Tag: பிச்சைக்காரன்
பிச்சைக்காரன் மீது பெற்றோலை ஊற்றி, தீமூட்டியவர் கைது
பிச்சைக்காரன் மீது பெற்றோலை ஊற்றி, தீமூட்டியவர் கைது
உறங்கிக்கொண்டிருந்த பிச்சைக்காரன் மீது பெற்றோலை ஊற்றி, தீமூட்டி கொளுத்தினார் என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவரை கைது செய்துள்ளதாக ஹோமகம பொலிஸார் தெரிவித்தனர்.
ஹோமாகம ஆதார வைத்தியசாலையின் ஆய்வுகூடத்துக்கு முன்பாக உறங்கிக்கொண்டிருந்த பிச்சைக்காரன் மீதே, சந்தேகநபர் மேற்கண்டவாறு செய்துள்ளார்.
மரணமடைந்த அந்த பிச்சைக்காரன், அந்த ஆய்வுகூடத்துக்கு முன்பாக உறங்கிக்கொண்டிருந்த பல சந்தர்ப்பங்களில் “நீ குளிக்கமாட்டீர் இல்லையா?
பிச்சைக்காரன் மீது பெற்றோலை ஊற்றி, தீமூட்டியவர் கைது
குளிக்காவிட்டால் தீ வைப்பேன்” என பலமுறை அந்த சந்தேநபர் கூறியுள்ளார். அதேபோல, ஞாயிற்றுக்கிழமை (29) இரவு பெற்றோலை ஊற்றி கொளுத்திவிட்டார்.
விபரீதத்தை கண்ட அங்கிருந்தவர்கள், பிச்சைக்காரனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்தனர். அவ்வாறு அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்தவர் திங்கட்கிழமை (30) காலை மரணமடைந்தார்.
64 வயதான தர்மதாஸ என்பவரே மரணமடைந்துள்ளார். சந்தேகத்தின் பேரில் 27 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- தென்மேற்குப் பருவமழை தீவு முழுவதும் கனமழை
- திருட்டு இலங்கை காவல்துறைக்கு உதவும் ஆஸ்திரேலிய
- இலங்கையின் தேன் தொழில் கடுமையான பற்றாக்குறை
- சரண குணவர்தன ஊழல் வழக்குகளில் தீர்ப்பு ஒத்திவைப்பு
- ஊவா மாகாணத்தில் குழந்தை துஷ்பிரயோகம் அதிகரிப்பு
- காணிகளை வாங்கி குவிக்கும் மக்கள்
- விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது
- கொலை வழக்கில் ஐவருக்கு மரண தண்டனை
- சிறுவர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
- வெசாக் பண்டிகைக் காலத்தில் மூளைக்காய்ச்சல் பாதிப்புகள் அதிகரிப்பு

















