08 கைதிகளுக்கு மூளைக் காய்ச்சல்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

08 கைதிகளுக்கு மூளைக் காய்ச்சல்

08 கைதிகளுக்கு மூளைக் காய்ச்சல்

காலி சிறைச்சாலையில் மேலும் 08 கைதிகள் மூளைக் காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியர் ஹேமந்த ரணசிங்க தெரிவித்தார்.

வீடியோ

மட்டு சிறையில் 46 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை
Posted in இலங்கை செய்திகள்

மட்டு சிறையில் 46 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை

மட்டு சிறையில் 46 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை

நத்தார் பண்டிகையை முன்னிட்டு மட்டக்களப்பு சிறையில் 46 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டனர்.

நத்தார் பண்டிகையை முன்னிட்டு 1,004 கைதிகளுக்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில் 15 பெண் கைதிகளும் 989 ஆண் கைதிகளும் அடங்குகின்றனர்.

அதற்கமைய, மட்டக்களப்பு சிறைச்சாலையில் 44 ஆண் கைதிகளும், 2 பெண் கைதி அடங்கலாக 46 கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மட்டு சிறையில் 46 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை

மட்டு சிறையில் 46 கைதிகள் பொது மன்னிப்பில் விடுதலை

மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரனின் தலைமையில் இடம்பெற்ற கைதிகள் விடுதலை செய்யப்படும் நிகழ்வில் மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை

, சர்வமத ஒன்றிய பிரதிநிதிகள், பிரதம ஜெயிலர் ஏ.பீ.பானுக தயந்த சில்வா உட்பட சிறைச்சாலை அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

சிறு குற்றம் புரிந்த மற்றும் தண்டணைப் பணம் செலுத்தாத கைதிகளே இன்று (25) இவ்வாறு பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டின் சகல சிறைச்சாலைகளையும் உள்ளடக்கிய வகையில் ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைவாக கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கி இன்று திகதி விடுதலை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ

பிரான்ஸல் 14 தமிழருக்கு சிறை
Posted in இலங்கை செய்திகள்

இன்றும் நாளையும் கைதிகளை பார்வையிடலாம்

இன்றும் நாளையும் கைதிகளை பார்வையிடலாம்

இன்றும் நத்தார் பண்டிகையான நாளையும் சிறை கைதிகளை உறவினர்கள் பார்வையிட சந்தர்ப்பமளிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை விதிமுறைகள் மற்றும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நாட்டின் அனைத்து சிறைச்சாலைகளிலும் இந்த நடவடிக்கைகள்

முன்னெடுக்கப்படுவதாக ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலை ஆணையாளர் காமினி பீ திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கைதிக்கு தேவையான உணவை மாத்திரமே உறவினர்கள் கொண்டுவர முடியும் என்பதுடன் தடைசெய்யப்பட்ட பொருட்கள் சிறைச்சாலைக்குள் அனுமதிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

வீடியோ

தமிழ் கைதிகள் சிலர் விடுவிக்க ஜனாதிபதி ரணில் உத்தரவு
Posted in இலங்கை செய்திகள்

கைதி சிறையில் மர்மமான முறையில் மரணம்

கைதி சிறையில் மர்மமான முறையில் மரணம்

மட்டக்களப்பு சிறைச்சாலையில் இருந்த 47 வயதுடைய ஆண் கைதி ஒருவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், குறித்த கைதியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் நேற்று (29) உத்தரவிட்டார்.

கொக்கட்டிச்சோலை முனைக்காடு பிரதேசத்தைச் சோந்த 47 வயதுடைய சோமசுந்தரம் துரைராஜா என்பவரே உயிரிழந்துள்ளார்.

கைதி சிறையில் மர்மமான முறையில் மரணம்

குறித்த நபர் நீதிமன்ற வழக்கு ஒன்றில் ஆஜராகாத நிலையில் நீதிமன்ற பிடிவிறாந்து கட்டளைக்கமைய கடந்த 22 ம் திகதி கொக்கட்டிச்சோலை

பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்ட நிலையில் அவரை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் குறித்த நபர் சிறைச்சாலையில் செவ்வாய்க்கிழமை (28) மயங்கி வீழ்ததையடுத்து வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்த நிலையில் சடலம் பிரேத அறையில் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் சம்பவம் இடம்பெற்ற இடமான சிறைச்சாலைக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் நேற்று புதன்கிழமை

(29) சென்று பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார்.

இது தொடர்பான மேலதிக விசாணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்

இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவிற்கு எதிராக ஒரு லட்சம் மக்கள் போர்க்கொடி
Posted in உலக செய்திகள்

கைதிகளை விடுவிக்கும் வரை சமரச பேச்சுக்கு இடமில்லை இஸ்ரேல்

கைதிகளை விடுவிக்கும் வரை சமரச பேச்சுக்கு இடமில்லை இஸ்ரேல்

ஹமாஸ் அமைப்பினாரால் சிறைபிடியது செல்ல பட்ட 244 கைதிகள் விடுதலையாகும் வரை சமரச பேச்சிற்கு இடமில்லை என இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு அறிவித்துள்ளார் .

நாம் மேற்கொள்ளும் தரை வழி யுத்தம் சிறைக்கைதிகளை மீட்பதற்கான யுத்தமே ,ஹமாஸ் அமைப்பினர் அழிக்க பட்டு அவர்களிடம் உள்ள கைதிகளை விரைவில் மீட்டு வருவோம் என நெதன்யாகு முழங்கியுள்ளார் .

கைதிகளை விடுவிக்கும் வரை சமரச பேச்சுக்கு இடமில்லை இஸ்ரேல்

எமது நாட்டுக்கும் மக்களுக்கும் எதிராக செயல் பட்ட காசா ஆயுத குழுவை முற்றாக அழிக்கும் வரை எமது
இந்த போர் ஓயாது எனவும் ,அதற்காக என்ன விலையும் இஸ்ரேல் கொடுக்க தயங்காது என அவர் தெரிவித்துள்ளார் .

இவரது கடும் போக்கிற்கு எதிராக இஸ்ரேலிய மக்கள் நெதன்யாகு பதவி,விலக வேண்டும் என
கோரி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

வீடியோ

இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவிற்கு எதிராக ஒரு லட்சம் மக்கள் போர்க்கொடி
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை

இஸ்ரேல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை

இஸ்ரேல் காசா யுத்தம் முடிவுக்கு வரும் நிலை எட்டியுள்ளது ,கைதிகளின் உறவினர்களைசந்தித்து பேச்சில் ஈடுபட்ட


இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அவர்கள் ,தமது சிறைகளில் உள்ள பலஸ்தீன கைதிகளை விடுவிக்க
நடவடிக்கை மேற்கொள்ள படும் எனவும் ,அதன் ஊடாக சிறைக்கைதிகளை தாம் மீட்கும்


நடவடிக்கை சுலபமாக்க பட்டு அவர்கள் விரைவில் வீட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள் என தெரிவித்துள்ளார் .

தரைவழியாக இராணுவ நடவடிக்கையை தீவிர படுத்தி ,காசா மீது சரமாரி குண்டு


தாக்குதலை மேற்கொண்டு வந்த நிலையில் ,தற்போது அவை ஓய்வு பெறும் நிலைக்கு ,

இஸ்ரேல் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை


இஸ்ரேல் வருகிறது என்பதற்கான முன் அறிவிப்பாக இதனை எடுத்து கொள்ளலாம் .

தமது அரசின் மீது நம்பிக்கை அற்று சிறைக்கைதிகள் உறவினர்கள் போரில் குதித்து
தொடர் போராட்டங்கள் நடத்தி வந்த த நிலையில் ,தனது கடும் போக்கை விலக்கி ,
இந்த அறிவிப்பை அவர் விடுத்துள்ளார் .

போர் பூத்த பூமியில் வெள்ளை புறா பறக்க போகிறது என்பதற்கான முக்கிய
சிக்கனலாக இதனை எடுத்து கொள்ளலாம்

கைதிகளை விடுவிக்க நாங்க ரெடி ஹமாஸ் அறிவிப்பு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

கைதிகளை விடுவிக்க நாங்க ரெடி ஹமாஸ் அறிவிப்பு

கைதிகளை விடுவிக்க நாங்க ரெடி ஹமாஸ் அறிவிப்பு

காசா பகுதியில் உள்ள ஹமாஸின் தலைவர் யாஹ்யா அல்-சின்வார்
எங்களிடம் உள்ள அனைத்து கைதிகளையும் விடுவிக்க நாங்கள் தயார் எனவும் .


ஆனால் இஸ்ரேல் சிறைகளில் உள்ள ஆறாயிரத்துக்கு அதிகமான அனைத்து பலஸ்தீன கைதிகளும் விடுவிக்க படவேண்டும் .

அவ்வாறு ,விடுதலை செய்ய பட்டால் ,எம்மிடம் உள்ள கைதிகள் எதுவித
அச்சுறுத்தலும் இன்றி விடுவிக்க படுவார்கள் என அவர் தெரிவித்தார் .

நாம் கைதிகள் பரிமாற்ற நடவடிக்கையை மேற்கொள்ள தயராக உள்ளோம்,
,இஸ்ரேலை அதற்கு தயாரா இல்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார் .

நாம் சிறை பிடித்து வைத்திருந்த கைதிகள் பகுதிகளிலி இஸ்ரேல் நடத்திய குண்டு தாக்குதலில் ,
இதுவரை ஐம்பதுக்கு பேர்பலியாகியுள்ளனர் என்கின்ற விடயத்தை ஹமாஸ் தெரிவித்துள்ளது .

கைதிகளை விடுவிக்க நாங்க ரெடி ஹமாஸ் அறிவிப்பு

தமது கைதிகளில் ஐம்பது பேர் பலியானதை அடுத்தே இஸ்ரேல் அரசுக்கு
எதிராக மக்கள் வீதி இறங்கி தொடர் போராட்டத்த்தில் குதித்துள்ளனர் .

காசா மீது குண்டு தாக்குதலை இஸ்ரேலை இராணுவம் நடத்திட ,
இஸ்ரேலுக்குள் இஸ்ரேல் மக்களை ஹமாஸ் தூண்டி விட்டுள்ளது .

கைதிகளை விடுவிக்க நாங்க ரெடி தாங்க ஆனல் உங்கள் ஆள்
அதற்கு இணங்க மறுக்கிறார் நாங்கள் என்ன பண்ண என்பதாக
தெரிவித்த விடயம் சிறந்த அரசியல் தந்திர நகர்வாக பார்க்க படுகிறது

வீடியோ .

கைதிகளை மீட்க இராணுவ நடவடிக்கை |isreal news|isreal attack|
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

கைதிகளை மீட்க இராணுவ நடவடிக்கை |isreal news|isreal attack|

கைதிகளை மீட்க இராணுவ நடவடிக்கை |isreal news|isreal attack|

கைதிகளை மீட்டெடு வரவே இராணுவ நடவடிக்கை ,
அணைத்து கைதிகளும் மீட்க படுவர் இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு ,காசா உளேள் நுழைய தயாராகும் இராணுவம்

இலங்கையில் கைதிகள் 50 பேர் தப்பி ஓட்டம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை சிறைகளில் வழியும் கைதிகள்

இலங்கை சிறைகளில் வழியும் கைதிகள்

இலங்கை சிறைகளில் கைதிகள் வருகையால் இட தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சிறைச்சாலை நாயகம் தெரிவித்துளளார் .

இலங்கை சிறைகளில் 13,241 கைதி கள் தங்க வைக்கும் வசதிகளே உள்ளன ,ஆனால் தற்போது 29 ஆயிரத்திற்கு மேற்பட்ட கைதிகள் உள்ளதினால், இந்த நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இவை இலங்கையில் பல்கி பெருகியுள்ள குற்ற செயல்கள் ,எண்ணிக்கையை எடுத்து காண்பிக்கிறது ,சட்டம் ,விதிகள் தளர்வு நிலையில் காணப்படுவதே இதற்கு கரணம் என படுகிறது

தமிழ் கைதிகள் சிலர் விடுவிக்க ஜனாதிபதி ரணில் உத்தரவு
Posted in இலங்கை செய்திகள்

தப்பி ஓடிய கைதி நீதிமன்றில் சரண்

தப்பி ஓடிய கைதி நீதிமன்றில் சரண்

போக்குவரத்து விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பூகொட நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேகநபர் ஒருவர் கைவிலங்குகளை கழற்றி விட்டு தப்பிச் சென்று அளுத்கடை நீதவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளதாக கிரிந்திவெல பொலிஸார் தெரிவித்தனர்.

கிரிந்திவெல பிரதேசத்தைச் சேர்ந்த துஷ்மந்த அவிஷ்க என்ற சந்தேக நபர் கடந்த மே மாதம் 9ஆம் திகதி கிரிந்திவெல பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சந்தேகநபர் பூகொட நீதிமன்றத்தின் உத்தரவைப் பெற்று சிறைச்சாலை ஊடாக அளுத்கடை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நோக்கில் மே 9 ஆம் திகதி கிரிந்திவெல பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரால் கைவிலங்குடன் பூகொட நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பூகொட நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது, ​​கைவிலங்குகள் தளர்ந்து காணப்பட்டதையடுத்து, அவர் அவற்றைக் கழற்றி விட்டு ஓடியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவ்வாறான கைதியே இபொழுது நீதிமன்றில் சரண் அடைந்துள்ளார்

இலங்கையில் கைதிகள் 50 பேர் தப்பி ஓட்டம்
Posted in இலங்கை செய்திகள்

கைதிகளை பார்வையிட சந்தர்ப்பம்

கைதிகளை பார்வையிட சந்தர்ப்பம்


வெசாக் போயா தினத்தை முன்னிட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை உறவினர்கள் சந்திப்பதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நாளையும், நாளை மறுதினமும் இந்த வாய்ப்பு வழங்கப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, கைதிகளின் உறவினர்களின் மூலம் அவர்களின் வீடுகளில் இருந்து கொண்டு செல்லப்படும் உணவுப்பொதி மற்றும் இனிப்புப் பண்டங்களை ஒருவருக்கு போதுமான அளவில் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது

இலங்கையில் கைதிகள் 50 பேர் தப்பி ஓட்டம்
Posted in இலங்கை செய்திகள்

கைதிகள் 9 பேர் தப்பியோட்டம்

கைதிகள் 9 பேர் தப்பியோட்டம்

பதுளை – தல்தென்ன திறந்தவெளி சிறைச்சாலை புனர்வாழ்வு நிலையத்திலிருந்து இன்று அதிகாலை 9 கைதிகள் தப்பிச்சென்றுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் தப்பிச் சென்ற கைதிகளில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனையோரை கைது செய்வதற்கான தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலை திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க குறிப்பிடுகின்றார்

Posted in இலங்கை செய்திகள்

248 கைதிகளுக்கு கொரனோ

248 கைதிகளுக்கு கொரனோ

இலங்கை சிறைகளில் தடுத்து வைக்க பட்டுள்ள 248 கைதிகளுக்கு கொரனோ

நோயானது தொற்றியுள்ளதாக சிறைச்சாலை நாயகம் தெரிவித்துள்ளார்

இவ்வாறு பாதிக்க பட்டவர்கள் தனிமை படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

கைதிகளை வாரத்தில் 2 நாள் பார்க்க அனுமதி

இலங்கை

கைதிகளை வாரத்தில் 2 நாள் பார்க்க அனுமதி

இலங்கை சிறைகளில் தடுத்து வைக்க பட்டுள்ள கைதிகளை வாரத்தில் இரண்டு நாட்கள்

பார்வையிட விருந்தினர்களுக்கு அனுமதி வழங்க பட்டுள்ளது

இது கைதிகளுக்கு புது மகிழ்வை அளித்துள்ளது

    Posted in Uncategorized

    அமைச்சரின் கால்களை நக்க வைத்து தமிழ் கைதிகள் வதை

    அமைச்சரின் கால்களை நக்க வைத்து தமிழ் கைதிகள் வதை

    இலங்கையின் சிறைச்சாலை அமைச்சர் ரோகன் ரத்வத்த அனுராதபுரம் சிறை சாலைக்கு சென்ற

    பொழுது அங்கு தடுத்து வைக்க பட்டுள்ள தமிழ் கைதிகள் மூலம் அவரது கால் சப்பாத்து நக்கி சுத்த படுத்த பட்டது

    இவ்வாறான கீழ்த்தரமான செயலில் செயல் பட்ட அவருக்கு எதிராக மக்கள் ,மற்றும் தமிழ் எம்பிக்கள் சிலர் கடும் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர்

    மேற்படி சம்பவம் சர்வதேச அரங்கிற்கும் எடுத்து செல்ல பட்டுள்ளது

      Posted in Uncategorized

      சிறையில் இருந்து சித்தி பெற்ற புலிகள் கைதி

      சிறையில் இருந்து சித்தி பெற்ற புலிகள் கைதி

      தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பை சேர்ந்தவர்கள் என்ற சந்தேகத்தின் ​பேரில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களில், பரீட்சைக்குத் தோற்றியவர், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர்.

      2020 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் வட்டரெக்க மற்றும் மெகசின் சிறைச்சாலைகளில் இருந்து நான்கு கைதிகள் சிறைச்சாலைக்குள் அமைக்கப்பட்டிருந்த பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

      இவர்களில் மெகசின் சிறைச்சாலையில் இருந்து பரீட்சையில் தோற்றிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை சேர்ந்தவர் என்ற சந்தேகத்தில் சிறையிலிருக்கும் கைதி ஒருவரும் மற்றுமொரு கைதியும் சிறந்த பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்துள்ளனர் என சிறைச்சாலைகள் திணைக்கள ஊடகப்பேச்சாளரும் சிறைச்சாலைகள் ஆணையாளருமான
      சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

      கைதிகளின் திறமைகள் குறித்து ஆராய்ந்து அவர்களது திறமையை மேம்படுத்தும் நோக்கில் தொழில் பயிற்சி, மத, கல்வி, சமூக ரீதியிலான செயற்பாடுகளை முன்னெடுத்து, அவர்களை சமூகமயப்படுத்தி வருவதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

        Posted in Uncategorized

        தமிழ் கைதிகளை சுட்டு கொல்வேன் – சிறைச்சாலை அமைச்சர் மிரட்டல்

        தமிழ் கைதிகளை சுட்டு கொல்வேன் – சிறைச்சாலை அமைச்சர் மிரட்டல்

        இலங்கை அனுராதபுரம் சிறை சாலையில் தடுத்து வைக்க பட்டுள்ள கைதிகளை தான் சுட்டு கொல்வேன் என சிறைசாலை அமைச்சர் மிரட்டியுள்ளார்

        இவரது இந்த செயல் வெளிப்படுத்தல் கைதிகள் மற்றும் அவர் தம் உறவினர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது

          Posted in இலங்கை செய்திகள்

          சிறை கைதிகள் 19 பேர் கொரானாவுக்கு பலி

          சிறை கைதிகள் 19 பேர் கொரானாவுக்கு பலி

          இலங்கை சிறைகளில் தடுத்து வைக்க பட்டிருந்த கைதிகளில் பத்தொன்பது பேர் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

          குறித்த நோயானது பரவி வரும் நிலையில் ,கைதிகள் பலரை அரசுகள் மன்னித்து விடுதலை

          செய்து இருந்தது ,ஆனால் இலங்கையில் ஆளும் கோட்டா அதனை சையது கொள்ளவில்லை என்பது இங்கே குறிப்பிட தக்கது

            Posted in Uncategorized

            இலங்கையில் கரை ஒதுங்கிய மர்ம உயிரினம்

            இலங்கையில் கரை ஒதுங்கிய மர்ம உயிரினம்

            இலங்கை மொரட்டுவ பகுதியில் கடல் கரையில் மர்ம உயிரினம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது
            டொல்பின் வகையை சேர்ந்த உயிரினமாக உள்ள பொழுதும் ,இது எவ்வகையான உயிரினம் என்பது தொடர்பில் தெரியவரவில்லை

            கடல் சார் ஆய்வாளர்கள் இதனை ஆய்வு செய்து வருகின்றனர்

              Posted in இலங்கை செய்திகள்

              கோட்டா மன்னித்தார் – 240 கைதிகள் விடுதலை

              கோட்டா மன்னித்தார் – 240 கைதிகள் விடுதலை

              இன்று இலங்கையில் வெசாக் தினம் என்பதால் ஆளும் ஜனாதிபதி கோத்தபாயாவின் பொது

              மன்னிப்பின் கீழ் 240 கைதிகள் விடுதலை செய்ய பட்டுள்ளனர்

              பல்வேறு பட்ட குற்ற செயல்களுடன் ஈடுபட்ட நபர்களே இவ்விதம் விடுதலை செய்ய பட்டுள்ளனர்

              என்பது இங்கே குறிப்பிட தக்கது