Tag: புரெவி சூறாவளி
Posted in இலங்கை செய்திகள்
புரெவி சூறாவளி அனர்த்தம்: 4007 பேர் இடம்பெயர்வு – 185 வீடுகள் சேதம்
Author: நலன் விரும்பி Published Date: 04/12/2020 Leave a Comment on புரெவி சூறாவளி அனர்த்தம்: 4007 பேர் இடம்பெயர்வு – 185 வீடுகள் சேதம்
புரெவி சூறாவளி அனர்த்தம்: 4007 பேர் இடம்பெயர்வு – 185 வீடுகள் சேதம்
ரெவி சூறாவளி காரணமாக ஏற்பட்ட சீரற்ற காலநிலைக்கு மத்தியில்
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் 4007 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் பாதுகாப்பான மத்திய நிலையங்களில் இருப்பதாக இடர் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ஷ இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
நாடு முழுவதிலும் 15 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. 170 வீடுகள் ஓரளவிற்கு சேதமடைந்துள்ளதாக அமைச்சர் கூறினார்.
நேற்று நாட்டுக்குள் நுழைந்த புரெவி சூறாவளியை தொடர்ந்து
தற்பொழுது உள்ள நிலைமை தொடர்பாக அவர் இன்று பாராளுமன்றத்தில் தெரிவிக்கையில் இந்த விடயங்களை தெரிவித்தார்.






