Tag: மாலதி
விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக மாலதி பரசுராமன் நியமனம்
விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக மாலதி பரசுராமன் நியமனம்
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவினால் விவசாய திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமாக மாலதி பரசுராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை (02)) திகதி தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்ட இவர், வரலாற்றில்
முதன்முதலாக நியமிக்கப்பட்ட தமிழ் பெண் விவசாய ஆர்வலராக மாலதி பரசுராமன் பதிவாகியுள்ளதாக விவசாய அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விவசாய அமைச்சின் விவசாய தொழில்நுட்ப பிரிவின் மேலதிக செயலாளராக அவர் இதற்கு முன்னர் கடமையாற்றினார்.
கண்ணொருவ விவசாய ஆராய்ச்சி மையத்தில் A9 ரகம், HOB-2 எனும் முதலாவது போஞ்சி மரபணு ஆராய்ச்சியை அறிமுகப்படுத்தியமை, புதிய
கலப்பின கறி மிளகாய் வகையான “பிரார்த்தனா”வை அறிமுகப்படுத்தியமை போன்ற பல ஆராய்ச்சிகளை மாலதி பரசுராமன் மேற்கொண்டதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
இவர் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆரையம்ப,
பிரதேசத்தைச் சேர்ந்த பரசுராமன் மாலதி பிறப்பிடமாகக் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியில் நடைபெற்ற மாலதியின் 34 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு! photo
கிளிநொச்சியில் நடைபெற்ற மாலதியின் 34 ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வு!
தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தில் வித்தாகிப்போன முதலாவது பெண் மாவீரர் மாலதி அவர்களின் 34 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் கிளிநொச்சியில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்கள் ஈகச்சுடரினை ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.
நினைவேந்தலை தடுக்கும் நோக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அவர்களின் காரியாலயத்திற்கு முன்பாக இராணுவத்தினரும் பொலிசாரும் குவிக்கப்பட்டுள்ளதுடன்
இராணுவத்தினரால் நாடாளுமன்ற உறுப்பினரின் காரியாலயம் அமைந்திருக்கும் வீதியின் நுழைவாயிலில் இராணுவத்தடை அமைத்து அவ்வீதியால் செல்பவர்களுக்கு தடைகளை ஏற்படுத்தினர்..











