மக்களை கொன்ற கார் விபத்து
Posted in இலங்கை செய்திகள்

மக்களை கொன்ற கார் விபத்து

மக்களை கொன்ற கார் விபத்து

மக்களை கொன்ற தியத்தலாவ கார் விபத்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,இந்த கார் விபத்தில் ஏழுபேர் பலியாகியுள்ளனர் .

தியத்தலாவ நரியாகாந்தை கார் பந்தைய திடலில் இடம்பெற்ற கார் ஓட்ட பந்தயத்தில் ,கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து மக்களுக்குள் நுழைந்து மோதியதில் ,ஏழுபேர் பலியாகியும் 21 பேர் காயமடைந்துள்ளனர் .

பதுளை கார் பந்தயத்தில் பயங்கர விபத்து

இந்த கார் பந்தய விபத்தில் படுகாயமடைந்தவர்கள் மீட்க பட்டு ,தியத்தலாவ மற்றும் ஹப்புத்தளை மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

பந்தயத்தில் ஈடுப்பட்ட கார் ஒன்று மக்களுக்குள் நுழைந்து மோதியதில் ,இந்த பெரும் துயரம் ஏற்பட்டுள்ளது .

இந்த கார் விபத்தில் சிலருக்கு எலும்பு முறிவு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

பதுளை மாவட்டத்தின் கார் பந்தைய திடலில் ஈடுபட்ட கார்களே இந்த விபத்தில் சிக்கி கொண்டன .

கார் பந்தய போட்டிகள் இடை நிறுத்தம்

மிக பெரும் கார் விபத்து ஏற்பட்டத்தை அடுத்து ,கார் பந்தய போட்டிகள் இடை நிறுத்த பட்டன .

ஆண்டுகள் தோறும் இதே தியத்தலாவ நரியாகாந்த்தை கார் பந்தைய திடலில் கார் ஓட்ட போட்டிகள இடம்பெறும் .

அவ்விதம் இன்றும் இங்கு இடம்பெற்ற பொழுதே இந்த பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது .

வழமைக்கு மாறாக இடம்பெற்ற இந்த துயர சம்பவத்தால் மக்கள் பெரிதும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .

ஓட்ட பந்தய கார் பாதுகாப்பு வேலிகளை உடைத்து ,கார் மக்களுக்குள் நுழைந்ததினால் ,இந்த பெரும் துயரம் ஏற்பட்டுள்ளது .

மக்களுக்குள் கார் மோதும் காட்சிகள் ,மக்களை கார் கொன்ற காட்சிகள் வெளியாகியுள்ளன .

இந்த கார் பந்தயத்தில் நின்ற மக்கள் ,அந்த கொலை காட்சிகளை வெளியிட்டுள்ளனர் .

அதில் மக்கள் காயமடைந்து அலறுவதும் ,காப்பாற்றும் படி கோருவதும் பதிவாகியுள்ளது .

மேற்படி கார் பந்தயத்தில் இடம்பெற்ற விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

Featured

Loading...
லஹிரு திரிமான்ன பயணித்த கார் விபத்து
Posted in இலங்கை செய்திகள்

லஹிரு திரிமான்ன பயணித்த கார் விபத்து

லஹிரு திரிமான்ன பயணித்த கார் விபத்து

அனுராதபுரம் திரப்பனை பகுதியில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் லஹிரு திரிமான்ன பயணித்த கார், லொறியுடன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்து இன்று (14) காலை 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காரில் பயணித்த மூவரும் லொறியின் சாரதியும் மற்றுமொருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் கார் பலத்த சேதமடைந்துள்ளடன் லொறியும் வீதியை விட்டு விலகி கவிழ்ந்துள்ளது.

கார் விபத்து ஐவர் படுகாயம்
Posted in இலங்கை செய்திகள்

கார் விபத்து ஐவர் படுகாயம்

கார் விபத்து ஐவர் படுகாயம்

எரிபொருள் ஏற்றிச்சென்ற பௌசரும், காரொன்றும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் காரில் பயணித்த ஐவர் படுகாயமடைந்துள்ளனர் என்று திம்புள்ள – பத்தன பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா- கிளங்கள் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் திம்புள்ள – பத்தனை சந்தியில் வைத்தே சனிக்கிழமை (12) இரவு 10 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

கார் விபத்து ஐவர் படுகாயம்

வெலிமடையிலிருந்து கொட்டகலை எரிபொருள் கூட்டுத்தாபனத்தின் தேயிலை களஞ்சியசாலை வளாகத்துக்கு பயணித்துக்கொண்டிருந்த எரிபொருள் பௌசரும், நோர்வூட்டிலிருந்து தலவாக்கலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த காருமே இவ்வாறு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.

கார் வேகமாக செலுத்தப்பட்டுள்ளது எனவும், அதன் சாரதி மதுபோதையில் இருந்துள்ளார் எனவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த ஐவரும் நோர்வூட் பகுதியைச் சேர்ந்த 20 -30 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவரும் திம்புள்ள – பத்தன பொலிஸார் தெரிவித்தனர்.

இராணுவ முகாமின் முன் கார் விபத்து | இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

இராணுவ முகாமின் முன் கார் விபத்து | இலங்கை செய்திகள்

இராணுவ முகாமின் முன் கார் விபத்து | இலங்கை செய்திகள்

இலங்கை செய்திகள் |அக்கரைப்பற்று – பொத்துவில் பிரதான வீதியில், அக்கரைப்பற்று 241ஆம் இராணுவ படைப்பிரிவு முகாமின் தேனீர் சாலை முன்பாக இன்று (05) அதிகாலை கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இக்கார் வீதியை விட்டு விலகி, வீதி அருகில் இருந்த சிறிய தூண்களை உடைத்துக்கொண்டு, அருகில் இருந்த சிறிய பள்ளமான பிரதேசமொன்றில் தலை கீழாக வீழ்ந்து கிடப்பதை காண முடிந்தது.

காரின் இரு பக்க இலக்கத்தகடுகளும் காணப்படாத நிலையில், காரின் முன்பகுதி மோசமான நிலையில் சேதமடைந்துள்ளதையும் காரின் சில பாகங்கள் சிதறி கிடப்பதையும் அவதானிக்க முடிந்தது.

இதில் பயணம் செய்தவர்கள் தொடர்பிலான மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெறாத நிலையில், அக்கரைப்பற்று போக்குவரத்து பொலிஸார், இன்று காலை குறித்த இடத்துக்கு சென்று பார்வையிட்டுள்ளனர்.

No posts found.
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் தலைக்கீழாக கவிழ்ந்த கார்

லண்டனில் தலைக்கீழாக கவிழ்ந்த கார்

லண்டன் Belmont Road பகுதியில் வேகமாக பயணித்த கார் ஒன்று முடக்கு திரும்புகையில் சாரதியின் கட்டு பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்தது .

இந்த கார் தலைக்கீழாக கவிழ்ந்த பொழுதும் சாரதி காயங்களுடன் தப்பிக்கொண்டார் .

தற்போது கார் சாரதி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்ற பொழுதும் ,உயிர் ஆபத்து ஏதும் இல்லை என தெரிவிக்க படுகிறது .

லண்டனில் சமீப காலங்களாக இவ்விதமான கார் விபத்துக்கள் அதிகரித்து செல்கின்றமை இங்கே குறிப்பிட தக்கது.

    லண்டனில் வீட்டை இடித்து நொறுக்கிய கார்
    Posted in உலக செய்திகள்

    லண்டனில் வீட்டை இடித்து நொறுக்கிய ரேஞ்சரோவர் கார்

    லண்டனில் வீட்டை இடித்து நொறுக்கிய ரேஞ்சரோவர் கார்

    லண்டன் Boxley Road, Maidstone. பகுதியில் அதி சொகுசு ரேஞ்சரோவர் ரக கார் ஒன்று வீட்டை இடித்து நொறுக்கியுள்ளது

    மதியம் அளவில் இடம்பெற்ற இந்த ரேஞ்சரோவர் கார் விபத்தில் இரண்டு வீடுகள் பலமாக சேதமடைந்துள்ளன.

    ஆடம்பர ரேஞ்சரோவர் கார் வீடடை நொறுக்கிய வேளையில் தெய்வாதீனமாக எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை .


    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

    ஆபத்தாக வண்டி ஓடியதால் சாரதி கைது செய்யப் பட்டார் .

    வீட்டை ரேஞ்சரோவர் கார் இடித்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .இவாறு வீடுகளுக்குள் கார் புகும் விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகிறது .

    லண்டனில் வீட்டை இடித்து நொறுக்கிய ரேஞ்சரோவர் கார்

    கடனுக்கு ரேஞ்சரோவரை வாங்கி அதில் சவாரி செய்து கலர் காட்டும் பந்தா பாட்டிகள் இவ்வாறு வீட்டுடன் மோதி அந்த வீட்டுக்கு பலலாயிரம் பவுண்டுகள் இழப்பீடு செலுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது .

    மேலும் மக்கள் உயிராபத்தும் ஏற்படுகிறது .

    கட்டு காசுக்கு இவ்வாறான ஆடம்பர வாகனங்களை பெற்று கலர் காட்டும் பந்தா பாட்டிகள் மொத்தமாக பணத்தினை செலுத்த வசதியற்ற நிலையில் இவ்வாறு வீடுகளை இடித்து நாசமாக்குவது என்ன
    கேடு என சமூக வலைத்தளங்களில் மக்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

      Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

      பிரிட்டனில் கவிழ்ந்த கார் வீதியில் நடந்த பயங்கரம்

      பிரிட்டனில் கவிழ்ந்த கார் வீதியில் நடந்த பயங்கரம்

      ,

      பிரிட்டன் ஐயர்லாந்த் ; பிரிட்டன் Ormeau Rd, Belfast. பகுதியில் காலை 11.30 மணியளவில் வேகமாக பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்தது கவிழ்ந்தது .

      இந்த கார் விபத்தில் சிக்கிய சாரதி சிறு காயங்களுடன் தப்பித்தார் .
      இங்கு இடம்பெற்ற கார் விபத்தினால் அந்த வழி போக்குவரத்து சில மணி நேரங்கள் தடை பட்டன.

      கார் விபத்து சம்பவித்த பகுதிக்கு விரைந்து காவல்துறையின் போக்குவரத்துக்கு நெரிசலை கட்டு படுத்தி கார் விபத்து தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்தனர்.

      மேலும் விபத்தில் சிக்கிய கார் அங்கிருந்து மீட்க பட்டது .விபத்து சம்பவத்திற்கு விரைந்த வந்த அம்புலன்ஸ் அவசர உதவி பிரிவினர் கார் சாரதிக்கு சிச்சை வழங்கி காப்பாற்றினர்.

      தொடர்ந்து கார் விபத்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

      பிரிட்டனில் இவ்வாறு பல கார் கவிழ்ந்த நிலையில் விபத்தில் சிக்கி வரும் செயல்பாடுகள் அதிகரித்துள்ளன .

        Posted in பிரித்தானிய செய்தி

        லண்டனில் குத்துக் கரணம் அடித்த கார்

        லண்டனில் குத்துக் கரணம் அடித்த கார்

        லண்டன் Albert Road, Ashford. பகுதியில் வேகமாக பயணித்த கார் ஒன்று சாரதியின் கட்டு பாட்டை இழந்து குத்துக்கரணம் அடித்துள்ளது.

        தலைகீழாக கவிழ்ந்த காரில் இருந்தவர்கள் பலத்த காயங்களுடன் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

        இந்த கார் விபத்தினால் அந்த வழி சாலை போக்குவரத்து சில மணி நேரம் தடை பட்டது.

        சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் அம்புலன்ஸ் என்பன பாதிக்க பட்டவர்களை மீட்டு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர் .

        குத்துகரணம் அடித்து கவிழ்ந்த கார் விபத்து தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்.

        லண்டனில் கார்கள் இப்படியும் குத்துகாரணம் அடிக்கும் என்பது இதன் மூலம் காணமுடிகிறது .