Tag: அலைபேசி
கண்காணிப்பாளர்களுக்கு அலைபேசி எடுத்துச் செல்ல தடை
கண்காணிப்பாளர்களுக்கு அலைபேசி எடுத்துச் செல்ல தடை
கண்காணிப்பாளர்களுக்கு அலைபேசி எடுத்துச் செல்ல தடை ,இம்முறை, கல்விப் பொதுதராதர உயர்தர பரீட்சை நடைபெறும் பரீட்சை
நிலையங்களுக்குள், உதவி அதிபர் உட்பட கண்காணிப்பு ஆசிரியர்களுக்கு அலைபேசிகளை எடுத்துச் செல்லதடை விதிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை மையத்தின் நிலைய அதிகாரி மற்றும் மேலதிக கண்காணிப்பாளர் மட்டுமே அலைபேசிகளை எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவர்.
கடந்த காலங்களில் எழுந்த பிரச்சினைகள் காரணமாக, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், பரீட்சை காலத்தில் தேர்வு கண்காணிப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி, பரீட்சை திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு மேலதிகமாக, மாகாண மற்றும் பிராந்திய அலுவலகங்களின் அதிகாரிகளும் கண்காணிப்புக்கு ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
ஒரு கண்காணிப்பாளர் 15 நாட்களில் 20 பரீட்சை மையங்களை கண்காணிக்க வேண்டும்
அலைபேசிகள் இறக்குமதி இருவர் கைது
அலைபேசிகள் இறக்குமதி இருவர் கைது
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வரி செலுத்தாமல் வெளியே கொண்டு செல்லப்பட்ட 323 அலைபேசிகள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்றைய தினம் (03) கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் குறித்த சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு அலைபேசிகளை ஏற்றிச் சென்ற வான் ஒன்றும் கொழும்பு – கட்டுநாயக்க நெடுஞ்சாலையில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.
இதேவேளை புதிய 246 பயன்படுத்தப்படாத அலைபேசிககளும், வெளிநாடுகளில் பயன்படுத்தப்படும் 77 அலைபேசிககளும் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அலைபேசிகள் இறக்குமதி இருவர் கைது
கைது செய்யப்பட்டவர்களில் கொழும்பு-12 பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞரும், வத்தளை பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய நபரும் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்புக்கு இந்தக் அலைபேசிககளை எடுத்துச்
செல்லும் போது, பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்ட போதே குறித்த கைது இடம்பெற்றுள்ளது,
கைப்பற்றப்பட்ட அலைபேசிகள், சட்டவிரோதமான முறையில் எடுத்துச் சென்ற இருவர் மற்றும் அவற்றை ஏற்றிச் செல்ல பயன்படுத்திய வேன் என்பன மேலதிக விசாரணைகளுக்காக பேலியகொட தலைமையக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.













