முன்னாள் போராளிகள் அவலம்
Posted in இலங்கை செய்திகள் கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

முன்னாள் போராளிகள் அவலம்

முன்னாள் போராளிகள் அவலம்

உருக்கமான காட்சியதை
உருகி இதை பார்க்கையில
நெஞ்சு கனக்கிறது
நேயம் இன்னும் இருக்கிறது

வழித்தடத்தை மறந்தவர்கள்
வார்த்தைகளை எறிகையில
குருதி சிந்தியவர்கள்
குமுறத்தான் செய்கின்றனர்

இன்று பிறந்தார்க்கு
இவை ஏதும் தெரியாது
இவர்கள் மனக்குமுறல்
இதயங்கள் புரியாது

தேசம் வீழ்ந்ததால்
தேகங்கள் காய்கின்றன
ஆக்க பிறந்தவன்
அவை களம் வீழ்ந்ததால்

காக்க பிறந்தவர்கள்
காயங்கள் சுமக்கின்றன
கண்ணீரால் வாழ்வு
கரைந்து காய்கின்றன .

ஆக்கம் 03-07-2024
வன்னி மைந்தன் ( ஜெகன் )

இந்த குறும் படம் பாருங்கள் மக்களே