Tag: வீடொன்றில்
Posted in இலங்கை செய்திகள்
வீடொன்றில் கொள்ளையிட்டு தப்பிச் சென்ற கும்பல் சிக்கியது
Author: நிருபர் காவலன் Published Date: 12/04/2024
வீடொன்றில் கொள்ளையிட்டு தப்பிச் சென்ற கும்பல் சிக்கியது
இரவு வேளையில் வீட்டினுள் நுழைந்த குழுவொன்று வீட்டில் இருந்த பெண்ணை அச்சுறுத்தி பணம் மற்றும் சொத்துக்களை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் ஒன்று அலவாகும்புர பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
சம்பவத்தின் போது வீட்டின் உரிமையாளரின் மனைவி மட்டும் அங்கிருந்த நிலையில் கொள்ளையர்கள் அவரை தாக்கி அச்சுறுத்தி கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த 10ஆம் திகதி வெள்ளை நிற வேனில் வந்த சந்தேகநபர்கள் மற்றும் பெண் சந்தேகநபர் ஒருவரே இந்தக் கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்டுள்ளனர்.
பின்னர், மஹியங்கனை பொலிஸார் சந்தேக நபர்களை வீதித்தடையில் வைத்து சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
அதன்படி, தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கொள்ளை சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.













