Tag: சிகிச்சை
ரணிலுக்கு இருதய அறுவை சிகிச்சை
ரணிலுக்கு இருதய அறுவை சிகிச்சை
ரணிலுக்கு இருதய அறுவை சிகிச்சை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உடனடியாக இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர்
வேண்டும் என்று கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷன் பெல்லன தெரிவித்துள்ளார்.
அறுவை சிகிச்சையை தேசிய வைத்தியசாலையில் செய்வதற்காக காத்திருப்பு பட்டியலில் இருக்க வேண்டும் என்றும், அவ்வாறு முடியாவிடின்
தனியார் வைத்தியசாலைக்கு சென்று அதைச் செய்யும் வாய்ப்பு ரணில் விக்ரமசிங்கவுக்கு உள்ளதாகவும் அவர் கூறினார்.
“அவரது இதயத்தில் சில சிக்கல்கள் உள்ளன. விரைவில் அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தினால் நல்லது.
பிணை வழங்கப்பட்டதால் அறுவை சிகிச்சை
பிணை வழங்கப்பட்டதால் அறுவை சிகிச்சைக்காக அவர் விரும்பும் வைத்தியசாலைக்கு செல்லலாம்.
தேசிய வைத்தியசாலையில் காத்திருப்பு பட்டியல் சில நேரங்களில் சுமார் 3 ஆண்டுகள் ஆகும்.
எனவே, அவர் தனது சொந்த செலவில், விரும்பும் வைத்தியசாலையில் அதை விரைவாகச் செய்ய முடியும்.
தற்போது, அவருக்கு கரோனரி தமனிகளில் அடைப்பு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அவருக்கு நீரிழப்பும் உள்ளது.
அந்த நிலை படிப்படியாக சரி செய்யப்பட்டு வருகிறது. அந்த நேரத்தில், அவரது இருதயம் பலவீனமாக இருப்பதைக் கண்டறிய முடிந்தது.
அதை இயல்பு நிலைக்குக் கொண்டுவர அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்.” என்றார்
இராணுவம் யானைக்கு சிகிச்சையளித்த து
இராணுவம் யானைக்கு சிகிச்சையளித்த து
இராணுவம் யானைக்கு சிகிச்சையளித்த து ,காயமடைந்த ‘பாதியா’ யானைக்கு சிகிச்சையளிக்க இராணுவம் உதவுகிறது.
இலங்கை இராணுவம்
இலங்கை இராணுவம் காயமடைந்த காட்டு யானை ‘பாதியா’ வை சிகிச்சைக்கு உதவியுள்ளது, சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டு
காயங்களிலிருந்து மீண்டு வந்த நிலையில், நிகவெரட்டியவில் உள்ள மணிகம பகுதியில் சுற்றித் திரிந்தது.
காட்டு யானை சமீபத்தில் ஒரு நீர் குழியில் விழுந்து விபத்துக்குள்ளானது.
வனவிலங்கு அதிகாரிகளால் சிகிச்சை
பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுகளின்படி, 15 வது இலங்கை பீரங்கிப்படை மற்றும் 9 வது இலங்கை தேசிய காவல்படையின் துருப்புக்கள் வனவிலங்கு
அதிகாரிகளால் சிகிச்சை தொடங்கும் வரை அந்தப் பகுதியைப் பாதுகாக்க நிறுத்தப்பட்டன.
இராணுவப் படையினர் தற்போது சம்பவ இடத்தில் உள்ள வனவிலங்கு அதிகாரிகளுடன் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளதுடன் இராணுவத்தினருக்கு வாழ்த்துக்கும் குவிந்து வருகிறது .சிங்கள மக்கள் சமூக ஊடகங்களில் இதனை காணமுடிகிறது .
இலங்கையில் கொரோனா தீவிரம்
இலங்கையில் கொரோனா தீவிரம்
இலங்கையில் கொரோனா தீவிரம் அண்மை நாட்களாக வேகமாக பரவிவரும் கொரொனா தொற்று இலங்கையிலும் கண்டறியப்பட்டுள்ளது.
ஆசிய நாடுகளில் இந்நாட்களில் தீவிரமாக பரவி வரும் கொவிட் -19 திரிபு இலங்கையிலும் கண்டறிந்துள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் நோயியல் நிபுணர் வைத்தியர் ஜூட் ஜயமஹ தெரிவித்ததாவது,
ஓமிக்ரோன் வைரஸின் புதிய திரிபு
ஓமிக்ரோன் வைரஸின் புதிய திரிபுகளான LF.7 மற்றும் XFG எனும் புதிய வைரஸ் வகைகள் நாட்டில் உள்ள சில நோயாளிகளிடையே கண்டறியப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து பெறப்பட்ட உயிரியல் மாதிரிகள் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் மூலம் இவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும் பொதுமக்கள் இவ்வாறான கொவிட் -19 திரிபுகள் தொடர்பாக வீண அச்சத்தை ஏற்படுத்தி கொள்ளத் தேவையில்லை.
அதிக ஆபத்துள்ள பிரிவினர் என சுட்டிக்காட்டப்படும் குழந்தைகள், கர்ப்பிணித் தாய்மார், வயதானவர்கள் மற்றும் நாட்பட்ட நோயாளர்கள் நோய்குறித்து அதிக அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
மீண்டும் முகக்கவசம்
அத்தோடு பொதுமக்கள் மீண்டும் முகக்கவசம் அணிவதுடன் கொவிட்-19 பரவலின் போது பின்பற்றிய சுகாதார நடைமுறைகளை மீள பின்பற்றுவதன் மூலம் இவ்வாறான நோய்களில் இருந்து பாதுகாப்பு பெறலாம்.
இந்நாட்களில் சனநெரிசலான பகுதிகளில் அதிக நேரம் செலவழிக்க வேண்டாம் எனவும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
கொவிட்-19 வைரஸின் புதிய திரிபுகள் காலத்துக்கு ஏற்ற அவ்வப்போது பரவுகின்றன. இருப்பினும், இதனை சுகாதார அதிகாரிகள் தொடர்ச்சியாக கவனித்து வருவதால் தேவையற்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், காலி தேசிய வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த ஒரு மாத பச்சிளம் குழந்தைக்கும் கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து காலி தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளர் குறிப்பிடுகையில், உயிரிழந்த குழந்தையின் உயிரியல் மாதிரி கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னர்
மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அந்த வைரஸ் தற்போது ஆசியாவில் பரவி வரும் கொவிட்-19 திரிபு இல்லை எனவும் கண்டறியப்பட்டுள்ளது என்றார்.
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை

தீவிர சிகிச்சை பிரிவில் சிவாஜிலிங்கம்
தீவிர சிகிச்சை பிரிவில் சிவாஜிலிங்கம்
தீவிர சிகிச்சை பிரிவில் சிவாஜிலிங்கம் தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் திடீர் சுகவீனமுற்ற நிலையில் சுயநினைவற்று கொழும்பு – கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலை
ஒன்றில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே. சிவாஜிலிங்கம் தனிப்பட்ட விஜயமாக கொழும்புக்குச் சென்றிருந்தார். இந்நிலையில், வழக்கமான உடல் பரிசோதனைக்காக வைத்தியசாலைக்குச் சென்று கொண்டிருந்தபோது
வைத்தியசாலையை அண்மித்த நிலையில் திடீரென அவரின் உடல் நிலை பாதிப்புக்கு உள்ளாகி சுயநினைவற்று மயங்கி வீழ்ந்தார்.
இதையடுத்து அவர் உடனடியாகக் கொள்ளுப்பிட்டி தனியார் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார்.
சுயநினைவற்ற நிலையில் அவருக்கு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கைச் சுவாச கருவியின் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது













