தமிழ் மக்களை மறந்த வெள்ளை வேட்டிகள்
Posted in இலங்கை செய்திகள்

தமிழ் மக்களை மறந்த வெள்ளை வேட்டிகள்

தமிழ் மக்களை மறந்த வெள்ளை வேட்டிகள்

தமிழ் மக்களை மறந்த வெள்ளை வேட்டிகள் ,அனைவரையும் ஓட ஓட துரத்த வேண்டுமென தற்பொழுது தமிழ் மக்கள் தமது கருத்துக்களை ஆழமாக தெரிவித்து வருகின்றனர்.

தேர்தல் வருகின்ற காலப்பகுதியில் மக்களது வீடுகளை ஏறி வந்து தட்டுகின்ற இவர்கள் தேர்தல் முடிந்தவுடன் டாட்டா காட்டிவிட்டு சென்று விடுகின்றனர்

அரசியல் லஞ்ச ஊழலில் பருத்து கொழுத்துக்கிடக்கும் இந்த வெள்ளை வேட்டிகள் யாவரையும் வேட்டிகளை உருவி ஓட ஓட விரட்டி அடிக்க வேண்டும் என ,கோபத்தோடு அகில உலக தமிழ் மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

தமிழருடைய அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதை விடுத்து, தனிநபர் குடும்ப வருமான சொத்துக்களை அதிகரித்து ,அதனூடாக தங்கள் குடும்பங்களை வளர்த்து வருவதான குற்றச்சாட்டு மக்கள் மத்தியில் முன்வைக்கப்படுகின்றது.

விடுதலைக்காக எழுந்த ஒரு இனம் தனது விடுதலையை தொலைத்து அடிமைக்குள்ளும் அடக்குமுறைக்குள்ளும் சிக்கி வாழ்கின்ற இந்தக் காலப்பகுதியில்,

இவர்கள் தமது மக்களுடைய இனமான விடுதலை மறந்து தனிநபர் வருமானத்தில் கவனம் செலுத்தி வருவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

அர்ஜுனா இராமநாதன் என்ற ஒரு மருத்துவன் தன்னந்தனி ஆளாக நின்று மக்களுக்காக போராடுகின்ற பொழுது,

அவனை ஆதரிக்க மறந்து அவனை அழுத்தி அவனுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபடும் இந்த வெள்ளை வேட்டிகளை ஓட ஓட விரட்ட வேண்டுமென மக்கள் கொதிக்கின்றனர்.

எங்களது அர்ச்சனாவுக்கு ஆதரவு தர மறுத்ததாக காரணமாகவே இந்த வெள்ளை வேட்டிகள் தற்பொழுது மக்கள் மன்றில் விமர்சனத்திற்கு உள்ளாக நிலையிலும் வெறுத்து ஒதுக்கப்படுகின்றவர்களாலும் காணப்படுகின்றனர்.

ஆதலால் இந்த தேர்தலில் அவர்களை ஒதுக்கி விரட்டி அடிக்குமாறு மக்கள் அன்பு கட்டளை வேண்டி இருக்கின்றனர்.

இதனால் அரசியல்வாதிகள் அச்சத்தில் பதறிக் கொண்டிருக்கின்றனர்.

ஒட்டு கேட்க மட்டும் வேலிகளை எட்டி பார்க்கும் வெள்ளை வேட்டிகள்
Posted in இலங்கை செய்திகள்

ஒட்டு கேட்க மட்டும் வேலிகளை எட்டி பார்க்கும் வெள்ளை வேட்டிகள்

ஒட்டு கேட்க மட்டும் வேலிகளை எட்டி பார்க்கும் வெள்ளை வேட்டிகள்

இலங்கையில் இடம்பெறவுள்ள தேர்தலை அடுத்து ,ஒட்டு கேட்க மட்டும் மக்களின் வேலிகளை எட்டி தட்டி பார்க்கும் ,அரசியல் வியாபாரிகளின் கேடுகெட்ட செயல் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

மக்களின் சேவகர் என கூறும் , இந்த அரசியல் வியாபாரிகள் ,தேர்தல் முடிவுற்றதும் காணாமல் போய்விடுகின்றனர் .

ஒட்டு கேட்க மட்டும் வேலிகளை எட்டி பார்க்கும் வெள்ளை வேட்டிகள்


தேர்தல் வரும் பொழுது பிரபாகரனும் ,புலிகளும் மீளவும் உயிர்ப்பிக்க பட்டு
மேடைகளில் புலிகளின் பரப்புரைகள் அவர் தம் பாடல்கள் ஒளிபரப்ப பட்டு ,புலிகளாக மாற்றம் பெறுகின்றனர் .

தேர்தலில் வென்றிட புலிகளை தேடும் இந்த அரசியல் கோமாளிகள் ,தேர்தல் முடிந்ததும் ,புலிகள் மற்றும் ,மக்களை மறந்து விடுவது தொடரத்தான் செய்கிறது .

இவர்களை இவ்வேளை விரட்டியடிக்க வேண்டியது மக்கள் பொறுப்பாகும் .

No posts found.