Skip to content
  • HOME
  • இலங்கை
  • உலக செய்திகள்
    • ஈரான் செய்திகள் ஈரான் நியூஸ்
    • உளவு செய்திகள்
    • அர்ச்சுனா News
    • ரஷ்யா
    • உக்ரைன்
    • கனடா செய்திகள்
    • பிரான்ஸ் செய்திகள்
    • பிரித்தானிய செய்தி
    • குற்ற செய்திகள்
    • இஸ்ரேல் பாலஸ்தீன செய்திகள்
  • கவிதைகள்
    • நிலா தமிழ்
    • பிறேமா(எழில்)
    • வன்னி மைந்தன் கவிதைகள்
  • இணைய தளங்கள்
  • Live News
  • சமையல்
  • பங்கு சந்தை
  • சீமான் பேச்சு

Tag: பொலிஸார் இடைநிறுத்தம்

குற்றச் செயலில் ஈடுபட்ட 5 பொலிஸார் இடைநிறுத்தம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு - திருகோணமலை மாவட்டங்களில் பொலிஸார் ஒழுக்கம் தவறி மேற்கொண்ட குற்றச் செயல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பொலிஸார் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இன்று (23) பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார். மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த இரு பொலிஸாருக்கிடையே கடந்த 6 ஆம் திகதி மாலை ஏற்பட்ட கைகலப்பில் கல்லால் தாக்கிய சம்பவத்தில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்ததையடுத்து தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்த பின் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 11 ஆம் திகதி ஏறாவூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மட்டக்களப்பு நகரில் வேலைபார்த்து வரும் கடையில் வேலை முடித்து கொண்டு இரவு 11 மணிக்கு நடந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த இளைஞனை முச்சக்கரவண்டியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 பொலிஸார் இளைஞனை நிறுத்தி அச்சுறுத்தி அவரிடம் இருந்து 6,500 ரூபாவை பறித்தெடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 3 பொலிஸாரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 3 பேரையும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டனர். அதேவேளை கடந்த 20 ஆம் திகதி கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையற்றி வந்த அதேபிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 150,000 ரூபா பெறுமதியான மாடு ஒன்றை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையில் அவரும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார். இவ்வாறு குற்றச் செயல் காரணமாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 15 நாட்களில் 5 பொலிஸார் கைது செய்யப்பட்டு பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.
Posted in இலங்கை செய்திகள்

குற்றச் செயலில் ஈடுபட்ட 5 பொலிஸார் இடைநிறுத்தம்

Author: நிருபர் காவலன் Published Date: 23/08/2023

,

Continue Reading... குற்றச் செயலில் ஈடுபட்ட 5 பொலிஸார் இடைநிறுத்தம்

சீமான் பேச்சு NAAM TAMILAR

Featured

சீமான் செய்தியாளர் சந்திப்பு

சீமான் செய்தியாளர் சந்திப்பு

நிருபரை அதிர வைத்த சீமான்

நிருபரை அதிர வைத்த சீமான்

வேல்முருகன் ஆரம்பித்ததை சீமான் முடித்து வைக்கிறேன்

வேல்முருகன் ஆரம்பித்ததை சீமான் முடித்து வைக்கிறேன்

பங்கு சந்தை forex trade

பங்குசந்தையில் பணம் சம்பாதிக்க இலகு முறை
பங்குசந்தையில் பணம் சம்பாதிக்க இலகு முறை
தங்கத்தின் இன்றய சிக்கினல்
தங்கத்தின் இன்றய சிக்கினல்
  • 1
  • 2
  • 3
  • …
  • 10
  • ›
Loading...

கவிதைகள் poem

Featured

என்னவனே

என்னவனே

நட பிணமாய் இன்றும்

நட பிணமாய் இன்றும்

முள்ளிவாய்க்கால் புதிய பாடல் வெளியீடு

முள்ளிவாய்க்கால் புதிய பாடல் வெளியீடு

கவலைப் படுகிறேன்

கவலைப் படுகிறேன்

ethiri.com

Design by ethiri.com

error: Content is protected !!