Tag: குளவி
குளவி கொட்டுக்கு இலக்கான பல்கலைக்கழக மாணவர்கள்
குளவி கொட்டுக்கு இலக்கான பல்கலைக்கழக மாணவர்கள்
ஹந்தானை மலையில் ஏற வந்த பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று (01) பிற்பகல் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குளவி கொட்டுக்கு இலக்கான பல்கலைக்கழக மாணவர்கள்
குளவி தாக்கியதில் 15 மாணவிகளும் 27 மாணவர்களும் காயமடைந்ததாகவும், அவர்களை பொலிஸ் அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து 1990 அம்புலன்ஸ் மூலம் கண்டி வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மீபே பல்கலைக்கழக மாணவர்கள் 276 பேரும் ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் 64 பேரும் ஹந்தானை மலையில் ஏற வந்துள்ளதாகவும் ஏனைய
மாணவர்கள் பஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் கண்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
62 மாணவர்களை விரட்டி குற்றிய குளவிகள்
62 மாணவர்களை விரட்டி குற்றிய குளவிகள்
இலங்கை மொனராகலை, எத்திமலை மகா வித்தியாலயத்தை சேர்ந்த அறுபத்தி
இரண்டு மாணவர்கள் மற்றும் மூன்று ஆசிரியர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி மருத்துவனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
ஒன்று கூடல் ஒன்றிற்காக ஒன்று கூடிய பொழுது அங்கிருந்த
குளவி கூடு வீழ்ந்து சிதறியதால் பரவிய குளவிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்க படுகிறது
பெண்களை துரத்தி குற்றிய குளவிகள்
பெண்களை துரத்தி குற்றிய குளவிகள்
குளவிக் கொட்டியதில் பாதிப்புக்கு உள்ளான பெண்கள் அறுவரும் டிக்கோயா கிளங்கன் மாவட்ட
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டிக்கோயா ஒட்டரி தோட்டத்தை சேர்ந்த பெண் தொழிலாளர்கள் கொழுந்து பறித்துகொண்டிருந்த போதே குளவிக் கூடு களைந்து கட்டியுள்ளது
வேலையாட்களை துரத்தி குற்றிய குளவிகள்
வேலையாட்களை துரத்தி குற்றிய குளவிகள்
நோர்வூட்- ஸ்டொக்கம் தோட்டத்தில், கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 15 தொழிலாளர்கள் இன்று (13) காலை குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.
குளவிக்கொட்டுக்கு இலக்கான 19 பேரும் டிக்கோயா- கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஐவர் மாத்திரம் தொடர்ந்து தங்கியிருந்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தேயிலை மலையிலிருந்த மரத்தில் கட்டப்பட்டிருந்த குளவிக் கூட்டை கழுகொன்று கலைத்ததன் காரணமாக, குளவிகள் கலைந்து, தொழிலாளர்களை தாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
புதுக்குடியிருப்பு பாடசாலையில் 24 மாணவர்களை துரத்தி குற்றிய குளவி
புதுக்குடியிருப்பு பாடசாலையில் 24 மாணவர்களை துரத்தி குற்றிய குளவி
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, பாரதி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்க சென்ற மாணவர்கள் 24 பேரை குளவி துரத்தி குற்றியுள்ளது
இதில் பாதிக்க பட்ட மாணவர்களை மூங்கிலாறு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்
சிலர் மேலதிக சிகிச்சைக்கு அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்ற பட்டுள்ளனர் ,மேற்படி சம்பவம் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து
சுடலைக்கு பிணத்துடன் சென்றவர்களை துரத்தி குற்றிய குளவி – ஆவி அட்டகாசமா ..?
சுடலைக்கு பிணத்துடன் சென்றவர்களை துரத்தி குற்றிய குளவி – ஆவி அட்டகாசமா ..?
சடலத்தை புதைப்பதற்காக மயானத்துக்கு எடுத்துச் சென்றிருந்த நிலையிலேயே சடலத்துடன் சென்றிருந்தவர்கள் குளவித் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த சம்பவம், கண்டி, மஹியாவ பொது மயானத்தில் இடம்பெற்றுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் கண்டி- வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சடலத்தை மயான பூமியில் வைத்துவிட்டு, இறுதி சடங்குகளை மேற்கொண்டுள்ளனர். இதன்போது பட்டாசும் கொளுத்தப்பட்டுள்ளது.
அந்த சத்தத்துக்கு களைந்த குளவிகள் கடுமையாக கொட்டியுள்ளன. இதேவேளை, அந்த மயானத்தை சுற்றியிருக்கும் மரங்களில் பெருமளவில் குளவி கூடுகள் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
சடலத்தை அவ்விடத்திலேயே வைத்துவிட்டு தப்பியோடிவிட்டனர். எனினும், சவப்பெட்டி மூடியிருந்தமையால்
சடலத்தின் மீது குளவி கொட்டவில்லை. அதேவேளை, இருட்டியதும் மயானத்துக்குச் சென்ற மற்றும் சிலர் சடலத்தை நல்லடக்கம் செய்துள்ளனர்
துரத்தி குத்திய குளவிகள் – பலர் காயம்
துரத்தி குத்திய குளவிகள் – பலர் காயம்
பசறை – வெல்கொல்ல பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான
அறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வெல்கொல்ல பகுதியிலிருந்த கெந்தகொல்லவுக்கு உரம்
ஏற்றுவதற்கு சென்றவர்களே குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.












