Tag: யாழில் -முன்னாள் பெண்
யாழில் -முன்னாள் பெண் போராளிக்கு வீடு கட்டி கொடுக்கும் இராணுவம்
யாழில் -முன்னாள் பெண் போராளிக்கு வீடு கட்டி கொடுக்கும் இராணுவம்
யாழ் வல்லிபுர பகுதியில், சர்வதேசத்தினால் தடைசெய்யப்பட்ட டுவுவுநு பயங்கரவாத அமைப்பின் மாலதி படைப் பிரிவின்
முன்னாள் போராளிக்கு யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகம் புதிய வீட்டை நிர்மாணிப்பதற்கு உதவியுள்ளது
யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரியவின் வழிக்காட்டலின் கீழ் நன்கொடையாளரான திரு
குமார வீரசூரியவின் நன்கொடை நிதியுதவியுடன் இந்த வீட்டின் நிர்மாண பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
முன்னாள் பெண் போராளியான திருமதி சிவரஞ்சன் நந்தனிக்கு வசிப்பதற்கு வீடில்லா குறையை அவதானித்து இவருக்கு உதவும்
முகமாக இராணுவத்தினரால் இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
55 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சம்பத் கொட்டுவேஹொடவின் வழிக்காட்டலின் கீழ் 551 ஆவது படைத்
தலைமையகத்தின் கண்காணிப்பின் கீழ் 16 ஆவது டுiபாவ ஐகெயவெசல (ளுடுடுஐ) காலாட் படையணியினால் இந்த வீட்டை அமைப்பதற்கான நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இம்மாதம் (20) ஆம் திகதி யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய மற்றும் நன்கொடையாளரான திரு
குமார வீரசூரிய ஆகியோரின் பங்களிப்புடன் இந்த புதிய வீட்டை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் இராணுவ அதிகாரிகள் படையினர்கள் மற்றும் பொது மக்கள் கலந்துகொண்டனர்.







