விசேட சோதனை 13பெண்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

விசேட சோதனை 13பெண்கள் கைது

விசேட சோதனை 13பெண்கள் கைது

விசேட சோதனை 13பெண்கள் கைது ,காலி நகரின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 24 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது மஹாமோதர பகுதியில் சட்டவிரோத சூதாட்ட நிலையத்தை சுற்றிவளைத்த பொலிஸார், அங்கிருந்த 13 பெண்களையும் கைது செய்துள்ளனர்.

முச்சக்கர வண்டிகளும் திடீர் சோதனை

நேற்று (26) முன்னெடுக்கப்பட்ட இந்த விசோட சோதனை நடவடிக்கையின் போது முச்சக்கர வண்டிகளும் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

போக்குவரத்து விதி மீறல்

இதன்போது போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவருக்கும், போக்குவரத்து விதி மீறல் தொடர்பில் சில சாரதிகளுக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் நோக்கில் காலிக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரின் நேரடி மேற்பார்வையின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது

விசேட சோதனை 120பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

விசேட சோதனை 120பேர் கைது

விசேட சோதனை 120பேர் கைது

விசேட சோதனை 120பேர் கைது ,சப்ரகமுவ மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 120 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கேகாலை மற்றும் இரத்தினபுரி பொலிஸ்

எம்பிலிப்பிட்டிய, சீதாவகபுர, கேகாலை மற்றும் இரத்தினபுரி பொலிஸ் பிரிவுகளை உள்ளடக்கி இந்த விசேட சோதனை நடவடிக்கை நேற்று (6) முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 7 பேரும், மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் 19 பேரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த விசேட சோதனை நடவடிக்கையில் பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் உட்பட 900இற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.