Posted in உலக செய்திகள்

சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்க முயற்சி

சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்க முயற்சி

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவருக்கும் இடையே சசிகலா வி‌ஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள் பலர் கருத்து சொல்ல தயக்கம் காட்டி வருகின்றனர்.

சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்க முயற்சி- ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது
ஓ.பன்னீர்செல்வம்
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

சென்னை:

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்து சென்னை திரும்பிய சசிகலா சட்டசபை தேர்தலின்போது அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்.

அதன்பிறகு தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சியை பிடிக்க முடியாமல் போனதால் மீண்டும் அரசியல் களத்தில் இறங்கி உள்ளார். அ.தி.மு.க. பொதுச்செயலாளர் நான் தான் என்று கூறி வரும் சசிகலா அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் தொலைபேசியில் பேசி வந்தார்.

இது அ.தி.மு.க. தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. சசிகலாவுடன் போனில் பேசியவர்களை கட்சியில் இருந்து நீக்கினார்கள். சசிகலாவுடன் யாரும் எந்தவித தொடர்பும்

வைத்துக் கொள்ளக்கூடாது. அப்படி வைத்தால் கட்சி சார்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அ.தி.மு.க.வில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

இந்த நிலையில் அ.தி.மு.க. பொன்விழா கொண்டாடப்படும் இந்த சூழலில் சசிகலா மீண்டும் தீவிர அரசியலில் இறங்கி உள்ளார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா நினைவிடங்களுக்கு சென்று அஞ்சலி

செலுத்திய அவர், எம்.ஜி.ஆர். வாழ்ந்த ராமாவரம் தோட்டத்துக்கு சென்று நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.

அவர் பங்கேற்ற நிகழ்ச்சியில் ‘அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா’ என்ற கல்வெட்டும் வைக்கப்பட்டது. அடுத்தக்கட்டமாக சசிகலா மாவட்டம் தோறும் சுற்றுப்பயணம் சென்று கட்சி நிர்வாகிகளை சந்திக்க உள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

இது குறித்து அண்மையில் கருத்து தெரிவித்து இருந்த அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சசிகலாவுக்கு அ.தி.மு.க.வில் இடமில்லை. அவர் பொழுதுபோகாமல் பேசிக்

கொண்டு இருக்கிறார். சூரியனை பார்த்து… என்று தொடங்கும் ஒரு வரியை சொல்லி, அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும் என்று பதில் அளித்தார்.

அ.தி.மு.க. கட்சி நாங்கள் தான். சசிகலாவுக்கும் அ.தி.மு.க.வுக்கும் சம்பந்தம் இல்லை. இதை கோர்ட்டும் சொல்லிவிட்டது. தேர்தல் கமி‌ஷனும் கூறி விட்டது என்று பரபரப்பாக பேட்டி அளித்தார்.

இந்த சூழலில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மதுரையில் பேட்டி அளித்த போது, “சசிகலா அ.தி.மு.க.வில் சேர்க்கப்படுவாரா?” என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது ஓ.பன்னீர்செல்வம் பதில் அளிக்கையில், “அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். ஏற்றுக்கொள்வதும், ஏற்றுக்கொள்ளாததும் மக்கள் விருப்பம் ஆகும். அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். ஆரம்பித்த இயக்கம். தொண்டர்கள் இயக்கமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமைக் கழக நிர்வாகிகள் சேர்ந்து கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பார்கள்” என்றார்.

அப்போது சசிகலா குறித்து எடப்பாடி பழனிசாமி சர்ச்சைக்குரிய முறையில் விமர்சித்து பேசியிருப்பது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு, அரசியலில் கண்ணியத்துடன் பேச வேண்டும் என்றும் கூறினார்.

இந்த பேட்டி அ.தி.மு.க.வில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஓ.பன்னீர்செல்வத்தின் பேட்டி குறித்து அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி நேற்று உடனே பதில் அளித்தார்.

சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்க்கக்கூடாது என தெளிவான முடிவை அ.தி.மு.க. தலைமைக்கழக நிர்வாகிகள் முடிவு செய்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். சசிகலாவுக்கு ஆதரவாக செயல்பட்ட நிர்வாகிகள் வெளியேற்றப்பட்டு உள்ளனர். எனவே சசிகலாவை மீண்டும் அ.தி.மு.க.வில் சேர்க்கும் கேள்விக்கே இடமில்லை என்று கூறினார்.

இதேபோல் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் ஓ.பன்னீர்செல்வம் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பேட்டி அளித்தார். அ.தி.மு.க. பொதுக்குழுவில் சசிகலா ஏற்கனவே நீக்கப்பட்டு விட்டார். அதில் ஓ.பன்னீர்செல்வம் உள்பட அனைவரும் கையெழுத்து போட்டுள்ளனர்.

சசிகலாவுக்கு எதிராக தர்மயுத்தம் நடத்திதான் ஓ.பன்னீர்செல்வம் முதலில் வெளியே வந்தார் என்றும் கூறி இருந்தார். அ.தி.மு.க.வில் சசிகலா விவகாரம் இப்போது பெரும் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

சசிகலா

எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர். ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்து இதற்கு நேர்மாறாக உள்ளது. இது கட்சியில் விவாத பொருளாக மாறி வருகிறது. தலைமைக்கழக நிர்வாகிகள் ஒன்று கூடி இதில் என்ன முடிவு எடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அ.தி.மு.க.வின் மூத்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், “அ.தி.மு.க.வின் பொதுக்குழு வருகிற டிசம்பர் மாதம் கூடுகிறது. இந்த கூட்டத்தில் சசிகலாவை சேர்ப்பதா? வேண்டாமா? என்பது குறித்து காரசார விவாதம் கண்டிப்பாக இடம்பெறும். இதில் ஒரு முடிவு தெரிந்து விடும்” என்றார்.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவருக்கும் இடையே சசிகலா வி‌ஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதால் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்கள் பலர் கருத்து சொல்ல தயக்கம் காட்டி வருகின்றனர்.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி இருவரும் ஒரு முடிவுக்கு வரட்டும். அதுவரை மவுனம் காப்பதுதான் நல்லது என்று கருத்து தெரிவித்தனர்.

எடப்பாடி பழனிசாமி வருகிற 30-ந்தேதி மதுரை செல்கிறார். அங்கிருந்து பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்த உள்ளார்.

அப்போது அவர், நிருபர்களை சந்திக்கும்போது சசிகலா விவகாரம் குறித்து தெளிவுப்படுத்துவார் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவித்து உள்ளனர். ஓ.பன்னீர்செல்வத்தின் கருத்து குறித்தும் தனது நிலைப்பாட்டை எடப்பாடி பழனிசாமி வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Posted in உலக செய்திகள்

ஆஸ்பத்திரியில் எடப்பாடி பழனிசாமி

ஆஸ்பத்திரியில் எடப்பாடி பழனிசாமி

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை சென்னை எம்.ஜி.எம். ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை எம்.ஜி.எம். ஆஸ்பத்திரியில் எடப்பாடி பழனிசாமி சிகிச்சைக்காக அனுமதி
எடப்பாடி பழனிசாமி
இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை 6.30 மணிக்கு சென்னை அமைந்தகரை நெல்சன் மாணிக்கம் ரோட்டில் உள்ள எம்.ஜி.எம். ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

அவர் முதல்-அமைச்சராக இருந்த போது இந்த ஆஸ்பத்திரியில் ஏற்கனவே குடல் இறக்கம் அறுவை சிகிச்சை செய்திருந்தார்.

இந்த நிலையில் உடல் பரிசோதனைக்காக மீண்டும் அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் என்டோஸ்கோபி பரிசோதனை மேற்கொண்டதாக தெரிகிறது.

உடல் பரிசோதனை முடிந்த நிலையில் இன்று அவர் வீடு திரும்பினார்.

    Posted in Uncategorized

    மதுசூதனனை ஒரே நேரத்தில் பார்க்க வந்த எடப்பாடி பழனிசாமி, சசிகலா

    மதுசூதனனை ஒரே நேரத்தில் பார்க்க வந்த எடப்பாடி பழனிசாமி, சசிகலா

    தேர்தல் நேரத்தில் சிறையில் இருந்து விடுதலையான சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக முதலில் அறிவித்தார். பின்னர் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்று அறிக்கை வெளியிட்டு ஒதுங்கி இருந்தார்.

    ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூர் சிறைக்கு சென்றார்.

    இதன்பிறகு எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர் செல்வமும் ஒன்றிணைந்து அவரை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கினார்கள்.

    தேர்தல் நேரத்தில் சிறையில் இருந்து விடுதலையான சசிகலா தீவிர அரசியலில் ஈடுபடப்போவதாக முதலில் அறிவித்தார். பின்னர் அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை என்று அறிக்கை வெளியிட்டு ஒதுங்கி இருந்தார்.

    தேர்தலில் அ.தி.மு.க. தோல்வி அடைந்ததை தொடர்ந்து கடந்த சில நாட்களாக அ.தி.மு.க. வினருடன் அவர் பேசிய பரபரப்பான ஆடியோக்கள் தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கிறது. அ.தி.மு. க.வினருடன் பேசும் ஆடியோக்களில், ‘நான் மீண்டும் வந்துவிடுவேன்’ என்று அவர் கூறி வருகிறார். இதனால் சசிகலா மீண்டும் தீவிர அரசியலில் ஈடுபடலாம் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனனை சந்திக்க சசிகலா இன்று மதியம் 12.45 மணி அளவில் திடீரென வருகை தந்தார்.

    அதிமுக

    அவரது காரில் அ.தி.மு.க. கொடி கட்டப்பட்டு இருந்தது. ஆஸ்பத்திரிக்கு சென்ற சசிகலா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள மதுசூதனனின் உடல் நிலை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

    அ.தி.மு.க.வினருடன் தொலைபேசி வாயிலாக மட்டும் பேசிக்கொண்டிருந்த சசிகலா முதல் முறையாக கட்சியின் மூத்த நிர்வாகியான மதுசூதனனின் உடல்நிலை பற்றி கேட்டறிய ஆஸ்பத்திரிக்கே நேரில் சென்றிருப்பது, அ.தி.மு.க. வினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    சசிகலா அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு வருவதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு தான் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி, மதுசூதனனின் உடல்நிலை பற்றி விசாரிப்பதற்காக ஆஸ்பத்திரிக்கு வந்திருந்தார்.

    எடப்பாடி பழனிசாமி ஆஸ்பத்திரிக்குள் இருக்கும் போது சசிகலாவின் கார் ஆஸ்பத்திரி வளாகத்துக்குள் நுழைந்தது.

    சசிகலா, மதுசூதனனை சந்திக்க சென்றபோது எடப்பாடி பழனிசாமிஆஸ்பத்திரியில் இல்லை. அவர் அங்கிருந்து உடனடியாக வெளியேறிவிட்டார்.

    பெங்களூர் சிறையில் இருந்து விடுதலையான பிறகு சசிகலா தி.நகரில் உள்ள வீட்டிலேயே இருந்து வருகிறார். இதுவரை வெளியில் வந்ததில்லை.

    முதல்முறையாக இன்று வீட்டில் இருந்து அவர் வெளியில் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.