Tag: கள்ள காதலி
கள்ள காதலியை மிரட்டி நகையை பறித்த காதலன்
கள்ள காதலியை மிரட்டி நகையை பறித்த காதலன்
பெண் ஒருவருடன் தகாத உறவில் ஈடுபட்டிருந்த 23 வயது இளைஞன், குறித்த பெண்ணின் நிர்வாண புகைப்படங்களை அவரின் கணவனுக்கு அனுப்புவதாக மிரட்டி, பெண்ணிடம் இருந்த தங்க நகைகளை வலுக்கட்டாயமாக பறித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்றைய தினம் நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கள்ள காதலியை மிரட்டி நகையை பறித்த காதலன்
குறித்த பெண்ணை விடுதிக்கு அழைத்துச் சென்று தாம் இருவரும் ஒன்றாக இருக்கும் பொழுது அந்தப் பெண்ணுடன் குறித்த இளைஞர் நிர்வாணமாகப் படம் பிடித்துள்ளார்.
அதனையடுத்து அந்த நிர்வாணப் புகைப்படங்களை பெண்ணின் கணவரிடம் காட்டுவதாகக் கூறி மிரட்டி அவரிடம் இருந்த ரூ. 1,785,000 பெறுமதியான தங்க நகைகளை வலுக்கட்டாயமாகப் பெற்றுள்ளார் என விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது.
நீர்கொழும்பைச் சேர்ந்த குறித்த சந்தேக நபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
- நாடாளுமன்றத்தில் சஜித் அனுரா கட்சி மோதல்
by நிருபர் காவலன் - நீர்கொழும்பு சிறையில் மில்லியன் ரூபா சேதம்
by நிருபர் காவலன் - கயேந்திரன் பம்மாத்து ஏமாற்று குதிரை அரசியல்
by நிருபர் காவலன் - 26கைதிகள் மரணம் 100 பேர் காயம்
by நிருபர் காவலன் - இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 61000 ஐத் தாண்டியது.
by நிருபர் காவலன்
கள்ள காதலியை கொன்று கிணற்றில் வீசிய காதலன் – முல்லையில் பயங்கரம்
கள்ள காதலியை கொன்று கிணற்றில் வீசிய காதலன் – முல்லையில் பயங்கரம்
முள்ளியவளை பூதன் வயல் கிராமத்தில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்ப பெண்
கொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 08 ஆம் திகதியன்று முள்ளியவளை பூதன்வயல் பகுதியில் தென்னந்தோட்ட கிணறு ஒன்றில் இருந்து உருக்குலைந்த நிலையில் 36 அகவையுடைய குடும்ப பெண் ஒருவர் உடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இந்த சம்பவத்தின் போது குறித்த பெண்ணின் கள்ளக்காதலனாக வாழ்ந்து வந்த நபரை விசாரணைக்கு அழைத்து சென்ற முள்ளியவளை பொலிசார் பின்னர் நேற்று (09) அவரை கைது செய்துள்ளனர்.
பொலிசாரால் கைது செய்யப்பட்ட 33 அகவையுடைய கிளிநொச்சி ஜெயபுரத்தினை சேர்ந்த ஆணினை இன்று (10) முள்ளியவளை பொலிசார் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியுள்ளார்கள்.
முல்லைத்தீவு நீதிமன்றின் நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது கொலைக் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபரை எதிர்வரும் 20.01.2022 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.








