Tag: மணவை
மாணவிகளை தொந்தரவு செய்தால் நடவடிக்கை
மாணவிகளை தொந்தரவு செய்தால் நடவடிக்கை
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிரதேசங்களில் பாடசாலை செல்லும் மாணவிகளை தொந்தரவு செய்பவர்களை கைது செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயலத்தின் ஆலோசனைக்கமைய பொலிஸ் நிலைய போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி விஜயவர்த்தன தலைமையிலான விசேட பொலிஸ் குழுக்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பெண் பிள்ளைகள் கல்வி கற்கும் பாடசாலைகள் ஆரம்பமாகும் மற்றும் முடிவடையும் நேரங்களில் இளைஞர்கள் மோட்டார் சைக்கிளில் மாணவிகளுக்குப் பின்னால் கூட்டமாகச் சென்று தொந்தரவு செய்வதோடு, அலைபேசியில் புகைப்படம் எடுப்பதாகவும் பெற்றோர் முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.
மாணவிகளை தொந்தரவு செய்தால் நடவடிக்கை
பெண் பாடசாலைகள் அமையப் பெற்றுள்ள பிரதேசங்களில் குறிப்பாக உள் வீதிகளில், பாடசாலை ஆரம்பிக்கும் முடியும் நேரங்களில் விசேட போக்குவரத்து பொலிஸாரை சிவில் உடையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இளைஞர்கள் போக்குவரத்து நடைமுறைகளை மீறி உள் வீதிகளில் மோட்டார் சைக்கிள் செலுத்துபவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
- ஈஸ்டர் ஞாயிறு அன்று தற்கொலைத் தாக்குதல்
- லஞ்சம் வாங்கிய காவலர் கைது
- இரண்டு பெண்கள் மோசடி ரவி கருணநாயக்க
- சபாநாயகர் நாடாளுமன்ற உறுப்பினர் ரசமாணிக்கத்திற்கு எச்சரிக்கை
- பேருந்து நிலைய சேதம் திட்டமிட்ட நடவடிக்கை
- 606 பில்லியன் வருவாய் அடித்து விடும் ஜேவிபி பயங்கரவாத அரசு
- சர்வதேச நாணய நிதியத்தின் சீர்திருத்தங்கள்
- பல்லேகெலேயில் திடீர் கனமழையால் பல மரங்கள் விழுந்தன
- சர்வதேச நாணய நிதியத்திடம் 700 மில்லியன் கடன் பிச்சை வாங்கும் அனுரா அரசு
- தேசிய வளர்ச்சி வங்கியில் (NDB) நிதி மோசடி பலர் கைது
- லக்விஜய நிலக்கரி ஒப்பந்தம் குறித்து சிஐடி விசாரணை
- 15 மாதங்களில் கொழும்பு கோட்டை இரயில் நிலையம் இவ்வாறு காட்சி



















