Tag: உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு
சதுப்பு நிலத்தில் இருந்து உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு
சதுப்பு நிலத்தில் இருந்து உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு
பமுனுகம, நில்சிரிகம பிரதேசத்தில் சதுப்பு நிலத்தில் இருந்து கொலை செய்யப்பட்ட நபரின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
துடெல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த மாதம் 20ஆம் திகதி முதல் குறித்த நபர் காணாமல் போய் இருந்ததாக அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
சதுப்பு நிலத்தில் இருந்து உடல் பாகங்கள் கண்டுபிடிப்பு
காணாமல் போன நபருடன் கடைசியாக தொடர்பில் இருந்த ஒருவரை அடையாளம் கண்ட பொலிஸார், அவரை பமுனுகம, போபிட்டிய பிரதேசத்தில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் தனிப்பட்ட தகராறு காரணமாக கூரிய ஆயுதத்தால் தாக்கி குறித்த நபரை கொலை செய்துள்ளமை தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட நபரின் உடல் பாகங்கள் நில்சிரிகம சதுப்பு நிலத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், அந்த இடத்தில் பொலிஸ் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட 42 வயதுடைய சந்தேக நபர் வெலிசர நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
- ஜூலை 1 முதல் வரி அலறும் முதலாளிகள்

- 24 மணி நேரத்தில் 1000-க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள் பதிவு

- விளையாடிக் கொண்டிருந்த வெளிநாட்டவர் உயிரிழந்தார்

- அதிகாரி பயிற்சிப் படிப்புகளுக்கு இலங்கை இராணுவம் விண்ணப்பங்களை வரவேற்கிறது

- பணம் பறிக்கும் போலி பொது சுகாதார ஆய்வாளர்களிடம் எச்சரிக்கை

- இலங்கை கறுப்பு பட்டியலில் இணைப்போம் ICC மிரட்டல்

- பொசோன் திருவிழாவிற்கான சிறப்புப் பாதுகாப்பு
- வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- 17 சந்தேக நபர்கள் கைது








