Tag: கற்பழிக்க
டீச்சரை கற்பழிக்க முயன்ற அதிபர் கைது – ஆபத்தான நிலையில் டீச்சர்
டீச்சரை கற்பழிக்க முயன்ற அதிபர் கைது – ஆபத்தான நிலையில் டீச்சர்
மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் தொண்டர் ஆசிரியை ஒருவரை பலத்தகாரம் செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பாடசாலை
அதிபரை நேற்று (01) வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்து விடுத்துள்ளது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள கஸ்பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் தொண்டர் அடிப்படையில் 28 வயதுடைய ஆசிரியை ஒருவர் கடமையாற்றி வருகின்றார்.
இந்த நிலையில் குறித்த ஆசிரியையை பாடசாலை அதிபர் பலாத்காரம் செய்ய முயற்சித்த
காரணத்தால் குறித்த ஆசிரியை பனடோல் குளிசைகளை அதிகளவு சாப்பிட்டு தற்கொலை செய்ய முயற்சித்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து குறித்த அதிபரை பொலிசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்து நேற்று (01) வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை பிணையில் செல்ல நீதவான் அனுமதித்து விடுவித்துள்ளது.
இதேவேளை குறித்த ஆசிரியை குணமடைந்துள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
மனைவியை நண்பர்கள் கற்பழிக்க விட்டு இரசித்த கணவன்
சென்னை வில்லிவாக்கத்தில் காதல் மனைவிக்கு நண்பர்களோடு சேர்ந்து கூட்டு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் வாலிபரை கைது செய்துள்ளனர்.
நண்பர்களோடு கூட்டு பாலியல் தொல்லை- காதல் மனைவி புகாரால் சிக்கிய இளைஞர்
சென்னை கொளத்தூர் வெங்கடேஸ்வரா நகரில் வசித்து வந்த இளம்பெண் ஒருவர், பாரதி நகர் ஏ.பி.சி. காலனியைச் சேர்ந்த கணேஷ் என்ற வாலிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
முகநூலில் ஏற்பட்ட பழக்கம் காதலாகி, கல்யாணம் வரை சென்றுள்ளது. கடந்த மாதம் 5-ந்தேதி ஆள் நடமாட்டம் இல்லாத
இடத்தில் கணேஷ், இளம்பெண்ணின் கழுத்தில் தாலியை கட்டி குடும்பம் நடத்தி உள்ளார்.
இதன் பின்னர் காதல் மனைவி என்றும் பாராமல் கணேஷ் மிகவும் வக்கிரமாக நடந்து கொண்டு செக்ஸ் தொல்லை கொடுத்துள்ளார்.
17 வயது இளம்பெண் ஒருவரை வீட்டுக்கே அழைத்து வந்து மனைவி கண் எதிரே உல்லாசமாக இருந்துள்ளார். தனது நண்பர்களையும்
வீட்டுக்கு அழைத்துச் சென்று மனைவிக்கு கூட்டு பாலியல் தொல்லையும் கொடுத்துள்ளார்.
கணவரின் செக்ஸ் தொல்லை எல்லை மீறி போனதால் அவரது பிடியில் இருந்து தப்பி வந்து வில்லிவாக்கம் அனைத்து மகளிர்
போலீஸ் நிலையத்தில் காதல் கணவரான கணேஷ் மீது இளம்பெண் பரபரப்பான புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. புகார் விவரம் வருமாறு:-
எனது பெற்றோரின் சம்மதம் இன்றி திருமணம் செய்து கொண்டதால் எனது பெற்றோர் என் மீது காவல் நிலையத்தில் புகார்
அளித்தனர். நான் எனது கணவர் கணேசுடன் வாழப்போவதாக கூறி விட்டு அவருடன் சென்று விட்டேன்.
நான் அணிந்திருந்த 1½ சவரன் செயின், ½ சவரன் மோதிரத்தை அடகு வைத்து முன் பணம் செலுத்தி கடந்த 23-ந்தேதி அன்று வில்லிவாக்கம் ராஜேஷ் நகரில் வாடகைக்கு குடியேறினோம். அன்று
இரவே எனக்கு துணையாகவும் வீட்டு வேலைக்கு உதவி செய்வதற்காகவும் என்று கூறி அயனாவரம், மங்களாபுரம் பகுதியில்
வசித்து வரும் 17 வயது பெண்ணை தோழி என்று எனக்கு அறிமுகப்படுத்தி அவரையும் அதே வீட்டில் தங்க வைத்தார்.
ஓரிரு நாட்களிலேயே எனக்கு அவர்கள் இருவரும் நடந்து கொண்ட விதத்தை கண்டு சந்தேகம் ஏற்பட்டு நான் எனது கணவரிடம்
கேட்டபோது எங்கள் இருவர் இடையே வாக்குவாதம் முற்றி அவர் என்னை அடித்து உதைத்தார்.
ஆபாச வார்த்தைகளால் திட்டியும் என்னை இது சம்மந்தமாக இனி எதுவும் கேட்கக்கூடாது. மீறி கேட்டால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி வீட்டில் இருந்த அறைக்குள் வைத்து பூட்டி சென்றார்.
எனது இரு கைகளை கட்டியும், வாயை துணியால் அடைத்தும் பலமுறை செக்ஸ் சித்ரவதை செய்தார். இச்சம்பவத்தால் எனக்கு
உடல் ரீதியாக பாதிப்பும் காயமும் ஏற்பட்டது. ஆகவே நான் எனது வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கதறி அழுதேன்.
அப்போது என்னிடம் சமாதானம் பேசுவது போல் ஆசை வார்த்தை கூறி என்னை மது அருந்த கூறி வற்புறுத்தினார். அவரது
வற்புறுத்தலின்பேரில் நான் மது அருந்திய பின் அவருடன் இருந்த பெண்ணும் என்னிடம் தவறான முறையில் பாலியல் தொல்லை கொடுத்தார்.
எனது கணவர் அவரது போனில் வீடியோ எடுத்து அதை அவரது நண்பர்களுக்கும் அனுப்பி வைத்தார்.
எனது கணவரின் நணபர்கள் என்று 4 பேர் (பார்த்தால் அடையாளம் காட்ட கூடிய சுமார் 23 வயதுடையோர்) வரவழைத்து என்னிடம் கூட்டு பாலியலில் ஈடுபடும்படி கட்டாயப்படுத்தினார்.
ஆனால் நான் கத்தி கூச்சலிட்டு அழுத காரணத்தினால் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டார்கள். அவர்கள் சென்ற சிறிது
நேரத்திலேயே எனது கணவர் என்னை நிர்வாணப்படுத்தி கைகளை கட்டி போட்டு, வாயை துணியால் மூடி கடுமையாக சித்ரவதை செய்தார்.
நீ என்னுடைய 11-வது மனைவி. அது மட்டுமில்லாமல் என்னை படம் பிடித்தது போல் பல கல்யாணமான பெண்களின் அந்தரங்க
வீடியோவை என்னிடம் காட்டி மனரீதியான பாதிப்பை ஏற்படுத்தினார். எனது வீட்டின் உரிமையாளரிடம் கூறியதினால்
அவரது உதவியுடன் நான் அங்கிருந்து தப்பித்து எனது பெற்றோர் வீட்டுக்கு சென்று நடந்ததை கூறினேன்.
எனது கணவர் மற்றும் இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு புகாரில் கூறப்பட்டு இருந்தது.
இதையடுத்து வில்லிவாக்கம் மகளிர் போலீசார் கணேஷ் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டனர். கணேசிடம் ஏமாந்த மற்ற 10 பெண்களும் யார்-யார்? என்பது பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கணேசனுடன் சேர்ந்து கூட்டு பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட வாலிபர்கள் பற்றியும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அவர்களையும் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெண்களை ஏமாற்றி ஆபாச வீடியோ எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள கணேஷ் ‘லவ்லி கணேஷ்’ என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளார். காதல் மன்னன் போல வில்லிவாக்கம் பகுதியில் இவர் வலம் வந்ததாகவும் தெரிகிறது. இதனாலேயே நண்பர்கள் லவ்லி கணேஷ் என்று அழைத்து வந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.






