Tag: லண்டன் இலங்கை தூதரகம்
லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக தமிழர்கள் போராட்டம் வீடியோ
லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக தமிழர்கள் போராட்டம் வீடியோ
நேற்று 08-11-2022 லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக தமிழர் எதிர்ப்பு கண்டன போராட்டம் நடத்தினர் .
உள்ளூர் நேரம் மதியம் ஒரு மணி முதல் மூன்று மணி வரை இந்த, கண்டன எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது .
இந்த போராட்டத்தின் பொழுது ,பயங்கர வாத தடை சட்டம் நீக்க பட வேண்டும் ,
சூத்து மாத்து ரணில் விக்கிரமசிங்கா அரசியல் அகற்ற பட வேண்டும் ,அணைத்து அரசியல் கைதிகள் விடுதலை செய்ய பட வேண்டும் ,என்ற முக்கிய அம்ச கோரிக்கையை மையமாக வைத்து, இந்த அறவழி போராட்டம் இடம் பெற்றுள்ளது .
லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக இடம்பெற்ற போராட்டத்தை ,
தமிழருக்கான சுதந்திர வேட்டை என்கின்ற அமைப்பினர் தலைமை ஏற்று நடத்தினர் .
இலங்கை அரசாங்கம் பயங்கரவாத அரசாங்கம்
இலங்கை இராணுவம் பயங்கரவாத இராணுவம் என்கின்ற கொட்டு முரசுகள் ,கொட்டும் மழைக்குள்ளும் மக்கள் கோஷமாக முழங்கினர் .
இலங்கை ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா ,இலங்கை தமிழ் இன படுகொலையாளிகளான, ராஜபக்ச குடும்பத்தை அடைகாத்த படி ,நரி தந்திர அரசியலை நடத்திய வண்ணம் உள்ளார் .
அப்பாவி மக்கள் விடுதலை மற்றும் ,அவர்கள் வாழ்வாதார நெருக்கடிகள் தொடர்பாக எவற்றிலும் அக்கறை செலுத்தவில்லை .
தொடர்ந்து நாள் தோறும் மர்ம கொலைகள் இலங்கையை உலுப்பிய வண்ணம் உள்ளன .
நாள் தோறும் பற்றைகள் ,நீர் நிலைகளில் ,நான்கிற்கு மேற்பட்ட மனித சடலங்கள் மீட்க பட்ட வண்ணம் உள்ளது .கடத்த பட்டு காணாமல் போனவர்களே இவ்வாறு சடலங்களாக மீட்க பட்ட வண்ணம் உள்ளனர் .
இந்த கொலைகளின் பின்னால் , முன்னாள் ஜனாதிபதி கோட்டாபாயவின், நிழல் டிவிசன் இராணுவ அணியின் செயல் படுகின்றனர்,
என்கின்ற குற்ற சாட்டு, பலமாக வைக்க பட்டு வருகின்றமை இங்கே கவனிக்க தக்கது .


















லண்டன் போராட்டங்கள் யாவும் இதில் அழுத்தி பார்க்கலாம்
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி

- இந்திய பிரதி ஜனாதிபதி சி. பி. ராதாகிருஷ்ணன் இலங்கை பயணம் மேற்கொள்கிறார்

- ஒன்பது சீன இணையக் குற்றவாளிகள் கைது

- பண்டிகைக் காலத்தில் 400-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை

- தனியார் பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள் மீள் இயக்கம்

- பயணிகளுக்கு அமெரிக்கத் தூதரகம் எச்சரிக்கை

லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக தமிழர்கள் போராட்டம் – படம் உள்ளே
லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக தமிழர்கள் போராட்டம் – படம் உள்ளே
இன்று 04-05-2021 மதியம் லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் முன்பாக தமிழர்கள் அறவழி போராட்டத்தை நடத்தினர் ,
இலங்கை அரசு புரிந்த மனித குலத்துக்கு எதிரான வன்முறைகள் ,இனப் படுகொலை, புலிகளின் பெயரால் கைது செய்ய பட்ட அப்பாவி மக்களை விடுதலை செய்ய கோரியும் ,தமிழர்களை
துன்புறுத்தலுக்கு உள்ளாக்க வேண்டாம் என கோரியும் ,பாதிக்க பட்ட மக்களுக்கு தீர்வினை வேண்டியும் இந்த போராட்டம் முன்னெடுக்க பட்டுள்ளது
இந்த நிகழ்வு சமகால கொரனோ விதிகளை பின்பற்றி ,காவல்துறையினர் பலத்த பாதுகாப்பு வழங்க அமைதி வழியில் நடத்த பட்டுள்ளது ,
எனினும் சிங்கள அரச மற்றும் உளவுத்துறை அதிகாரிகளினால் அந்த நிகழ்வில் கலந்து கொண்ட மக்களை காணொளி ,மற்றும் புகைப்படங்கள் பிடிக்க பட்டுள்ளன
இவ்வாறு பிடிக்க பட்ட காட்சிகளினால் அங்கு கலந்து கொண்ட மக்களுக்கு உயிர் ஆபத்து ஏற்படலாம் என அஞ்ச படுகிறது
இங்கே கலந்து கொண்ட மக்களை கழுத்து வெட்டுவேன் என இராணுவ தளபதி ஒருவர் முன்னர் தெரிவித்து
அவை லண்டன் நீதிமன்றில் விசாரணைகள் இடம்பெற்று வந்தத நிலையில் ,அவ்விதம் இவர்களை படம் பிடித்தவர்கள் துன்புறுத்தலுக்கு ஆளக்க நேரிடும் என்பது இயல்பாகிறது
தமிழர்களை கொன்று குவித்த சகோதர்கள் ஆட்சி இலங்கையில் இடம் பெற்று வரும் நிலையில் சொல்லென்னா அடக்குமுறைகளுக்கு தமிழர்கள் உள்ளாகி வருகின்ற நிலையில் இந்த போராட்டம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது













