Posted in இலங்கை செய்திகள்

பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக படகில் வந்த MP

பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக படகில் வந்த MP

9 ஆவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று ஆரம்பமானது. புதிய பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு

செய்யப்பட்டுள்ள கோட்டே நகரசபையின் முன்னாள் நகர முதல்வரான மதுர விதானகே சபை அமர்வில்

கலந்துகொள்வதற்காக படகில் வருகை தந்திருந்தமை விசேட அம்சமாகும்.

ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைவாக தியவன்ன ஓயா அபிவிருத்தி

செய்யப்பட்டமையினால் இன்றைய தினம் பாராளுமன்றத்துக்கு படகில் வரமுடிந்ததாக அவர் தெரிவித்தார்.

கொழும்பு நகர வீதிகளில் வாகன நெரிசலை குறைப்பதற்காக நீர் ஓடைகள்

மூலம் போக்குவரத்து செய்வதில் பொது மக்களை ஊக்குவிப்பதற்காக

நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்தார்.

பாராளுமன்ற அமர்வில்
பாராளுமன்ற அமர்வில்