு நீதிமன்ற விடயமாகச் சுருக்கிக் கொள்ளக்கூடாது. நீதிமன்றங்களை
அரசியல் நியாயங்களை வெளிப்படுத்துவற்கான களங்களாகப் பயன்படுத்துவது வேறு. மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவற்கான அனுமதியினை நீதிமன்றங்களிடம் வாதாடி
வென்று விடலாம் என நம்புவது வேறு. சிறிலங்காவின் நீதிமன்றங்களும் சிங்கள இனவாத அரசின் ஒரு பகுதிதான் என்ற வரலாற்றுண்மையை நாம் மறந்து போகலாகாது.
நீதின்றங்களுக்குச் செல்வதன் மூலம் தமிழர்களின் நினைவேந்தல் உரிமைக்கான அரசியல் வெளியை சிறிலங்காவின் நீதிமன்றங்களின் மூலம் பெற முடியாது என்பதனை,
இனநல்லிணக்கம் பேசிப் பேசி நிலைமாறுகால நீதிக்கான வகுப்புக்களை எடுக்கும் சர்வதேச சமூகத்துக்கு வெளிப்படுத்தும்
களமாகப் பயன்படுத்திவிட்டு, மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதற்கான மாற்று உத்திகளை தமிழர் தேசம் முதலிலேயே வகுத்திருக்க வேண்டும்.
சிங்கள அரச கட்டமைப்புக்கள் மாவீரர் நாளுக்கென விதித்த தடைகளுக்கு எதிராக ஒன்றுகூடிய தமிழர் தேசியகட்சிகள், மக்களை வீடுகளில் இருந்து மாவீரர்களுக்கு விளக்கேற்றுங்கள் எனக் கூறிவிட்டு ஒதுங்கிக் கொண்டனர். குறைந்தபட்சம் மக்களைத்
தத்தமது வீடுகளுக்குள் ஒதுங்கிக் கொள்ளாது வீட்டு வாசல்களிலும் மதில்களிலும் தீபங்களை ஏற்றுங்கள் என அறைகூவல் விடுத்து தமிழீழ தேசத்தைத் தீபங்களால் ஒளிரச் செய்திருக்க வேண்டும்.
ஆக்கிரமிப்புக்குள்ளாகி நிற்கும் நமது மக்களை ஆக்கிரமிப்பாளர்களை மூர்க்கத்துடன் எதிர்க்கும் போர்க்குணம்
கொண்டவர்களாக மாற்றும் சக்தி மாவீரர்களது மூச்சுக்கு உண்டு என்பதனை நமது அரசியற் தலைவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
மாவீரர் நாளினையோ, அல்லது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளையோ ஒரு வெறும் சடங்காக மாற்றாமல், இந்த நாட்கள்
முன்வைக்கின்ற அரசியலைக் கையிலெடுத்து, அதனை மக்கள் மயப்படுத்திய அரசியல் போராட்டமாக மாற்ற வேண்டிய பொறுப்பு தமிழர் தலைவர்களுக்கு உண்டு.
இதனை நோக்கிய ஆக்கபூர்வமான செயல்முனைப்பே தமிழர் தேசத்தின் இன்றைய வேண்டுகையாகவுள்ளது.






