Tag: யாழில் வீட்டின் மீது குண்டு
Posted in இலங்கை செய்திகள்
யாழில் வீட்டின் மீது குண்டு தாக்குதல் – கார் சேதம்
Author: நலன் விரும்பி Published Date: 18/07/2020 Leave a Comment on யாழில் வீட்டின் மீது குண்டு தாக்குதல் – கார் சேதம்
யாழில் வீட்டின் மீது குண்டு தாக்குதல் – கார் சேதம்
யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்று (17)
மாலை பெட்றோல் குண்டு தாக்குதல் வீச்சு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம்
நாவலர் வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இனம் தெரியாத மர்ம கும்பல்
ஒன்று பெற்றோல் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த தாக்குதலில் வீட்டில் தரித்து நின்ற காரிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் வீட்டின் சில பகுதிகளும் சேதமடைந்துள்ளன.
இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்







