Tag: கரை
மேற்கு கரையில் துப்பாக்கிச்சூடு பலர் காயம்
மேற்கு கரையில் துப்பாக்கிச்சூடு பலர் காயம்
மேற்கு கரையில் துப்பாக்கிச்சூடு பலர் காயம்,பாலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம் பெற்றுள்ளது இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஆறுக்கு மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பாதை ஊடாக பயணித்த இராணுவத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் பாதிப்பு அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் பலஸ்தீனத்திற்கு இடையில் இடம்பெற்று வருகின்ற இருதரப்புக்கும் கடும் யுத்தம் இடம்பெற்றுக் கொண்டுள்ளது.
இடைவிடாது தொடரும் இந்த யுத்தத்தினால் அப்பாவி பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்ற தொடர் சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது.
இந்த யுத்தம் என்று தணியும் என இருநாட்டு மக்கள் மத்தியில் கருத்துக்களாக காணப்படுகின்றன ஆனால் யுத்தத்த முடிக்க நினைக்கும் தருவாயில் இஸ்ரேல் அதிபர் நெதன்யாகு இல்லை என்பதாக இருப்பதாக தெரியவில்லை.
இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தத்தினால் உலக நாட்டினுடைய பொருளாதாரம் பலத்த வீழ்ச்சி நோக்கி செல்கிறது .
இஸ்ரேல் பாலஸ்தீன மக்களும் சொல்ல நான் துயரை சாதித்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்க கருவூலச் செயலாளரும் பஹ்ரைன் நிதி அமைச்சரும் ஈரான் மீதான தடைகள் குறித்து விவாதித்தனர்

- ஓமான் ஈரான் பேச்சு அமெரிக்கா கொதிப்பு

- விசா சந்திப்புகளுக்கு டிரம்ப் நிர்வாகம் தற்காலிகத் தடை

- இஸ்லாமாபாத் மருத்துவமனை தீ விபத்தில் குறைந்தது 15 பச்சிளங்குழந்தைகள் பலி

- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது

கரை ஒதுங்கியது கடற்கன்னியா
கரை ஒதுங்கியது கடற்கன்னியா
கடலுக்கடியில் புதைந்துள்ள பல ரகசியங்கள் படிப்பதற்கும், கேட்பதற்கும் சுவாரசியமாக இருக்கும், அதே போல கதைகள், திரைப்படங்கள் வழியாக கடற்கன்னிகள் குறித்தும் நாம் அறிந்திருப்போம்
தென்மேற்கு பசிபிக் கடல் பகுதியில் உள்ள நாடு, பப்புவா நியூ கினியா. அந்நாட்டின் பிஸ்மார்க் கடற்கரையோரம் உள்ள சிம்பேரி தீவு பகுதியில் கடற்கன்னியை போன்ற தோற்றமுடைய விசித்திர உயிரினம் ஒன்றின் உடல், கரை ஒதுங்கியுள்ளது.
இத்தகைய உயிரினங்கள் “கிளாப்ஸ்டர்” (globster) என அழைக்கப்படுவதாக “லைவ் சைன்ஸ்” எனும் அறிவியல் ஆய்வுகள் குறித்த தகவல் வலைதளம் தெரிவிக்கிறது. தற்போது கரை ஒதுங்கியிருக்கும் இந்த “கிளாப்ஸ்டர்” உயிரினத்தின் உடல் எடை, நீளம், மற்றும் இவை எவ்வாறு உருவாகின்றன என்பது குறித்த தகவல்களை அறிவது கடினம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
கரை ஒதுங்கியது கடற்கன்னியா
இவை ஒருவகையான கடற்வாழ் பாலூட்டிஉயிரினங்கள் என்பதை தவிர மேற்கொண்டு எதுவும் கூறுவது கடினம் என ஆழ்கடல் ஆராய்ச்சி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். உயிரிழந்து கடலிலேயே நீண்ட நாட்கள் பிற மீன்களால்
உண்ணப்பட்டு தோல் மற்றும் மாமிசத்தை இழக்கும் திமிங்கிலம், டால்பின் போன்ற உயிரின வகைகள் அடையும் நிறத்தையே தற்போது கரை
ஒதுங்கியிருக்கும் “கிளாப்ஸ்டர்” கொண்டிருப்பதால், அனேகமாக இதுவும் ஒரு திமிங்கில வகை உயிரினமாக இருக்கலாம் என சில நிபுணர்கள் கூறுகின்றனர்.
கடற்கன்னி குறித்த “தி லிட்டில் மெர்மெய்ட்” எனும் ஆங்கில திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்து உலகெங்கும் வெற்றிகரமாக ஓடியது.
இந்நேரத்தில் இந்த “கடற்கன்னி” கரை ஒதுங்கியதும், அதன் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி வருகிறது.
- சாலை விபத்துகளில் 7 வயது சிறுமி உட்பட மூவர் பலி
- கண்டி எசல மகா பெரஹெரா திருவிழா பொலிஸ் சிறப்புப் பாதுகாப்பு
- பல அதிவேக நெடுஞ்சாலை சந்திப்புகளில் கடும் போக்குவரத்து நெரிசல்
- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை
- எல் நினோ மற்றும் லா நினோ நிகழ்வுகளுக்கு இலங்கை முன்கூட்டியே தயாராக இருக்க வேண்டும் – சஜித்















