எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த வருடத்தை விட எச்.ஐ.வி தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கையின் தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்பு திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ஜானகி விதானபத்திரன தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் 20 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் பாலுறவில் ஈடுபடுபவர்கள் அதிக ஆபத்தில் உள்ளனர் என்று அவர் கூறினார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட டொக்டர் ஜானகி விதானபத்திரன இதனை தெரிவித்துள்ளார்.