Tag: அம்புலன்ஸ்
அம்புலன்ஸ் வண்டியுடன் மோதி இடம்பெற்ற விபத்து
அம்புலன்ஸ் வண்டியுடன் மோதி இடம்பெற்ற விபத்து
சுவசெரிய நோயாளர் காவு வண்டியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் முன்னாள் கிராம உத்தியோகத்தர் ஒருவரும் ஐந்து வயதுச் சிறுமி ஒருவரும் படுகாயமடைந்துள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.
நவகத்தகம – கிரிமெடியாவ பிரதேசத்தில் இறுதிச் சடங்கு ஒன்றில் பங்கேற்பதற்காக மோட்டார் சைக்கிளில் பயணித்த 74 வயதுடைய முன்னாள் கிராம உத்தியோகத்தர் ஒருவரும் ஐந்து வயதுடைய உறவினர் ஒருவரின் மகளும் விபத்தில் சிக்கியுள்ளனர்.
மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் நவகத்தேகமவில் இருந்து கல்கமுவ நோக்கி சென்று மீண்டும் நவகத்தேகம நோக்கி மோட்டார் சைக்கிளை திருப்ப முற்பட்ட போது, ஆனமடுவவிலிருந்து கல்கமுவ நோக்கி பயணித்த சுவசெரிய நோயாளர் காவு வண்டியுடன் வாகனம் மீது மோதியுள்ளது.
அந்த நோயாளர் காவு வண்டியில் நோயாளி ஒருவர் இருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்தவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், அவரை கல்கமுவ ஆதார வைத்தியசாலையில் இருந்து அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுவசெரிய நோயாளர் காவு வண்டியின் சாரதியும் விபத்தில் காயமடைந்து கல்கமுவ ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றதுடன் ஐந்து வயதுடைய மகளும் கல்கமுவ ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை
நவகத்தகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அம்புலன்ஸ் வண்டி மீது தாக்குதல் – விசாரணைகள் ஆரம்பம்
அம்புலன்ஸ் வண்டி மீது தாக்குதல் – விசாரணைகள் ஆரம்பம்
ஹட்டன் பகுதியில் 1990 சுவசெரிய அம்பியுலன்ஸ் வண்டியின் ஓட்டுனர் மற்றும் உதவியாளர் மீது தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் இதுவரையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நபர் ஒருவர் மாடியில் இருந்து விழுந்துள்ளதாக இன்று (22) அதிகாலை 2 மணியளவில் 1990 என்ற இலக்கத்திற்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது.
இதனையடுத்து அப்பகுதிக்கு அம்பியுலன்ஸ் வண்டி சென்றுள்ளதுடன் இதன்போது மாடியில் இருந்து விழுந்ததாக
கூறப்பட்ட நபருக்கு எவ்வித காயங்களும் இல்லாத காரணத்தினால் அவரை வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளனர்.
இதன்போது அப்பகுதியில் மதுபோதையில் இருந்த சிலர் ஓட்டுனர் மற்றும் உதவியாளரான பெண்ணின் மீது தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றன







