Tag: கண்ணீர்ப்புகை
இஸ்ரேலியப் படைகள் ரப்பர் தோட்டாக்கள் கண்ணீர்ப்புகை தாக்குதல்
இஸ்ரேலியப் படைகள் ரப்பர் தோட்டாக்கள் கண்ணீர்ப்புகை தாக்குதல்
இஸ்ரேலியப் படைகள் ரப்பர் தோட்டாக்கள் கண்ணீர்ப்புகை தாக்குதல் மேற்குக் கரையில் இஸ்ரேலியப் படைகள் ரப்பர் தோட்டாக்கள், கண்ணீர்ப்புகைக் குண்டுகளைப் பயன்படுத்துகின்றன.
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை
ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் இஸ்ரேலிய இராணுவம் குறைந்தது ஆறு
பாலஸ்தீனியர்களைக் கைது செய்துள்ளதாக வஃபா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஜெரிகோவின் ஆளுநரகத்தில் உள்ள ராஸ் ஐன் அல்-அவுஜா கிராமத்தில், வீரர்கள் வீடுகளுக்குள் நுழைந்து ஆறு பேரைக் கைது செய்வதற்கு முன்பு
அவற்றின் உள்ளடக்கங்களை சேதப்படுத்தியதாக பாலஸ்தீனிய கைதிகள் சங்கம் (பிபிஎஸ்) வஃபாவிடம் தெரிவித்துள்ளது.
ஜெருசலேம் ஆளுநரகத்தில் உள்ள அர்-ராம் நகரத்தில்
ஜெருசலேம் ஆளுநரகத்தில் உள்ள அர்-ராம் நகரத்தில் இஸ்ரேலியப் படைகள் தனித்தனியாக இறங்கின, அங்கு அவர்கள் குடியிருப்பாளர்கள் மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மற்றும் ரப்பர் குண்டுகளை வீசினர்.
நாம் முன்னர் தெரிவித்தபடி, இஸ்ரேலிய இராணுவம் கஃப்ர் அல்-லாபாத் மற்றும் ஜபா கிராமங்களிலும், பெய்ட் ஃபஜ்ஜார் நகரத்திலும்
விடியற்காலையில் சோதனைகளை நடத்தி, இரண்டு பேரை கடுமையாகத் தாக்கி, மற்றவர்களைக் கைது செய்தது.
- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானுடனான பேச்சுவார்த்தை ‘இறுதிக் கட்டத்தில்

- இருவருக்கு ஈரான் மரணதண்டனை நிறைவேற்றியது

- அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் மத்தியஸ்தம்

- இஸ்ரேலிய காவலில் உள்ள நாற்பத்தி நான்கு ஸ்பானிய ஆர்வலர்கள்

- இலங்கையில் ஜனவரி முதல் மே வரை 128 காட்டு யானைகள் உயிரிழந்தன

- கொள்ளை வழக்கில் நபர் கைது

- அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் புதிய சரிவை எட்டியது

- எபோலா நோய் மரணம் அதிகரிப்பு

- ஐக்கிய ராச்சியத்தின் வெளியுறவுச் செயலாளருடன் பிரதமர் ஹரினி பேச்சுவார்த்தை

- கலைக்கூடத்தில் காணாமல் போன ஓவியங்கள் குறித்து விசாரணை

- வாகனங்கள் மீதான வரி உயர்வு

- ஈரான் பெண்கள் பாடசாலை தாக்குதல் அமெரிக்காவில் வெடித்த சர்ச்சை

- ஈரான் மோதல் முடிவற்ற போராக மாறாது அமெரிக்க துணை ஜனாதிபதி

- தென் கொரியக் கொடியுடன் கூடிய எண்ணெய்க் கப்பல் ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயற்சி

- 30000 பேர் டெங்கு நோயால் பாதிப்பு

மாணவர்களின் பேரணியில்நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம்
மாணவர்களின் பேரணியில்நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம்
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று பிற்பகல் முன்னெடுத்த ஆர்ப்பாட்ட பேரணியின் மீது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
உணவக வசதி, விடுதிகள், மஹபொல மற்றும் அடக்குமுறை சட்டங்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகளை சுட்டிக்காட்டி இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது
ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க கண்ணீர்ப்புகை பிரயோகம்
ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க கண்ணீர்ப்புகை பிரயோகம்
கொழும்பில் கிரீன் பாத் பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் 2 ஆவது தடவையும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மற்றும் நீர் தாரை பிரயோகம் மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பில் கிரீன் பாத் பகுதியில் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம் மற்றும் நீர் தாரை பிரயோகம் மேற்கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க கண்ணீர்ப்புகை பிரயோகம்

கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகாமையில் மருத்துவ பீட மாணவர்கள் குழு ஒன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
இதனால், தாமரைத் தடாக சந்தியை அண்மித்துள்ள கொழும்பு கிரீன் பாத் பகுதி மற்றும் பொது நூலகம் அமைந்துள்ள பகுதி மூடப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.
- இலங்கையில் ஜனவரி முதல் மே வரை 128 காட்டு யானைகள் உயிரிழந்தன
- கொள்ளை வழக்கில் நபர் கைது
- அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் புதிய சரிவை எட்டியது
- ஐக்கிய ராச்சியத்தின் வெளியுறவுச் செயலாளருடன் பிரதமர் ஹரினி பேச்சுவார்த்தை
- கலைக்கூடத்தில் காணாமல் போன ஓவியங்கள் குறித்து விசாரணை
- வாகனங்கள் மீதான வரி உயர்வு
- 30000 பேர் டெங்கு நோயால் பாதிப்பு
- போதையில் பேருந்தை ஒட்டிய 8 சாரதிகள் கைது
- 87 கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டினர் கைது
- லாரி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு
பொலிஸ் கண்ணீர்ப்புகை பிரயோகம் முல்லைத்தீவில் பதற்றம்
பொலிஸ் கண்ணீர்ப்புகை பிரயோகம் முல்லைத்தீவில் பதற்றம்
முல்லைத்தீவில் மீனவர்கள் இரு தரப்பாக போராட்டம்!அமைதியின்மை மை அடுத்து இரண்டு தரப்புக்கும் மீதும் பொலிஸார் கண்ணீர் மற்றும் நீர் தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.
முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்கு துணைபோகும் அதிகாரிகளை மாற்றுமாறு கோரி முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள
திணைக்கள அலுவலகத்தை 03 ஆம் திகதி காலை முற்றுகையிட்ட மீனவர்கள் தமக்கான தீர்வு கிடைக்கும் வரை போராடப் போவதாக தெரிவித்து தொடர் போராட்டத்தில் குதித்திருந்தனர்.
இவர்களது போராட்டம் இன்று (05) மூன்றாவது நாளாக தொடர்ந்து இடம்பெறுகிறது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மீனவர்கள் தொடர்ச்சியாக பல்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டுள்ளனர் குறிப்பாக மீன்பிடி நடவடிக்கைகளுக்கு எரிபொருள்
கிடைக்காத நிலையில் பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் தொழிலுக்கு சென்று வருகின்றனர்.
பொலிஸ் கண்ணீர்ப்புகை பிரயோகம் முல்லைத்தீவில் பதற்றம்
கடலில் இடம்பெறும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் காரணமாக மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்
பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் தொழிலுக்கு செல்லும் மீனவர்களான தமது நிலைமையை புரிந்து கொள்ளாத அதிகாரிகள் சட்டவிரோத
தொழிலுக்கு உடந்தையாகவுள்ளதாகவும் இவ்வாறான அதிகாரிகள் எமக்கு தேவையில்லை எனவும் அவர்களை உடனடியாக மாற்றம் செய்து தமக்கான ஒரு தீர்வினை வழங்குமாறு வலியுறுத்தி போராடி வருகின்றனர்
கடந்த 3ஆம் திகதியன்று காலை கடல் தொழில் நீரியல் வள திணைக்கள உத்தியோகத்தர்கள் அனைவரையும் உள்ளே செல்ல அனுமதிக்காத போதிலும் பின்னர் அனுமதித்தனர் .
தமது கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தை தேசிய கடற்றொழில் பணிப்பாளருக்கு அனுப்பி வைத்துள்ளதுடன் தமக்கான தீர்வுகள் வரும் வரையில் குறித்த அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படும் வரையில் தமது
போராட்டம் தொடரும் என அறிவித்த மீனவர்கள் கடற்தொழில் நீரில்வள திணைக்களத்தின் நுழைவாயிலுக்கு அருகில் கொட்டகை அமைத்து தொடர் போராட்டத்தில் மீனவர்கள் தற்போதும் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் 24 சங்கங்களை சேர்ந்த மீனவர்கள் குறித்த போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்
இந்நிலையில் குறித்த மீனவர்கள் குற்றச்சாட்டுக்களை வைத்த கொக்கிளாய் சாலை பகுதிகளில் தென்பகுதியில் இருந்து வருகைதந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற மீனவர்கள் மற்றும் மாத்தளன்
பகுதிகளில் மீன்பிடியில் ஈடுபடும் தமிழ் மீனவர்கள் முஸ்லிம் மீனவர்கள் என சுமார் 300 பேர் முல்லைத்தீவு பேருந்து நிலையம் அருகே காலை பதினொரு
மணியளவில் போராட்டத்தை ஆரம்பித்து முல்லைத்தீவு கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளை மாற்ற வேண்டாம் என கோரி போராட்டத்தை ஆரம்பித்தனர்
பொலிஸ் கண்ணீர்ப்புகை பிரயோகம் முல்லைத்தீவில் பதற்றம்
இந்நிலையில் குறித்த மீனவர்கள் மற்றும் ஏற்கெனவே போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற மீனவர்கள் இடையே முரண்பாடுகள் ஏற்படலாம் என்ற நிலையில் பொலிஸார் போராட்டக்காரர்கள் கடற்றொழில் நீரியல் வள
திணைக்கள அலுவலகம் நோக்கி செல்லாத வகையில் முல்லைத்தீவு இலங்கை வங்கிக்கு முன்பாக ஒரு வீதித்தடையும் தொடர் போராட்டத்தில் ஈடுபடும்
மீனவர்கள் போராட்டக்காரர்களை நோக்கி வரமுடியாத வகையில் மற்றுமொரு வீதித் தடையையும் ஏற்ப்படுத்தியிருந்தனர் .
இந்நிலையில், அதிகாரிகளை மாற்ற வேண்டாம் என கோரிய போராட்டக்காரர்கள் இலங்கை வங்கி முன்பாக பொலிஸார் அமைத்திருந்த
வீதித்தடையை உடைத்து கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலகம் நோக்கி செல்ல முற்ப்பட்டபோது போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் செய்தனர்.
இதனையடுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்ற மீனவர்கள் வீதித்தடையை உடைத்து செல்ல முற்பட்ட போது அவர்கள் மீதும் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் செய்தனர் இதன்போது பாதிக்கப்பட்ட ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகங்கள் காரணமாக அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டிருந்தது.
இதன் பின்னர் கலைந்து சென்ற போராட்டக்காரர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அலுவலக
வாயிலில் அமைக்கப்பட்ட கொட்டகையில் போராடி வரும் அதேவேளை அதிகாரிகளை மாற்ற வேண்டாம் என்று கேட்டு
போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் மாவட்ட செயலக முன்றலில் போராடி வருகின்றனர்.














