Tag: குடும்பஸ்தர் படுகாயம்
Posted in இலங்கை செய்திகள்
கரடி தாக்கியதில் குடும்பஸ்தர் படுகாயம்
Author: நிருபர் காவலன் Published Date: 03/09/2023
கரடி தாக்கியதில் குடும்பஸ்தர் படுகாயம்
வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் கரடி தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா, சிதம்பரபுரம் பகுதியில் உள்ள காட்டுப் பகுதிக்கு சென்ற குடும்பஸ்தர் மீதே வௌ்ளிக்கிழமை (01) கரடி தாக்கியுள்ளது.
கரடி தாக்கியதில் குடும்பஸ்தர் படுகாயம்
கரடியின் தாக்குதலுக்கு உள்ளான குறித்த குடும்பஸ்தர் கண் ஒன்றை இழந்துள்ளதுடன், தலையிலும் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
கரடியின் பிடியில் இருந்து தப்பி வந்த அவரை அயலவர்கள் மீட்டு வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா, சிதம்பரபுரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
- இலஞ்சம் வாங்கிய பொலிஸ் அதிகாரி கைது
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- 2027 ஆம் ஆண்டுக்கான பள்ளிப் பருவ கால அட்டவணையை கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது
- நந்த மாலினி மறைவையொட்டி இலங்கை அரச நிறுவனங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்
- இலங்கையில் டெங்கு மரண எண்ணிக்கை 71 ஆக உயர்வு












