புத்தளம் கொழும்பு வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம்
Posted in இலங்கை செய்திகள்

புத்தளம் கொழும்பு வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம்

புத்தளம் கொழும்பு வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம்

புத்தளம் கொழும்பு வழித்தடத்தில் இயங்கும் தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ,புத்தளம் மற்றும் கொழும்புக்கு இடையே இயங்கும் சாதாரண மற்றும் சொகுசு சேவைகள் உள்ளிட்ட தனியார் பேருந்துகள் இன்று காலை (27) முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

பேருந்து ஊழியர்கள்

கொழும்பு–புத்தளம் வழித்தடத்தில் இயங்கும் நெடுந்தூரப் பேருந்து ஊழியர்கள் மீது தொடர்ச்சியாக நடத்தப்பட்டதாகக் கூறப்படும்

தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த வேலைநிறுத்தம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதல்கள் நடந்தபோதிலும், காவல்துறையோ அல்லது தேசியப் போக்குவரத்து ஆணையமோ (NTC) எந்த

நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

சிலவ் மற்றும் முண்டலம பகுதிகளில் ஜூலை 20, 24, 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இந்தச் சம்பவங்கள் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயங்களுக்கு சிகிச்சை

பாதிக்கப்பட்ட பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, நீதி வழங்கப்படும் வரை வேலைநிறுத்தத்தைத் தொடரப்போவதாகப் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

புத்தளம் விபத்தில் பெண் ஒருவர் பலி

புத்தளம் விபத்தில் பெண் ஒருவர் பலி

புத்தளம் – கொட்டுக்கச்சிய , கல்லகுளம் பகுதியில் நேற்று (22) இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் மூவர் பலத்த காயங்களுடன் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லொறியொன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஆனமடுவ, வேம்புவெவ பகுதியைச் சேர்ந்த ஆர்.எம்.குசுமலதா மல்காந்தி (வயது 43) எனும் மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார் என புத்தளம் தலைமையக பொலிஸார் குறிப்பிட்டனர்.

புத்தளம் தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தனது தந்தையை பார்ப்பதற்காக குறித்த தாய் தனது மூன்று பிள்ளைகளுடன் வருகை தந்த பின், ஆனமடுவ வேம்புவெவ கிராமத்திற்கு திரும்பிக் கொண்டிருந்த போது ஆனமடுவையில் இருந்து வந்த தனியார் வர்த்தக நிறுவனமொன்றுக்கு சொந்தமான லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

புத்தளம் விபத்தில் பெண் ஒருவர் பலி

இந்த விபத்தில் மூன்று பிள்ளைகளின் தாய் ஸ்தலத்திலேயே உயிரிழந்ததாகவும், மோட்டார் சைக்கிளில் தாயுடன் பயணித்த இரண்டு பிள்ளைகள் பலத்த காயங்களுக்கு உள்ளாகியாதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த விபத்தின் போது வீதியில் கவிழ்ந்ததில் அந்த லொறியின் சாரதியும் படுகாயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

எனினும், மோட்டார் சைக்கிளில் போதிய இடவசதி இல்லாத காரணத்தினால், மோட்டார் சைக்கிளில் வருகை தந்த , தான் புத்தளத்திலிருந்து ஆனமடுவைக்கு பஸ்ஸில் சென்றதாக உயிரிழந்த பெண்ணுடன் வைத்தியசாலைக்கு வந்த மற்றுமொரு மகள் தெரிவித்துள்ளார்.