Tag: சஜித்தின்
சஜித்தின் பிறந்தநாள் விழாவில் ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள்
சஜித்தின் பிறந்தநாள் விழாவில் ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள்
சஜித்தின் பிறந்தநாள் விழாவில் ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் பங்கேற்கின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பிறந்தநாளை முன்னிட்டு ஹுனுபிட்டியவில் உள்ள கங்காராம விகாரையில் இன்று நடைபெற்ற மத
நிகழ்வில் துணைத் தலைவர் ருவன் விஜேவர்தன மற்றும் தேசிய அமைப்பாளர் சாகல ரத்நாயக்க உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இது, ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சமகி ஜன பலவேகயவுக்கும் (SJB) இடையே அரசியல் கூட்டணி ஏற்பட வாய்ப்புள்ளது என்பதைக் குறிக்கிறது.
இந்த முன்னேற்றத்தை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இரு கட்சிகளும் இணைந்து பணியாற்றுவதற்கான ஒரு திட்டத்தை
முன்வைத்துள்ளதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தலதா அதுகோரல உறுதிப்படுத்தினார்.
ஐக்கிய தேசியக் கட்சி
“இரு கட்சிகளின் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் தொடர்பான விஷயங்களை ஆராய, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள்
சக்தியின் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கூட்டு ஒருங்கிணைப்புக் குழுவை நியமிக்க எங்கள் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்துள்ளார்,” என்று திருமதி அதுகோரல கூறினார்.
“உள்ளூராட்சி பிரதிநிதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைத் தீர்க்க ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் முன்மொழிந்துள்ளார்.
கூடுதலாக, இரு கட்சிகளின் செயற்குழு உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கூட்டுக் குழுவும் முன்மொழியப்பட்டுள்ளது. ஆரம்பத்தில், இரு கட்சிகளும் இந்த பொறிமுறையின்படி செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு கட்சிகளும் சரியான நேரத்தில் ஒன்றிணையும்,” என்று அவர் மேலும் கூறினார்.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி எதிர்காலத் தேர்தல்களில் இணைந்து போட்டியிடுமா என்று கேட்டபோது, அது ஒரு சாத்தியம் என்று திருமதி அதுகோரலா கூறினார்.
ஆறாம் வகுப்பு கல்வித் தொகுதி தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்தும் அவர் கருத்துத் தெரிவித்தார்,
சில உள்ளடக்கங்களைச் சேர்ப்பதை வெறும் தவறு என்று நிராகரிக்க முடியாது என்று கூறினார்.
“புதிய தொகுதியில் சில விஷயங்களைச் சேர்ப்பது வேண்டுமென்றே செய்யப்பட்ட செயலாக இருக்கலாம், அதை வெறுமனே ஒரு பிழை என்று கூற முடியாது,” என்று அவர் கூறினார்.
மேலும், நீதித்துறை அதிகாரிகளின் இடமாற்றங்கள் மற்றும் பதவி உயர்வுகளை ஆராய ஒரு தேர்வுக் குழுவை நியமிக்க எதிர்க்கட்சியின்
கோரிக்கையை நிராகரித்த சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவின் முடிவை திருமதி அதுகோரலா கேள்வி எழுப்பினார்.
“சட்டமன்றத்தின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்திய அனுர பண்டாரநாயக்க மற்றும் சமல் ராஜபக்ஷ போன்ற அவரது முன்னோடிகள் வழங்கிய தீர்ப்புகளை
சபாநாயகர் ஆய்வு செய்தாரா? நிறுவப்பட்ட மரபின்படி, அவர் நாடாளுமன்ற செயலகத்தின் ஆலோசனையைப் பெற்றாரா?” என்று அவர் கேட்டார்.
மின்வெட்டு குறித்து சஜித்தின் X பதிவு
மின்வெட்டு குறித்து சஜித்தின் X பதிவு
மின்வெட்டு குறித்து சஜித்தின் X பதிவு ,மின்வெட்டுக்கு முதலில் ஒரு குரங்கு மீது பழி சுமத்திய அரசாங்கம், பின்னர் அதனை கடந்த அரசாங்கங்கள் மீது சுமத்தியதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டு குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது X கணக்கில் பதிவொன்றை இட்டு இதனை தெரிவித்துள்ளார்.
இருப்பினும், தற்போதைய அரசாங்கம் உண்மையான பிரச்சினை என்ன என்பதை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சூரிய மின் உற்பத்தியை அதிகரிக்கத் தவறியதும், குறைந்த தேவை காலங்களை நிர்வகிக்காத பலவீனமான நிர்வாகமும் மின் தடைக்கு முக்கிய காரணம் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தோட்ட தொழிலாளர்களுக்கு சஜித்தின் வாக்குறுதி
தோட்ட தொழிலாளர்களுக்கு சஜித்தின் வாக்குறுதி
தோட்ட தொழிலாளர்களுக்கு சஜித்தின் வாக்குறுதி ,எமது நாட்டில் 200 வருடங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட பெருந்தோட்ட சமூகம் எமது நாட்டினது மக்கள் தொகுதியாகும்.
தோட்ட மக்களுக்கு குடியுரிமை வழங்கும் பணிகளில் ரணசிங்க பிரேமதாச பெரும் பங்காற்றினார்.
குடியுரிமை குறித்து பேசும் போது, காணி உரிமை இல்லாத குடியுரிமை பயனற்றது.
எமது நாட்டின் பிரஜைகள் தமது சொந்த காணியிலும், வீட்டிலும் வாழும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது. இது அவர்களது அடிப்படை உரிமை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில் அரசியல் மற்றும் சிவில் உரிமைகள் மட்டுமே உள்ளடங்கியுள்ளன.
எமது நாட்டிலும் தென்னாப்பிரிக்காவின் அரசியலமைப்பைப் போல, சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கு மேலதிகமாக, பொருளாதாரம், சமூகம்,
கலாச்சாரம், வாழ்வாதாரம், சுகாதாரம், கல்வி மற்றும் சொந்த வீட்டுக்கான உரிமைகளையும் உள்ளடக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
எமது நாட்டின் பெருந்தோட்டத்துறையில் அப்பாவியாக வாழ்ந்து வரும் பெருந்தோட்ட மக்களின் வாழ்வோடு விளையாடும் அரசியல் விளையாட்டுகளுக்கு இடம்கொடுக்காமல்,
தனியார் மற்றும் அரசுக்குச் சொந்தமான தரிசு நிலம்
விவசாயம் செய்யப்படாத தனியார் மற்றும் அரசுக்குச் சொந்தமான தரிசு நிலங்களை இவர்களுக்கு வழங்கி, சொந்தமாக வீடு கட்டி, அந்த காணியில் சிறிய தேயிலை தோட்டம் அமைத்து, மக்கள் சமூகத்தில் கௌரவமான
வாழ்க்கையை வாழ்வதற்கான உரிமையையும், வரத்தினையும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் பெற்றுத்தருவேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
மக்களின் வாழ்க்கைக்கு தேவையான விடயங்கள் குறித்தான அம்சங்கள் அடிப்படை உரிமைகள் அத்தியாத்தில் சேர்க்கப்படும் போது, ஒவ்வொரு
ஆட்சியாளரும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய அழுத்தத்தைச் சந்திப்பார். இது ஆட்சியாளர்களது பொறுப்பாகிவிடும்.
அடிப்படை உரிமைகள் குறித்து பேசினாலும், கொரோனா வைரஸின் போது முஸ்லிம் மக்களினது மத மற்றும் கலாச்சார உரிமைகள் மீறப்பட்டன. தகனமா அடக்கமா என்ற விவகாரத்தில் தவறான அறிவியல்
அறிக்கைகளைக் காட்டி முஸ்லிம் சமூகத்தினர் பாராபட்சமாக தாக்கப்பட்டனர். மத, கலாசார உரிமைகளை அடிப்படை உரிமைகள்
அத்தியாயத்தில் சேர்க்கப்பட்டிருந்தால் ஆட்சியாளர்களால் அவ்வாறான நடவடிக்கைகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 351 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் என்பன,
கண்டி, கஹவடகோரலை, விவேகானந்தா கல்லூரிக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூலை 21 ஆம் திகதி இடம்பெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது, பாடசாலை அபிவிருத்தி நிதியத்திற்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.
அரசியல், சிவில், சமூக, பொருளாதார, சுகாதாரம், கல்வி
குடிமக்களின் உரிமைகள் குறுகியதாக வரையறுக்கப்படாமல், பரந்த அளவில் வரையறுக்கப்பட வேண்டும். எல்லா இனத்தினதும், எல்லா மதத்தினதும் அரசியல், சிவில், சமூக, பொருளாதார, சுகாதாரம், கல்வி, வாழ்க்கை மற்றும்
வாழ்வாதார உரிமைகளை பாதுகாக்கும் முற்போக்கான அரசியலமைப்பு நமது நாட்டிற்குத் தேவையாக காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
விவேகானந்தா கல்லூரிக்கு அருகாமையில் அமைந்து காணப்படும் மாவட்ட செயலகத்துக்குச் சொந்தமான சிறு காணியை இப்பாடசாலைக்குப் பெற்றுத்
தருவேன் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தனதுரையில் வாக்குறுதியளித்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
இத்திட்டத்தின் மூலம் ஒரு மாதத்திற்குள் 100 ஸ்மார்ட் வகுப்பறைகள் நன்கொடையாக வழங்கப்பட்டிருப்பது சிறப்பம்சம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

















