Tag: சிசிரிவி
கொழும்பில் உள்ள சிசிரிவி போக்குவரத்து விதி மீறல்களுக்கு அபராதம்
Author: நிருபர் காவலன் Published Date: 18/01/2024
கொழும்பில் உள்ள சிசிரிவி போக்குவரத்து விதி மீறல்களுக்கு அபராதம்
கொழும்பில் உள்ள சிசிரிவி அமைப்பின் மூலம் போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் நபர்கள் அடையாளம் காணும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அதன்படி, இவ்வாறு போக்குவரத்து விதி மீறல்களில் ஈடுபடும் நபர்கள் அடையாளம் காணப்பட்டு அபராத சீட்டு வாகன உரிமையாளருக்கு அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் திகதி முதல் இது நடைமுறைக்கு வரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.












