Tag: இலங்கை அர்ப்பணிக்கும்
அணு ஆயுத மட்டுப்படுத்தலுக்காக இலங்கை அர்ப்பணிக்கும்
அணு ஆயுத மட்டுப்படுத்தலுக்காக இலங்கை அர்ப்பணிக்கும்
முழுமையான அணு-சோதனை தடை ஒப்பந்தத்தை (Comprehensive Nuclear-Test-Ban Treaty) அங்கீகரிப்பதாக அறிவிப்பதன் மூலம் அணு ஆயுதக் குறைப்பு மற்றும் அணு ஆயுத கட்டுப்பாட்டுக்கான இலங்கையின் உறுதிப்பாட்டை வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி உறுதிப்படுத்தினார்.
முழுமையான அணு சோதனை தடை ஒப்பந்தம் (CTBT) தொடர்பான ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரிவு 14 மாநாட்டின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட ஊடக சந்திப்பிலேயே வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் இதனை தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்து தெரிவித்த வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, கடந்த ஜூலையில் முழுமையான அணு-சோதனை தடை ஒப்பந்தத்தை (CTBT) இலங்கை உத்தியோகபூர்வமாக ஒப்பந்தத்தை அங்கீகரித்தாகவும், இலங்கையின் முழுமையான அணு-சோதனை தடை ஒப்பந்தத்தை (CTBT) அணுவாயுதக் குறைப்பு மற்றும் அணு ஆயுதக் கட்டுப்பாடு ஆகியவற்றின் நீண்டகால மற்றும் நிலையான கொள்கையுடன் ஒத்துப்போகிறது என்றும் தெரிவித்தார்.
1996 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், முழுமையான அணு-சோதனை தடை ஒப்பந்தத்தில் (CTBT) கைசாத்திட்ட 13ஆவது நாடாக இலங்கை விளங்குகிறது. அதன்படி, கண்டி பல்லேகலவில் துணை நில அதிர்வு நிலையமும் நிறுவப்பட்டது.
அணு ஆயுத மட்டுப்படுத்தலுக்காக இலங்கை அர்ப்பணிக்கும்
இணக்கப்பாட்டை செயல்படுத்துவதை ஊக்குவிப்பதற்காக, முழுமையான அணு – சோதனை தடை ஒப்பந்த அமைப்பின் (CTBTO) நிர்வாகப் பணிப்பாளர் பிலாய்ட் மற்றும் முழுமையான குழுவின் இடைவிடாத முயற்சிகளையும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி பாராட்டினார்.
மேலும், 1996 இல் ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டதில் இருந்து, தள ஆய்வுகள் (OSI) பிரிவுடன் நெருக்கமான ஒத்துழைப்பு உட்பட, முழுமையான அணு-சோதனை தடை ஒப்பந்த அமைப்பின் (CTBTO) பணிகளுக்கு இலங்கை செயற்திறன்மிக்க வகையில் ஆதரவளித்துள்ளது.
உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்ப வல்லுநர்கள் உட்பட 180 பேரின் பங்கேற்புடன் 2025 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள அடுத்த தள ஆய்வுகள் (OSI) கூட்டு களப்பயிற்சியை (OSI) இலங்கை நடத்தும் என்றும் அமைச்சர் கூறினார்.
முழுமையான அணு-சோதனை தடை ஒப்பந்த அமைப்பின் (CTBTO) தள ஆய்வு திறன்களை மேம்படுத்துவதற்கும் மேலும் முன்னேற்றுவதற்கான வாய்ப்புகளை அடையாளம் காண்பதற்கும் இந்த பயிற்சி ஒரு முக்கியமான வாய்ப்பாக அமையும்.
இலங்கை இந்த உடன்படிக்கையை ஏற்று 26 ஆண்டுகள் நிறைவடைகிறது. மற்றும் உலகளாவிய அணு ஆயுதக் குறைப்பு மற்றும் அணு ஆயுத கட்டுப்பாடுகளை அடைவதற்கான நிர்வாக பொறிமுறைகளில் ஒரு அடிப்படை மைல்கல்லாக அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
முழுமையான அணு – சோதனை தடை ஒப்பந்தம் (CTBT) அணுசக்தி சோதனைக்கு எதிராக ஒரு குறிப்பிடத்தக்க கூட்டு நம்பிக்கையை வளர்ப்பதற்காக செயற்படுவதுடன் மேலும் பனிப்போரின் ஆபத்தான அணு ஆயுதப் போட்டியை திறம்பட கட்டுப்படுத்தியது என்றார்.
மேலும், ஒப்பந்தத்தின் சரிபார்ப்பு பொறிமுறையானது அணு ஆயுதக் குறைப்புக்கு அப்பால் சிவில் மற்றும் அறிவியல் நோக்கங்கள் வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளதுடன், ஒரு வலுவான சர்வதேச கண்காணிப்புக் கட்டமைப்பு மற்றும் சர்வதேச தரவு மையமொன்றையும் நிறுவியுள்ளதாகவும் தெரிவித்தார்.
அணு ஆயுத மட்டுப்படுத்தலுக்காக இலங்கை அர்ப்பணிக்கும்
அதிகரித்து வரும் புவிசார் அரசியல் பதட்டங்கள் மற்றும் அண்மைக்கால சவால்களுக்கு மத்தியில், அணுஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தின் (NPT) மீளாய்வு மாநாட்டில், உலகளாவிய பாதுகாப்பைப் பேணுவதில் விரிவான முழுமையான அணு-சோதனை தடை ஒப்பந்தம் (CTBT) முக்கிய பங்கை இலங்கை வலியுறுத்தியதோடு, இலங்கை அனைத்து நாடுகளுக்கும், குறிப்பாக ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதை அவசியப்படுத்தும் நாடுகள், அங்கீகரிப்பதற்கு உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
அணுவாயுத மயமாக்கல் மற்றும் நிராயுதபாணியாக்கத்திற்கான இலங்கையின் அர்ப்பணிப்பு உறுதியாக உள்ளது, மேலும் இந்த முக்கியமான இலக்குகளை அடைவதற்கு இலங்கை தொடர்ந்து ஆதரவளிப்பதாகவும் உறுதியளித்தார்.
அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் (NTPNW) இலங்கை இணைவதற்கான சட்டரீதியான ஆவணம் கடந்த நாட்களில் கையளிக்கப்பட்டதை அமைச்சர் அலி சப்ரி நினைவு கூர்ந்த அமைச்சர், முழுமையான அணு-சோதனை தடை ஒப்பந்தத்தை (CTBT) அங்கீகரிப்பதன் ஊடாக, அணு ஆயுதக் குறைப்பு மற்றும் நிராயுதமாக்கல் மூலம் உலகளாவிய அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான இலங்கையின் நிலைபேறான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
- ஜனாதிபதி செயலாளர் ஊழல் விசாரிக்க நாமல் சவால்
by நிருபர் காவலன்ஜனாதிபதி செயலாளர் ஊழல் விசாரிக்க நாமல் சவால் ஜனாதிபதி செயலாளர் ஊழல் விசாரிக்க நாமல் சவால் ஜனாதிபதி செயலாளர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியை நாமல் வலியுறுத்துகிறார் ஜனாதிபதி செயலாளர் தொடர்பான குற்றச்சாட்டு ஜனாதிபதி செயலாளர் தொடர்பான குற்றச்சாட்டுகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச கேட்டுக்கொண்டுள்ளார். அத்தகைய நடவடிக்கை, வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலுக்கான அரசாங்கத்தின்… - பொலன்னறுவையில் அதிகபட்ச வெப்பநிலை 37.2°C பதிவானது
by நிருபர் காவலன்பொலன்னறுவையில் அதிகபட்ச வெப்பநிலை 37.2°C பதிவானது பொலன்னறுவையில் அதிகபட்ச வெப்பநிலை 37.2°C பதிவானது வானிலை ஆய்வுத் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட வெப்பநிலைத் தரவுகளின்படி, இலங்கையின் மிக உயர்ந்த வெப்பநிலையாக பொலன்னறுவையில் இன்று (22) 37.2°C பதிவாகியுள்ளது. வறண்ட மண்டலம் மற்றும் கிழக்கு மண்டலங்களில் வறண்ட மண்டலம் மற்றும் கிழக்கு மண்டலங்களில் உள்ள பல பகுதிகளிலும் அதிக வெப்பநிலை நிலவியது. முல்லைத்தீவு மற்றும் மொனராகலையில் 36.7°C வெப்பநிலையும், பொத்துவிலில் 36.1°C வெப்பநிலையும் பதிவாகியுள்ளது. திருகோணமலை மற்றும் மாத்தளையில் 36.0°C வெப்பநிலை… - வறட்சி தீவிரமடைவதால் 81,000 பேர் பாதிப்பு
by நிருபர் காவலன்வறட்சி தீவிரமடைவதால் 81,000 பேர் பாதிப்பு வறட்சி தீவிரமடைவதால் 81,000 பேர் பாதிப்பு ஏழு மாவட்டங்களில் 81,000-க்கும் மேற்பட்ட மக்கள் நிலவும் வறண்ட வானிலையின் தாக்கத்தை எதிர்கொண்டுள்ளதாகவும், குடிநீர் கிடைப்பது குறித்த கவலைகள் அதிகரித்து வருவதாகவும் பேரிடர் மேலாண்மை மையம் (DMC) தெரிவித்துள்ளது. எல் நினோ நிகழ்வு எல் நினோ நிகழ்வு தொடர்பான நிலைமைகளால், 23 பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள 25,628 குடும்பங்களைச் சேர்ந்த 81,865 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை மையம் கூறியது. மொனராகலையில்… - சுறா மீன்பிடித் தொழிலின் நிர்வாகத்தை வலுப்படுத்த இலங்கை முடிவு
by நிருபர் காவலன்சுறா மீன்பிடித் தொழிலின் நிர்வாகத்தை வலுப்படுத்த இலங்கை முடிவு சுறா மீன்பிடித் தொழிலின் நிர்வாகத்தை வலுப்படுத்த இலங்கை முடிவு இலங்கையின் சுறா மீன்பிடித் தொழிலின் நிர்வாகத்தை சர்வதேசத் தரங்களுக்கு இணங்க வலுப்படுத்தும் ஒரு திட்டத்தை மீன்பிடி, நீர்வாழ் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு தொடங்கியுள்ளது. சுறா மீன்பிடியின் நிலையான நிர்வாகம் சுறா மீன்பிடியின் நிலையான நிர்வாகம் குறித்த ஒரு சிறப்புக் கலந்துரையாடல், அதன் செயலாளர் டாக்டர் பி.கே. கொலித்த கமல் ஜினதாசவின் தலைமையில், மீன்பிடி மற்றும் நீர்வாழ்… - ஒடிசா கடற்கரையில் பனாமா கொடியுடன் சென்ற சரக்குக் கப்பல் மூழ்கியது
by நிருபர் காவலன்ஒடிசா கடற்கரையில் பனாமா கொடியுடன் சென்ற சரக்குக் கப்பல் மூழ்கியது ஒடிசா கடற்கரையில் பனாமா கொடியுடன் சென்ற சரக்குக் கப்பல் மூழ்கியது; 2 பேர் மீட்கப்பட்டனர், 22 பேர் காணவில்லை ஒடிசாவின் பாராதீப் கடற்கரையிலிருந்து ஒடிசாவின் பாராதீப் கடற்கரையிலிருந்து சுமார் 240 கடல் மைல் தொலைவில், வங்காள விரிகுடாவில் சனிக்கிழமையன்று, 24 மாலுமிகளை ஏற்றிச் சென்ற பனாமா கொடியுடன் சென்ற ஒரு சரக்குக் கப்பல் மூழ்கியது. இதைத் தொடர்ந்து, இந்திய கடலோரக் காவல்படை (ICG) மற்றும் இந்திய…







